Wednesday 17 September 2014

தேசியத் திறனறித் தேர்வு - மதிப்பெண்களை வைத்தா குழந்தைகளை மதிப்பிடுவது?

தமிழ்நாடு தொடக்கப் பள்ளி ஆசிரியர் கூட்டணி - திருமருகல்


     ஏப்ரல் மாதம் நடந்த வருடாந்திர தேசியத் திறனறித் தேர்வுகளின் முடிவுகளைஜப்பான் கல்வி அமைச்சகம் பொதுப்பார்வைக்கு வெளியிட்டிருக்கிறது. 2007 முதல்நடத்தப்படும் இந்தத் தேர்வுகள்ஆறாம் வகுப்பு வரையிலான மாணவர்கள்மற்றும் உயர்நிலைப் பள்ளி மாணவர்களின் ஜப்பானிய மொழியறிவுகணிதம்,அறிவியல் மற்றும் பொது அறிவைச் சோதிப்பதற்காக நடத்தப்படுகின்றன.

         அரசுப் பள்ளிகளின் சராசரி தேர்ச்சி விகிதத்தைபொதுப்பார்வைக்குவெளியிடுவது என்ற கல்வி அமைச்சகத்தின் முடிவு பிரச்சினைக்கு உரியது.இதுபோன்ற நடவடிக்கைகள் பள்ளிகளிடையே போட்டி மனப்பான்மையைஉருவாக்கிவிடும்ஏனெனில்கல்வி அமைச்சகத்தின் முடிவின்படிஇந்தப்பள்ளிகள் தேர்வு முடிவுகளை மட்டுமல்லஅம்முடிவுகள் தொடர்பானஆய்வறிக்கையையும்மாணவர்களின் மதிப்பெண்களை அதிகரிப்பது தொடர்பாகஅவர்கள் எடுக்கும் நடவடிக்கையையும் வெளியிட வேண்டிய அவசியம்ஏற்பட்டிருக்கிறது.
 
              பிரச்சினை என்னவென்றால்இதுபோன்ற நடவடிக்கைகளால்அதிக மதிப்பெண் பெற வேண்டும் என்று பெற்றோர்கள் முதல் உள்ளூர் நிர்வாகஅதிகாரிகள் வரை அனைவரும் மாணவர்களுக்கு அழுத்தம் கொடுக்கத்தொடங்கிவிடுவார்கள்இது பள்ளிக் கல்வி என்பதன் நோக்கத்தைக் குறுகலானஒன்றாக மாற்றிவிடும்அவர்கள் ஒரு விஷயத்தை நினைவில் கொள்ளவேண்டும்திறனறித் தேர்வுகளின் முடிவுகளை மட்டும் வைத்து குழந்தைகளின்மொத்தத் திறனையும் மதிப்பிட்டுவிட முடியாது.

                     ஒரு ஆய்வறிக்கையின்படிமுக்கியமான பள்ளிகள்திறனறித்தேர்வில் தங்கள் மாணவர்கள் பெற்ற மதிப்பெண்களை வெளியிடுவதைவிரும்பவில்லைஅப்படிச் செய்வதால் ஏற்படும் பாதகமான விளைவுகளைக்கல்வியாளர்களும் உணர்ந்திருக்கின்றனர்.

                      உண்மையில்மாணவர்களின் கற்றல்ஒட்டுமொத்த திறன் வளர்ச்சிசுயசிந்தனைபிறருடன் ஒத்துழைப்புடன் நடந்துகொள்வது உள்ளிட்ட விஷயங்களில்அவர்களுக்கு ஊக்கமளிக்கும் வகையில் ஆசிரியர்கள் நடந்துகொள்ள வேண்டுமேதவிரமாணவர்களுக்கு மனஅழுத்தத்தைத் தருபவர்களாக இருந்துவிடக் கூடாது.

No comments:

Post a Comment