Thursday 4 September 2014

கல்விக்கொள்கையில் மாற்றம் செய்ய அரசு முடிவு


       தேசிய கல்விக்கொள்கையில் மாற்றம் செய்ய மத்திய அரசு முடிவு செய்துள்ளதாக கூறப்படுகிறது.
 
     இது தொடர்பாக தொழில்நுட்பம் மற்றும் கணிதத்துறையில் எதிர்காலத்தில் திறமையான மாணவர்கள் உருவாகும் வகையில் திட்டங்கள் தீட்டுவது தொடர்பாக ஐ.ஐ.டி., நிறுவனங்களுடன் ஆலோசனை நடத்த உள்ளதாகவும் கூறப்படுகிறது. மேலும் இந்த புதிய கொள்கையில், மாணவர்களின் வருகைப்பதிவேடு மற்றும் ஆசிரியர்கள் வருகை குறித்து அறிய முடியும் எனவும், மாணவர்களின் வீட்டுப்பாடம் குறித்து குறுஞ்செய்தி அனுப்பும் வகையில் மாற்றம் செய்ய திட்டமிடப்பட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது.

No comments:

Post a Comment