Wednesday 17 September 2014

அரசுப் பள்ளிகளின் திறம்

தமிழ்நாடு தொடக்கப் பள்ளி ஆசிரியர் கூட்டணி - திருமருகல்


          பல பெற்றோர்கள், தங்களின் குழந்தைகளை தனியார் பள்ளிகளில் சேர்க்க விரும்பினாலும், அரசுப் பள்ளிகள், தனியார் பள்ளிகளுக்கு கடும் போட்டியைத் தருபவையாக உள்ளன. அரசுப் பள்ளிகள், தங்களின் தரத்தை சிறிதுசிறிதாக உயர்த்தி வருகின்றன என்று கல்வியாளர்கள் ஒப்புக் கொள்கிறார்கள்.

             தமிழகத்தைப் பொறுத்தவரை, 80% அரசுப் பள்ளிகள், தங்களை மேம்படுத்திக் கொள்ளும் வகையில், அத்தியாவசிய நடைமுறைகளைப் பின்பற்றுகின்றன என்றும் அவர்கள் கூறுகிறார்கள்.

             மத்திய மனிதவள அமைச்சகத்தின் கணக்குப்படி, மத்திய, மாநில மற்றும் உள்ளாட்சி நிர்வாகங்களால், நாட்டில் மொத்தம் 2 லட்சம் பள்ளிகள் வரை நடத்தப்படுகின்றன என்று தெரிவிக்கப்படுகிறது

No comments:

Post a Comment