Thursday 15 August 2019

School education department

தமிழ்நாடு தொடக்கப் பள்ளி ஆசிரியர் கூட்டணி - திருமருகல்

School Education Department - Org Structure

School Education DepartmentDirectorate of School EducationDirectorate of Elementary EducationDirectorate of Matriculation SchoolsState Council of Education Research and TrainingDirectorate of Government ExaminationsDirectorate of Public LibrariesDirectorate of Non-Formal & Adult EducationSamagra ShikshaTeachers Recruitment BoardTamilnadu TextBook & Educational Services Corporation

காலை வழிபாடு மற்றும் செயல்பாடுகள்- 16-08-2019

தமிழ்நாடு தொடக்கப் பள்ளி ஆசிரியர் கூட்டணி - திருமருகல்
*இன்றைய திருக்குறள்*

*குறள்- 687*

கடனறிந்து காலங் கருதி இடனறிந்து
 எண்ணி உரைப்பான் தலை.

*பொருள்*:

தன் கடமை இன்னதென்று தெளிவாக அறிந்து , அதை செய்வதற்கு ஏற்றக்காலத்தை எதிர்நோக்கி தக்க இடத்தையும் ஆராய்ந்து சொல்கின்றவனே தூதன்.

✡✡✡✡✡✡✡✡

*பொன்மொழி*

தர்மம் வகுத்த வழியில் பணம் சம்பாதியுங்கள். வேதம் விதித்த வழியில் வாழ்க்கை நடத்துங்கள்.

✳✳✳✳✳✳✳✳

*பழமொழி மற்றும் விளக்கம்*

*பந்திக்கு முந்திக்கோ படைக்கு பிந்திக்கோ*

நாம் அறிந்த விளக்கம் :

விருந்து நடக்கும் இடங்களில் சாப்பாட்டுக்கு முதல் வரிசையும் போரில் கடைசியாளாக இருப்பின் தற்காப்பதற்கு நல்லதும் என நேரிடையாக பொருள் கொள்ளப்படும் அதிக உலக வழக்கில் உள்ள பழமொழியாக இது அறியப்படுகிறது.

விளக்கம் :

இந்த பழமொழியின் உண்மையான வடிவம் பந்திக்கு முந்தும் படைக்கு பிந்தும் என்பதாகும். இந்தப் பழமொழியை சாதாரணமாக உட்பொருள் கொண்டால் பந்திக்கு அமர்ந்து சாப்பிடுகையில் கை முந்தும். போர்க்களத்தில் வேலோ வாளோ வில்லுக்கோ கை பிந்தும். எவ்வளவு கை பிந்துகிறதோ அந்தளவிற்கு அந்தப் படை முந்தும். இதல்லாது இன்னொரு பொருளையும் இதனூடே சொல்வார்கள். அந்த கால புலவர்கள் உடல் உறுப்புகளைப் பற்றி பாடி வைக்கையில் நமது வலது கையைப் பற்றி சொல்லும்போது பயன்படுத்தப்பட்ட வாக்கியமே இந்த பழமொழி. வில் அம்பு பயன்படுத்தி நடந்த போர்களில் வில்லில் அம்பு வைத்து நான் இழுக்க கை பின்னே போகும். அதே கை உணவருந்தையில் முன்னே போகும். இதை அர்த்தம் கொண்டே இந்த பழமொழி பயன்படுத்தப்பட்டது.

🔱🔱🔱🔱🔱🔱🔱🔱

*Important   Words*

 Plague  பிளேக்

 Boil  இரத்தக் கட்டி

 Pimple  முகப்பரு

 Piles  மூல நோய்

 Diabetes  சர்க்கரை வியாதி

✍✍✍✍✍✍✍✍

*பொது அறிவு*

1. ஹெலிகாப்டர் கண்டுபிடித்தவர் யார்?

புரோக்கெட்

2.ரோபோவின் தந்தை என அழைக்கப்படுபவர் யார்?

ஐசக் அசிமோ

🧬🧬🧬🧬🧬🧬🧬🧬

*Today's grammar*

*Introducing Yourself and others*

There is a range of ways to introduce yourself and people. Introducing yourself:

Here are expressions to introduce yourself:

My name is ...

I'm ....

Nice to meet you;

Pleased to meet you;

Let me introduce myself

I'd like to introduce myself

🗣🗣🗣🗣🗣🗣🗣🗣

*இன்றைய கதை*

 *பஞ்சதந்திரக் கதை*

*குளக்கரை மீன்கள்*

 குளக்கரையின் கரையோரத்தில் கொக்கு ஒன்று ஒற்றைக் காலில் நின்று கொண்டிருந்தது. துள்ளிக் கொண்டிருந்த மீன்களில் ஒன்று கொக்கிடம் வந்து என்ன கொக்காரே! உமது ஆகாரத்தைக் கொத்தாமல் சும்மா நிற்கிறீர்? என்று கேட்டது. அதற்கு கொக்கு செம்படவன் ஒருவன் வந்து ஒட்டுமொத்தமாக உங்கள் அனைவரையும் பிடித்துச் செல்லப் போகிறான் என்றது.

 இதனைக்கேட்ட அம்மீன் உடனே உள்ளே சென்றுவிட்டது. சில நிமிடம் கழித்து பல மீன்கள் மேலே வந்து கொக்கின் முன்பு துள்ளியது. அனைத்து மீன்களும் கொக்கிடம் வந்து உதவிக்கேட்டன. அதற்கு கொக்கு உங்களை இந்த குளத்திலிருந்து வேறு குளத்திற்கு மாற்றிவிட்டால் வேண்டுமானால் நீங்கள் தப்பிக்க முடியும் என்றதும் மீன்களும் சம்மதித்தது.

 நடைக்கு ஒவ்வொன்றாக குளத்திலிருந்த மீன்களையெல்லாம் கௌவிக் கொண்டுபோய் சில மீன்களைத் தின்று மற்ற மீன்களை ஒரு பாறையில் உலரவைத்தது. குளத்திலிருந்த நண்டு ஒன்றிற்கு தானும் வேறு குளத்திற்குச் செல்ல உள்ளுக்குள் ஆசை சுரந்தது. கொக்கிடம் என்னையும் அவ்விடத்திற்குக் கொண்டுப் போங்கள் என்று கெஞ்சியது. ஒப்புக்கொண்ட கொக்கு நண்டையும் கௌவிக்கொண்டு பறந்தது.

 பறக்கும் போது வழியில் மீன்களின் முள்ளுடல்கள் ஆங்காங்கே சிதறி இருப்பதைக் கண்டது நண்டு. தன் உயிராசையால் நண்டுக்கு ஒரு உபாயம் தோன்றியது. அதனால் கொக்காரே! நீங்கள் என்மேல் இரக்கப்பட்டு எடுத்துக்கொண்டு வந்தீர்கள். அங்கே என் உறவினர்கள் பலர் இருப்பதால் என்னை மீண்டும் அங்கே கொண்டு சென்றால் அவைகளையும் காண்பிப்பேன் என்றது நண்டு.

 ஆஹா! நமக்கு யோகம் அடித்தது என்று மகிழ்ந்த கொக்கு மீண்டும் நண்டைக் கௌவிக் கொன்று பழைய குளத்தை நோக்கிப் பறந்தது. குளத்துக்கு நேராக வரும்போது அதுவரை அமைதியாக இருந்த நண்டு தன் கொடுக்கினால் கொக்கின் கழுத்தை இரண்டு துண்டாக்கிவிட்டு குளத்து நீரில் விழுந்து உயிர் பிழைத்துக் கொண்டது.

நீதி ;

பிறர் சொல்லும் யோசனைகள் அனைத்தையும் அப்படியே ஏற்பது நன்றன்று.

🇳🇪🇳🇪🇳🇪🇳🇪🇳🇪🇳🇪🇳🇪🇳🇪
T.தென்னரசு,
இரா.கி.பேட்டை ஒன்றியம்,
திருவள்ளூர் மாவட்டம்.
🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷

*செய்திச் சுருக்கம்*

🔮வேலூர் மாவட்டம் மூன்றாகப் பிரிக்கப்பட உள்ளது என சுதந்திர தின் உரையில் முதல்வர் பழனிசாமி அறிவித்துள்ளார்.

🔮காஷ்மீர் எல்லைப்பகுதியில் பாகிஸ்தான் ராணுவம் நடத்திய அத்துமீறலுக்கு இந்தியா தந்த பதிலடியில் 3 பாகிஸ்தான் வீரர்கள் உயிரிழந்தனர்.

🔮ஜப்பானில் நிலநடுக்கம் : ரிக்டரில் 5.4 அளவாக பதிவு.

🔮மிராக்கிள் எமர்ஜென்சி லேண்டிங்: சோளக்காட்டில் தரையிறக்கி 226 பயணிகளை காப்பாற்றிய விமானி.

🔮உலக ஜூனியர் மல்யுத்தத்தில் இந்திய வீரர் தீபக் சாம்பியன்

🔮India celebrates 73rd Independence Day.

🔮Independence Day speech: Modi announces Chief of Defence Staff post, Jal Jeevan Mission.

🔮Indian crew aboard Iranian oil tanker released in Gibraltar.

🔮Free rides for women in DTC buses from October 29: Arvind Kejriwal.

🔮Pak’s close ally China asks for ‘closed consultations’ on Kashmir at UNSC.

மழை விடுமுறையில் ஆசிரியர்களுக்கும் விடுமுறை தான் - உயர்நீதிமன்றம் தீர்ப்பு

தமிழ்நாடு தொடக்கப் பள்ளி ஆசிரியர் கூட்டணி - திருமருகல்

கடந்த அக்டோபர் (04/10/2018) அன்று ஜாக்டோ ஜியோ அழைப்பின் பேரில் போராடும் ஆசிரிய சங்க உறுப்பினர்கள் அனைவரும் ஒரு நாள் சிறு விடுப்பு எடுத்து கலந்து கொண்டனர்.


இதில் சம்பளம் பிடித்தம் செய்யப்படும் என்ற தலைமைச் செயலரின் சுற்றறிக்கைக்குப் பிறகு இன்னும் தீவிரமாக நடந்தது
இது இப்படி இருக்க .....

மழை விடுப்பு அறிவிப்பு செய்யப்பட்ட புதுகை திரூவாரூர் மாவட்டங்களில் ஆசிரியர்கள் பள்ளிக்கு வரவேண்டும் என்ற ஒரு விசித்திரமான உத்தரவை நிர்வாகம் போட்டதாக கூறி  போராடாத ஆசிரிய சங்க முன்னோடிகள் பள்ளிக்கு வந்து கையெழுத்து போட்டனர்.


இதை இப்படியே விட்டால் பின்னாளில் விடுமுறை மாணவர்களுக்கு மட்டுந்தான் என்ற நிலை வந்துவிடும்




 இந்த வழக்கில் பதிலுரைத்த அரசு வழக்கறிஞர் , அரசு விடுமுறை அறிவிக்கப்பட்டு விட்டது , அது வேலை நாள் இல்லை  என  பதிலுரைக்க
அதனை ஏற்று  நீதிமன்றம் வழக்கை முடித்து வைத்தது.

இந்த வழக்கின் மூலம் மழை விடுமுறை உள்ளிட்ட விடுமுறை நாட்களை (ஆசிரியர் பள்ளிக்கு வரவழைக்கப்பட்டு கையெழுத்து போட்டாலும் ) பள்ளி வேலை நாளாக கருத முடியாது ......  என்ற ஆசிரியரின் அடிப்படை உரிமை நிலைநாட்டப்பட்டுள்ளது

ஆசிரியரின்றி அமையாது கல்வி' நூலை வெளியிட்டு விடுதலை நாள் விழாவை நூதனமாகக் கொண்டாடி மகிழ்ந்த அரசுப்பள்ளி மாணவிகள்!

தமிழ்நாடு தொடக்கப் பள்ளி ஆசிரியர் கூட்டணி - திருமருகல்

திருவாரூர் மாவட்டம் கோட்டூர் ஒன்றியம் மன்னார்குடி அருகேயுள்ள மேலகண்டமங்கலம் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியில் இன்று (15.08.2019) சிறப்பாகக் கொண்டாடப்பட்ட 73 ஆவது விடுதலை நாள் விழாவின் ஒரு பகுதியாக நடைபெற்ற நூல் வெளியீட்டு விழாவில் அண்மையில் அப்பள்ளியில் பணிபுரியும் பட்டதாரி ஆசிரியர் முனைவர் மணி கணேசன்  என்பார் தினமணி,  இந்து தமிழ் திசை, ஜனசக்தி நாளேடுகளில் எழுதி வெளிவந்த கட்டுரைகளின் தொகுப்பாக வந்திருக்கும்  ஆசிரியரின்றி  அமையாது கல்வி என்னும் நூலை மேலகண்டமங்கலம் பள்ளி மாணவர் மன்ற தலைவர் வினோதா, துணைத் தலைவர் மணிமேகலை உள்ளிட்ட மாணவிகள், ஆசிரியர்கள், பெற்றோர்கள், பொதுமக்கள் மற்றும் சக மாணவ, மாணவிகள் முன்னிலையில் வெளியிட்டு மகிழ்ந்தனர்.

இந்நூலை மாணவர்கள் வெளியிடுவதுதான் மிக பொருத்தமான செயலாக இருக்கும் என்பதால் இந்த இனிய நன்னாளில் மறுவெளியீடாக இந்நூல் வெளியிடப்பட்டது எனக்குப் பெருமகிழ்ச்சி என்றும் ஒத்துழைப்பு வழங்கிய அனைவருக்கும் மிக்க நன்றியையும் தெரிவித்துக் கொள்வதாக நூலாசிரியர் மணி கணேசன் தெரிவித்தார்.

Wednesday 14 August 2019

2) பள்ளி காலை வழிபாட்டுச் செயல்பாடுகள் - 14.08.19

தமிழ்நாடு தொடக்கப் பள்ளி ஆசிரியர் கூட்டணி - திருமருகல்

திருக்குறள்



அதிகாரம்:புலான்மறுத்தல்

திருக்குறள்:259

அவிசொரிந் தாயிரம் வேட்டலின் ஒன்றன்
உயிர்செகுத் துண்ணாமை நன்று.

விளக்கம்:

நெய் போன்ற பொருள்களைத் தீயிலிட்டு ஆயிரம் வேள்விகளை நடத்துவதைவிட ஓர் உயிரைக் கொன்று அதன் உடம்பை உண்ணாமலிருப்பது நல்லது.

பழமொழி

 தீராக் கோபம் போராய் முடியும்.

Anger is a sworn enemy.

இரண்டொழுக்க பண்புகள்

1. நமக்கு சுதந்திரம் பெற்று தந்த தியாகிகள் குறித்து அறிந்து கொள்ள முயல்வேன்.

2.அவர்களின் தியாகம் மற்றும் ஒழுக்கம் நிறைந்த வாழ்வை போலவே நானும் வாழ முயற்சி செய்வேன்.

பொன்மொழி

* உண்மையான நட்பு ஆரோக்கியம் போன்றது.அதனை இழக்கும் வரை அதன் மதிப்பை நாம்
உணர்வதில்லை.
- வோல்டன்.

பொது அறிவு

• இந்தியாவின் அண்டை நாடுகள் யாவை ?
 பாகிஸ்தான், ஆப்கானிஸ்தான், நேபாளம், பூடான்,
சீனா,வங்காளதேசம், மியான்மார்.

* இந்தியானவயும் இலங்கையையும் பிரிக்கும் நீர்ச்சந்தி எது?

பாக் நீர்ச்சந்தி

English words & meanings

Urge: a strong  desire to do something. தூண்டுதல்

Unique : something special. Nothing like others doing or having.
தனித் தன்மையுடைய.

ஆரோக்ய வாழ்வு

நாவல் பழத்தில்  கால்சியம் ,பாஸ்பரஸ் ,இரும்புச்சத்து  மற்றும் விட்டமின் சி போன்றவை நிறைந்துள்ளன .

Some important  abbreviations for students

TDS. -  Tax Deduction at Source

TRAI.  -   Telecom Regulatory Authority of India

நீதிக்கதை

ஒரு ஆட்டுக்குட்டி ஓடிவரும் ஆற்றின் சரிவுப் பகுதியில் நீர் அருந்திக் கொண்டிருந்தது. மேல் பகுதியில் நீர் குடிக்க வந்தது ஒரு ஓநாய். ஓநாயை, ஆட்டுக்குட்டி பார்க்கவில்லை.

அதைத்தான் இரையாக்கிக் கொள்ளத் தீர்மானித்தது ஓநாய்.

""""ஏன் இப்படித் தண்ணீரைக் கலக்குகிறாய்?'' என்று கேட்டது ஓநாய். அப்போது தான் ஓநாயைப் பார்த்த ஆட்டுக்குட்டி பயத்துடன் தண்ணீர் குடிப்பதை நிறுத்தியது.

""""நான் எப்படி நீரைக் கலக்க முடியும்? தாங்கள் குடித்த மீதி தானே கீழ்ப்புறம் வரும்!'' என்று மெல்லிய குரலில் கேட்டது.

""""பதில் பேசுமளவுக்குத் திமிராகி விட்டதா? நீ கலக்காவிடில் உங்கப்பன் கலக்கியிருப்பான்! உங்கப்பன் கலக்கா விட்டால், உன் பாட்டன் கலக்கியிருப்பான். உங்களையெல்லாம் சும்மா விடக்கூடாது!'' என்றபடி ஓட முயன்ற ஆட்டுக்குட்டி மேல் பாய்ந்து அதை இரையாக்கிக் கொண்டது.

துஷ்டர்களிடம் நியாயம் எடுபடாது. மவுனமாக ஒதுங்கிச் செல்வதே நன்மை தரும். காரியத்தை சாதித்துக் கொள்ள வேண்டும் என்பதற்காக எப்படியும் பேசுவர். அவர்களிடம் எல்லாம் வாய் பேசாமல் செல்வதே நலம்.

புதன்
கணிதம் & கையெழுத்துப்பயிற்சி

மாயப் பெட்டி

ஒரு நீல நிறப்  பெட்டியில் சில முத்துகள் இருந்தன.

 அவற்றை பச்சைப் பெட்டியில் போட்டால் இரட்டிப்பாகும் .

மஞ்சள் பெட்டியில் போட்டால் மும்மடங்காகும்.

பச்சைப் பெட்டியில் முத்துகள் முழுவதையும் போடவேண்டும் .

மஞ்சள் பெட்டியில் மூன்றில் இரண்டு பங்கு மட்டும் போட வேண்டும் ..

 தற்போது பச்சை மற்றும் மஞ்சள் இரண்டு பெட்டிகளிலும் ஒரே அளவு முத்துகள் உள்ளன.

அதாவது 18 முத்துகள்...

கேள்வி: நீலப் பெட்டியில் இருந்த முத்துகள் எத்தனை.?

விடை:
பச்சைப் பெட்டி
18/2  =  9 முத்துகள்

மஞ்சள் பெட்டி
18/3 = 6 முத்துகள்

[(3+3)+3= 9]
எனவே நீலப் பெட்டியில் 9 முத்துகள் இருந்தன.

கையெழுத்துப் பயிற்சி - 10




இன்றைய செய்திகள்

14.08.2019

* கேரளாவுக்கு மீண்டும் ரெட் அலர்ட் எச்சரிக்கை; இடுக்கி, எர்ணாகுளம், ஆலப்புழா மாவட்டங்களில் மிக கனமழை பெய்யும்.

* நாட்டிலேயே முதன்முறையாக குறைந்த எடையுடன் பிறக்கும் குழந்தைகளுக்கு இலவச தடுப்பூசி போடும் திட்டத்தை தமிழக அரசு செயல்படுத்தியுள்ளது.

* கல்லூரிப் படிப்புடன் ஐ.ஏ.எஸ். தேர்வுக்கான பயிற்சி மேற்கொள்ளும் வகையில் சிறப்பு வகுப்புகள் வருகிற 7-ந்தேதி முதல்  சென்னையில் தொடங்குகிறது‘, என ஆட்சித்தமிழ் ஐ.ஏ.எஸ். அகாடமி இயக்குனர் ச.வீரபாபு தெரிவித்தார்.

* கனடாவில் நடைபெற்ற ரோஜர்ஸ் கோப்பை டென்னிஸ் தொடரின் ஆண்கள் ஒற்றையர் பிரிவு பைனலில் ஸ்பெயின் நட்சத்திரம் ரபேல் நடாலும், மகளிர் ஒற்றையர் இறுதிப் போட்டியில் கனடாவின் பியான்கா ஆண்ட்ரீஸ்குவும் சாம்பியன் பட்டம் வென்றனர்.

* ஸ்பெயினில் நடந்த 'கோடிப்' கோப்பை கால்பந்து தொடரில் 3வது இடம் பிடித்த இந்திய பெண்கள் அணிக்கு சிறப்பு கோப்பை வழங்கப்பட்டது.

Today's Headlines

🌸Red alert alerts back to Kerala;  Heavy rainfall is reported in Idukki, Ernakulam and Alappuzha districts.

 🌸For the first time in the country, the Government of Tamil Nadu has implemented a free vaccination program for low birth weight children.

 🌸IAS Academy director C. Veerababu said that IAS exam coaching along with college education  will be conducted  from 7th  in Chennai .

 🌸Spanish star Rafael Nadal won the men's singles final of the Rogers Cup tennis series in Canada and Canada's Bianca Andreascu won the women's singles final.

 🌸The Special Cup was awarded 3rd place to the  Indian women's team in the "Codip Cup football" series in Spain.

Prepared by
Covai women ICT_போதிமரம்

1) School Morning Prayer Activities - 14-08-2019

தமிழ்நாடு தொடக்கப் பள்ளி ஆசிரியர் கூட்டணி - திருமருகல்

காலை வழிபாடு மற்றும் செயல்பாடுகள்

14-08-2019

*இன்றைய திருக்குறள்*

*குறள்-181*

 அறங்கூறான் அல்ல செயினும் ஒருவன்
 புறங்கூறான் என்றல் இனிது.

*பொருள்*

ஒருவன் அறத்தைச் சொல்லாமல் பாவமே செய்தாலும், அடுத்தவரைப் பற்றிப் புறம் பேசமாட்டான் என்றால் அதுவே அவனுக்கு நல்லது.

✡✡✡✡✡✡✡✡

*பொன்மொழி*

நல்லவராய் இருப்பது நல்லது தான். ஆனால் நல்லது கெட்டது தெரியாமல் நல்லவராய் இருப்பது  ஆபத்தானது.

✳✳✳✳✳✳✳✳

*பழமொழி மற்றும் விளக்கம்*

புல் தடுக்கிப் பயில்வான் போல ,

*நாம் அறிந்த விளக்கம்* :

புல் தடுக்கி எங்கேயாவது யாரேனும் விழுந்திருப்பதாய் கேள்விப்பட்டிருக்கிறீர்களா? சில நேரங்கள் சில பதங்கள் இவ்வாறு பழமொழிகளில் கலந்து விடுகிறது. புல் தடுக்கி என்பதை நம்பவே முடியாது. வேண்டுமானால் சிலவகை காட்டுப் புல்கள் அடர்ந்து புதராய் இருக்கும் இடத்தில் புல் இடறி வேண்டுமானால் பொருள் கொள்ளலாம். அப்படி ஒரு சம்பவத்தால் வந்ததுதான் இந்த பழமொழி. ஆனால் இதன் உண்மை விளக்கம் அல்ல

*விளக்கம்* :

புல் தடுக்கி பயில்வான் என்றால் அது நம் சந்திரகுப்தன் அமைச்சரான கௌடில்யர் என்னும் சாணக்கியர்தான். ஒரு முறை கானகப் பாதையில் காலில் புல் சிக்கி விழுந்தவர் உடனே அதை வேரோடு பிடுங்கி எரித்து சாம்பலாக்கி - கரைத்துக் குடித்தாராம். எதிரிகள் எவ்வளவு சிறிய அளவில் இருந்தாலும் அவர்களை அடியோடு அழிக்க வேண்டுமென குப்தனுக்கு அமைச்சர் சொன்ன அரசியல் அர்த்த சாஸ்திரம் அது. இது தான் உண்மை விளக்கம்.

✍✍✍✍✍✍✍✍

*பொது அறிவு*

1. முதல் இரும்பு கப்பலைச் செய்தவர் யார்?

வில்கின்சன்

2. சட்டையை கண்டுபிடித்தவர்கள் யார்?

எகிப்தியர்கள்

🧬🧬🧬🧬🧬🧬🧬🧬

*Today's grammar*

*Use Of 'Little' and 'A Little'*

Liitle means 'hardly any' and it has a negative meaning.

Example :

There is little water in the jug.
Practically it means no water.

A Liitle means 'some, but not much' and it has a positive meaning.

Example :

There is a little water in the jug.
Practically it means some water.

🗣🗣🗣🗣🗣🗣🗣🗣

*இன்றைய கதை*

*பலம் எது? பலவீனம் எது?*

 ஒரு காட்டில் நிறைய விலங்குகள் வசித்து வந்தன. அனைத்து விலங்குகளும் ஒற்றுமையாகவும் சந்தோஷமாகவும் வாழ்ந்து வந்தன. அங்கே வசித்த மயில் மட்டும் எப்போதும் மற்ற பறவைகள் மற்றும் விலங்குகளை பார்த்து பொறாமைபட்டுக் கொண்டே இருந்தது.

 உதாரணத்திற்கு யானையை பார்த்து பெரியதாய் இருக்கிறது என்றும் மானை பார்த்து வேகமாக ஓடுகிறது என்றும் பொறாமைப்படும்.

 இப்படியிருக்க ஒரு மழைக்காலத்தில் அந்த மயில் அழகாக ஆடத்துவங்கியது. அப்போது பாட ஆரம்பித்த மயில் தன் மோசமான குரலை எண்ணி அழத்துவங்கியது. அப்போது அங்கு வந்த மைனா மயிலை சமாதானப்படுத்தி அருகில் சென்றது.

 மயில் தனது வருத்தத்தை மைனாவிடம் கூற மைனா மயிலிடம் நீ மிகவும் அழகாய் இருக்கிறாய் அதை நினைத்து நீ சந்தோஷப்பட்டிருக்கிறாயா என்றது. மயில் சிறிது நேரம் மௌனமாய் இருந்துவிட்டு இல்லை என்று பதில் கூறியது.

 இதனை கேட்டு சிரித்த மைனா உலகில் பிறந்த ஒவ்வொருவருக்கும் எதாவது ஒரு சிறப்பும் வலிமையும் இருக்கும். அது என்ன என்பதை உணர்ந்து அதனை மேம்படுத்த வேண்டுமே அன்றி எது நம்மிடம் இல்லையோ அதை நினைத்து வருத்தப்படவோ பொறாமைப்படவோ கூடாது என அறிவுரை கூறியது.

 இறுதியில் தன் தவறை உணர்ந்த மயில் மைனாவிற்கு நன்றி தெரிவித்தது.

🇳🇪🇳🇪🇳🇪🇳🇪🇳🇪🇳🇪🇳🇪🇳🇪
T.தென்னரசு,
TN டிஜிட்டல் டீம்,
திருவள்ளூர் மாவட்டம்.
🌷🌷🌷🌷🌷🌷🌷🌷
*செய்திச் சுருக்கம்*

🔮எந்தஒரு சவாலையும் எதிர்க்கொள்ள இந்திய ராணுவம் தயார் - ராணுவ தளபதி பிபின் ராவத்.

🔮காவிரி கரையோர பகுதிகளில் வசிக்கும் மக்களுக்கு தமிழக அரசு வெள்ள அபாய எச்சரிக்கை.

🔮கல்லூரிப் படிப்புடன் ஐ.ஏ.எஸ்.தேர்வுக்கு பயிற்சி சென்னையில் 7-ந் தேதி முதல் வகுப்புகள் ஆரம்பம்.
ஆட்சித்தமிழ் ஐ.ஏ.எஸ். அகாடமி தகவல்.

🔮கீழடி அகழ்வாராய்ச்சி பணி: திண்ணை வடிவிலான திட்டு, சிமெண்டு சுவர் கண்டுபிடிப்பு.

🔮கிரிக்கெட்டை 2028-ல் ஒலிம்பிக்கில் சேர்க்க பேச்சுவார்த்தை : மைக் கேட்டிங்

🔮Military movement by Pakistan along LoC normal, says Gen. Rawat.

🔮Affected by floods, rains, Karanataka to keep independence day celebrations simple.

🔮India's passenger vehicles' sales slumped by 31% in July.

🔮South Africa include three new names in Test squad for India tour; Quinton de Kock to lead T20I side

Tuesday 13 August 2019

அரசுப் பள்ளிகளில் எல்கேஜி-யுகேஜி வகுப்புகள்: கூடுதலாக 3 ஆயிரம் பள்ளிகளுக்கு விரிவுபடுத்த முடிவு

தமிழ்நாடு தொடக்கப் பள்ளி ஆசிரியர் கூட்டணி - திருமருகல்
தமிழகத்தில் தற்போது 2,381 அரசுப் பள்ளிகளில் உள்ள அங்கன்வாடி மையங்களில் மழலையர் வகுப்புகள் செயல்பட்டு வரும் நிலையில், இந்தத் திட்டம் மேலும் 3 ஆயிரம் பள்ளிகளுக்கு விரிவுபடுத்தப்படவுள்ளது.

அரசுப் பள்ளிகளில் மாணவர் சேர்க்கையை அதிகரிக்க தொடர்ந்து பல்வேறு நடவடிக்கைகளை அரசு எடுத்து வருகிறது. இதன் ஒரு பகுதியாக, ஏழை பெற்றோரின் குழந்தைகளும் தனியார் பள்ளிகளுக்கு இணையாக ஆங்கிலத்தில் சிறந்து விளங்க வேண்டும் என்பதை கருத்தில் கொண்டு அரசுப் பள்ளிகளில் மழலையர் வகுப்புகள் தொடங்கப்படும் என கடந்த ஆண்டு செப்டம்பரில் அறிவித்தது. இதையடுத்து ரூ.7.73 கோடியில் முதல் கட்டமாக அரசு நடுநிலைப் பள்ளி வளாகங் களில் இயங்கும் 2,381 அங்கன்வாடிகளில் மழலையர் வகுப்புகள் கடந்த ஜனவரி 21-ஆம் தேதி தொடங்கப்பட்டன.

3-4 வயது குழந்தைகளை எல்கேஜி வகுப்பி லும், 4-5 வயது குழந்தைகளை யுகேஜி வகுப்பிலும் சேர்க்கப்பட்டுள்ளனர். மழலையர் வகுப்புகள் காலை 9.30 மணி முதல் மதியம் 3.45 மணி வரை நடைபெறும். இங்கு சேர்ந்து உள்ள குழந்தைகளுக்கு பாடப் புத்தகங்கள், புத்தகப்பை வழங்கப்பட்டுள்ளது. ஒவ்வொரு வகுப்புக்கும் ஒரு கற்றல் கருவி பெட்டி தரப்பட்டுள்ளது. அதன்மூலமாக ஆசிரியர்கள் தினமும் 2 மணி நேரம் பாடம் நடத்துகின்றனர். அது செயல்முறைக் கல்வியாகவே இருக்கும். இதர நேரங்களில் விளையாட்டு போன்ற தனித்திறன் சார்ந்த அம்சங்களில் குழந்தைகள் ஈடுபடுத்தப்படுவார்கள். இந்த வகுப்புகளில் பெற்றோர் பலரும் ஆர்வத்துடன் தங்கள் குழந்தைகளை சேர்த்து வருகின்றனர்.

நிகழாண்டு இதுவரை 51 ஆயிரம் குழந்தைகள் சேர்க்கப்பட்டுள்ளனர். செப்டம்பர் வரை மாணவர் சேர்க்கை நடைபெறும் என்பதால் இந்த எண்ணிக்கை மேலும் அதிகரிக்கும். மழலையர் வகுப்புகளுக்கு பெற்றோர், பொதுமக்கள் மத்தியில் பெரும் வரவேற்பு கிடைத்துள்ளதால் இந்தத் திட்டத்தை அரசுப் பள்ளி வளாகங்களில் செயல்படும் மற்ற 3 ஆயிரம் அங்கன்வாடிகளிலும் படிப்படியாக மழலையர் வகுப்புகள் தொடங்க திட்டமிடப்பட்டுள்ளது.

இந்த மையங்களில் படிக்கும் 60 ஆயிரம் குழந்தைகள் அப்படியே மழலையர் வகுப்புகளில் சேர்க்கப்படுவார்கள். இதற்கான கருத்துருக்கள், தேவையான கட்டமைப்பு வசதிகள் குறித்து ஆலோசனை நடந்து வருகிறது. விரைவில் தமிழக அரசிடம் ஒப்புதல் பெற்று திட்டம் விரிவுபடுத்தப்படும். இதன்மூலம் ஏழை மக்களும் தனியார் பள்ளியை நோக்கிச் செல்லும் போக்கு மாறும் என பள்ளிக் கல்வித்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.

School Morning Prayer Activities - 13-08-2019

தமிழ்நாடு தொடக்கப் பள்ளி ஆசிரியர் கூட்டணி - திருமருகல்

School Morning Prayer Activities - 13-08-2019

காலை வழிபாடு மற்றும் செயல்பாடுகள்


*குறள் -103*

பயன்தூக்கார் செய்த உதவி நயன்தூக்கின்
 நன்மை கடலின் பெரிது.

*பொருள்*

இவருக்கு உதவினால் பிறகு நமக்கு இது கிடைக்கும் என்று எண்ணாதவராய் ஒருவர் செய்த உதவியின் அன்பை ஆய்ந்து பார்த்தால், அவ்வுதவியின் நன்மை கடலைவிடப் பெரியது ஆகும்.

*பொன்மொழி*
ஒரு அன்பான இதயம் ஆயிரம் அழகான முகத்திற்கு சமம். ஆகையால் எப்போதும் அழகான முகத்தை விட அன்பான இதயத்தை நேசி.


*பழமொழி மற்றும் விளக்கம்*

ஓட்டைக் கப்பலுக்கு ஒன்பது மாலுமி

*நாம் அறிந்த விளக்கம்* :

பேச்சு பெருசா இருக்கும் செயல்ல ஒண்ணும் இருக்காது என்று இடித்துரைப்பார்களே அதுபோலதான் இந்த பழமொழியும் உலக வழக்கில் பொருள் கொள்ளப்பட்டு வருகிறது. ஆனால் இதன் பொருளை ஆராய்ந்தால் ஒரு அற்புதமான விளக்கம் கிடைக்கிறது.

*விளக்கம்* :

ஓட்டைக் கப்பலும் ஒன்பது மாலுமிகளும் யாரென்று தெரிந்தால் ஆச்சரியப்பட்டு போவீர்கள் அது நாம்தான். குழப்பமாக இருக்கிறதா ஒட்டைக் கப்பல் என்பது மனித உடலையும் ஒன்பது மாலுமிகள் என்பது நம் உடலில் உள்ள பல்வேறு துவாரங்களையும் குறிக்கிறது. எனவேதான் இந்த மனித வாழ்க்கையில் ஒருவனுக்கு மரணம் நேரும்போது அவனுடைய உயிர் மூச்சு அந்த உடலின் எந்த ஓட்டை வழியேனும் வெளியேறலாம் என்பதற்காய் பெரியோர்கள் நிலையற்ற இந்த மனித வாழ்வை குறிக்கும் போது ஓட்டைக் கப்பலுக்கு ஒன்பது மாலுமி போய் ஆக வேண்டியதைப் பாரப்பா என்று சொல்லி வைத்தார்கள்.


*பொது அறிவு*

1. ஒயிட் மேன் கோப்பை எந்த விளையாட்டிற்கு வழங்கப்படுகிறது?

 டென்னிஸ்

2. கிரிக்கெட் விளையாட்டில் L.B.W. என்பதன் விரிவாக்கம் என்ன?

Leg before wicket


*Today's grammar*

*Use Of Few and A Few*

Few has negative and A few has positive meaning.

Example :

 I have few friends.

Practically it means no friends.

 I have a few friends.

Practically it means a small number of friends.

*இன்றைய கதை*

*எண்ணம் போல் வாழ்வு*

    ஒரு ஊரில் குமாரசாமி என்ற பெயருடைய மனிதர் ஒருவர் இருந்தார். அவரை எல்லோரும் முட்டாள் என்றும் பிழைக்கத் தெரியாதவர் என்றும் கேலி செய்து வந்தனர். இதைக் கேட்டுக்கேட்டு அந்த மனிதருக்கு வெட்கமாகிப் போய்விட்டது. அந்த ஊரின் எல்லையில் ஒரு முனிவர் இருந்தார். அவரிடம் சென்று அந்த மனிதர் இந்தப் பிரச்சனைக்குத் தீர்வு கேட்டார்.

  கடவுளை நினைத்து தவம் செய். உனக்கு வேண்டிய வரத்தைக் கொடுப்பார் என்று அந்த முனிவர் கூறினார். குமாரசாமி கடுமையாகத் தவம் இருந்தார். பல நாட்கள் சென்ற பிறகு கடவுள் அவர் எதிரில் தோன்றினார். பக்தனே உனக்கு என்ன வரம் வேண்டும்? கடவுள் கேட்டார். தவம் செய்தால் கடவுள் வந்து வரம் கொடுப்பார்னு அந்த முனிவர் சொன்னார். மன்னார்சாமி என்ன வரம் வேண்டும் கேள் என்றார் கடவுள். அதான் கேட்டேனே வரம்... அதை கொடு... என்றார் மன்னார்சாமி.

  இப்போது கடவுளுக்கே குழப்பம் வந்து விட்டது. கடவுள் பிரத்யட்சம் செய்துவிட்டால் யாருக்காவது வரம் கொடுத்தே ஆக வேண்டும். அதுவும் தவம் செய்தவருக்குத் தவறாமல் வரம் கொடுத்தே ஆக வேண்டும். என்ன செய்யலாம்? கடவுள் யோசித்தார். பக்தா இப்போது நீ என்ன நினைக்கிறாயோ அதையே வரமாகக் கொடுக்கின்றேன் பெற்றுக்கொள். அய்...யய்ய....யோ... நான் ஒன்றும் நினைக்கவே இல்லையே! அதான்... என்று சொல்லிவிட்டுக் கடவுள் மறைந்து விட்டார். இதிலிருந்து என்ன தெரிகிறது? பலனை நோக்கிய உழைப்புதான் உயர்வைத் தரும்! எண்ணம் போல் வாழ்வும் கூட! மனதில் நல்லதை நினைப்போம், நல்வழி செல்வோம்.

*செய்திச் சுருக்கம்*

🔮ஒகேனக்கலுக்கு நீர்வரத்து விநாடிக்கு 3 லட்சம் கனஅடி, வேகமாக நிரம்புகிறது மேட்டூர் அணை -வெள்ள அபாய எச்சரிக்கை விடுப்பு.

🔮புதுடெல்லி-லாகூர் இடையிலான பஸ் சேவையை இந்தியா ரத்து செய்தது.


🔮 கேரளாவில் கனமழை: பலி எண்ணிக்கை 76 ஆக உயர்வு; 2.87 லட்சம் பேர் பாதிப்பு.

🔮டெல்லி-ரஷ்யா இடையே விரைவில் நேரடி விமான சேவை: பியூஷ் கோயல்.

🔮ஐதராபாத் ஓபன் பேட்மிண்டன்: இந்திய வீரர் சவுரப் வர்மா ‘சாம்பியன்’.

🔮VISAKHAPATNAMCoast Guard ship 'Coastal Jaguar' catches fire near Visakhapatnam Port, one missing.

🔮Mukesh Ambani announces Reliance's launch of Internet of Things, Jio Fiber.

🔮Now, India cancels Delhi-Lahore bus service from its side

🔮Virat Kohli became India’s second-highest run-scorer in ODIs 1,000 runs a time.

*தொகுப்பு*

T.தென்னரசு,
இரா.கி.பேட்டை ஒன்றியம்,
திருவள்ளூர் மாவட்டம்.

Monday 12 August 2019

CPS Account Slip & Missing Credit Download - Available Upto 2019 Now - Direct Link

தமிழ்நாடு தொடக்கப் பள்ளி ஆசிரியர் கூட்டணி - திருமருகல்

ஒரு மாணவர் கூட சேராத 46 பள்ளிகளில் இருந்த ஆசிரியர்களின் தற்போதையை நிலை என்ன?

தமிழ்நாடு தொடக்கப் பள்ளி ஆசிரியர் கூட்டணி - திருமருகல்

ஒரு மாணவர் கூட சேராத 46 பள்ளிகளில் இருந்த ஆசிரியர்களின் தற்போதையை நிலை என்ன?




பள்ளிகளை மூடும் எண்ணம் அரசுக்கு இல்லை: அமைச்சர் செங்கோட்டையன்

தமிழகம் முழுவதும் 46 தொடக்க, நடுநிலை பள்ளிகளில் தான் ஒரு மாணவர்கள் கூட இல்லை. ஆனாலும், அந்த பள்ளிகளை மூடிவிடவில்லை;  அங்கு இரண்டு ஆசிரியர்கள் தினமும் பள்ளிக்கு வந்து கொண்டிருக்கின்றனர். அவர்கள், எந்த வேலையும் இல்லாததால் அந்த பள்ளியில் உள்ள ஆசிரியர்கள் அயல்பணி அடிப்படையில் மாற்றுப்பள்ளிக்கு பணியமர்த்தப்பட்டுள்ளனர். தினமும் அங்கு சென்று மாணவர்களுக்கு வகுப்பு எடுத்து வருகின்றனர்.

 தற்போது ஒரு மாணவர்கள் கூட இல்லாத நிலையில், அந்த பள்ளிகளில் தற்காலிகமாகத்தான் நூலகமாக மாற்றுகிறோம். பல பள்ளிகளையும் இப்படி செய்வதாக கூறுவது சரியல்ல. அந்த பள்ளி கட்டிடம் பயன் இல்லாமல் இருக்கக்கூடாது என்பதற்காகத்தான் அந்த பள்ளிகளை நூலகமாக தற்காலிகமாக மாற்றப்படுகிறது. அந்த பள்ளிகளில் 6 மாதத்திற்குள் அந்த பகுதிகளில் உள்ள மாணவர்களை மீண்டும் சேர்த்து அடுத்த கல்வியாண்டு முதல் அது, பள்ளியாக செயல்பட நடவடிக்கை எடுக்கப்படும். அரசு இத்தகைய நிலைமையை கூர்ந்து கவனித்து தான் வருகிறது. பள்ளிகளை மூடிவி–்ட முடிவு செய்து விட்டது போல பேசப்படுவதில் உண்மையல்ல. இதை மக்கள் புரிந்து கொள்ள வேண்டும்.

கடந்த 2 ஆண்டுகளாக தான் அரசு பள்ளிகளில் மாணவர் சேர்க்கை குறைவாக இருந்தது. அரசு எடுத்த நடவடிக்கைகள் காரணமாக இப்போது நிலைமை மாறி வருகிறது. பல பள்ளிகளில் தரம் உயர்த்தி, எல்லா வகையிலும் மாணவர்களுக்கு பக்கபலமாக இருக்கும் வகையில் மாற்றி  அமைக்கப்பட்டுள்ளது. இதனால் மாணவர்கள் சேர்க்கை மீண்டும் அதிகரித்து வருகிறது.  அரசு நடவடிக்கை காரணமாக இந்தாண்டு அரசு பள்ளிகளில் 1.72 லட்சம் மாணவ, மாணவிகள் அரசு பள்ளிகளில் சேர்க்கப்பட்டுள்ளனர்.

எனினும், மொத்தத்தில் எடுத்த கணக்கெடுப்பின் படி,  46 பள்ளிகளில் தான் ஒரு மாணவர்கள் கூட இல்லை. இந்த பள்ளிகளில் தலா 2 ஆசிரியர்கள் இருக்கின்றனர். அந்த ஆசிரியர்கள் பணி இல்லாமல் சும்மா இருக்க கூடாது என்பதற்காக அவர்கள் அருகில் உள்ள பள்ளிகளுக்கு அயல்பணி அடிப்படையில் நியமிக்கப்பட்டுள்ளனர். மூடப்பட்ட பள்ளிகள் தற்காலிகமாகத்தான் நூலகமாக இருக்கும்.  பள்ளியில் மாணவர் சேர்க்கை ஏற்படுத்தி மீண்டும் ஆசிரியர்கள் அதே பள்ளிக்கு பணியமர்த்தப்படுவார்கள். தமிழகத்தில் பள்ளிகள் எண்ணிக்கையை உயர்த்திய நாங்கள் எப்படி பள்ளிகளை மூடுவோம்? கண்டிப்பாக  ஒரு பள்ளிகளை கூட மூடும் எண்ணம் இந்த அரசுக்கு இல்லை. 46 பள்ளிகளும் மீண்டும் இயக்க நிச்சயம் நடவடிக்கை எடுக்கப்படும்.

தமிழகம் முழுவதும் 2 ஆயிரம் அரசு மேல்நிலை பள்ளிகளில் நவீன அறிவியல் ஆய்வகம் அமைக்கப்படுகிறது. இதற்காக, சீனாவில் இருந்து தொழில்நுட்ப வல்லுனர்கள் தமிழகம் வந்துள்ளனர். அவர்கள் தான் மாநிலம் முழுவதும் உள்ள அரசு மேல் நிலைபள்ளகளில் அறிவியல் ஆய்வகம் அமைக்கும் பணியை செய்வார்கள். இந்த பள்ளிகளில் அறிவியலில் சிறந்து விளங்கும் மாணவர்களை தேர்வு செய்து அவர்கள் சீனாவுக்கு அனுப்பப்பட உள்ளனர். அந்த மாணவர்கள், சீனாவிற்கு அனுப்பி தொழில்நுட்ப பயிற்சி அளிக்கப்படுகிறது. குறிப்பாக, மாணவர்கள் ஹெலிகாப்டர், ஏரோபிளேன் போன்று உருவாக்கும் அளவுக்கு அவர்களுக்கு தொழில்நுட்ப பயிற்சி அளிக்கப்படுகிறது. அரசு பள்ளி மாணவர்கள், கணிதத்தை எளிதில் புரிந்து படிக்கும் அளவுக்கு மொபைல் ஆப் உருவாக்கப்பட்டுள்ளது. அந்த ஆப் மூலம் கணிதத்தை எளிதாக படித்து புரிந்து கொள்ள முடியும். மாணவர்களின் கல்வி தரத்தை உயர்த்துவதற்காகவும், கணிதத்தில் சிறந்து விளக்குவதற்காகவும் இந்த ஆப் உருவாக்கப்பட்டுள்ளது.

அரசு நடவடிக்கை  காரணமாக இந்தாண்டு அரசு  பள்ளிகளில் 1.72 லட்சம் மாணவ, மாணவிகள் அரசு பள்ளிகளில்  சேர்க்கப்பட்டு உள்ளனர். 46 பள்ளிகளில் தான் ஒரு மாணவர்கள் கூட இல்லை.

Sunday 11 August 2019

தேங்காய் பாலில் இவ்வளவு நன்மைகளா? தெரிந்து கொள்வோமா?




தேங்காய் பாலில் உடல் பலத்திற்கும் ஆரோக்கியத்திற்கு தேவையான விட்டமின் சி, இ, பி1, பி3,பி5, பி6, இரும்புச்சத்து, கால்சியம், செலீனியம், மெக்னீசியம், பாஸ்பரஸ் போன்ற சத்துக்கள் உள்ளன.

* தேங்காய் பால் உட்கொள்வதால் இதயத்திற்கு செல்லும் இரத்த ஓட்டத்தினை சீராக்கி மாரடைப்பு வருவதை குறைக்கிறது.

* வறண்ட, உடைந்த, நுனி பிளந்த முடிக்கு ஊட்டச்சத்து கிடைக்க தேங்காய்ப்பால் மூலம் முடியை அலச முடி மிருதுவாகும்

* தேங்காய் பாலில் அடங்கியுள்ள அதிகப்படியான நார்ச்சத்து வெகு விரைவிலேயே பசியை அடங்கச் செய்யும்.

உடல் எடை குறையும்.

* வறண்ட சருமம் கொண்டவர்கள் தேங்காய் பாலை உடலில் தடவி, 30 நிமிடங்கள் கழித்துக் குளிக்க, அதன் ஈரப்பதம் சருமத்தால் உறிஞ்சப்பட்டு, வறட்சி நீங்கி பளபளப்பாகும்.

* தேங்காய் பாலை சருமத்தில் தொடர்ந்து பயன்படுத்தி வர இளமைப் பொலிவு கிடைக்கும்.

* தேங்காய் பால் உடலின் செரிமான மண்டலத்தினை சீர்செய்து உடல் நலத்தினை மேம்படுத்துகிறது.

* தேங்காய் பாலை விளக்கெண்ணெயில் கலந்து கொடுத்தால், வயிற்றில் உள்ள புழுக்களை நீக்கும்.

* தேங்காய் பாலில் உள்ள பாஸ்பரஸ், எலும்பை உறுதியாக்க வல்லது. கர்ப்பிணிகளுக்கு இது நல்லது.

* தேங்காய் பாலில் உள்ள பொட்டாஷியம் சத்து உடம்பில் உள்ள இரத்தக் கொதிப்பின் அளவை குறைக்க உதவும்.

* நீரிழிவு நோயினை கட்டுப்படுத்த உதவுகிறது. இரும்புச்சத்து குறைபாடு தடுக்கப்படும்.

ஒரு கப் தேங்காய் பாலில், உடம்புக்கு அன்றாடம் தேவைப்படும் இரும்புச்சத்தில் 25 சதவீதம் கிடைத்துவிடுகிறது.

* பக்டீரியா, வைரஸ் மற்றும் பூஞ்சைத் தொற்றுக்கு எதிரான தன்மை கொண்ட தேங்காய்பால், வைரஸ் காய்ச்சல், பூஞ்சை மற்றும் பக்டீரியா தொற்று போன்ற நோய் வராமல் தவிர்க்கும், இதில் உள்ள வைட்டமின் சி உடலின் நோய் எதிர்ப்பு தன்மையை அதிகரிக்கும்.

* அதிக அளவு மக்னீசியம் இருப்பதால், தசை வலிகளுக்கு சிறந்த நிவாரணியாக விளங்குகிறது.

* கீல்வாதம் இருப்பவர்கள், தேங்காய் பால் சாப்பிட்டால் நல்ல நிவாரணம் கிடைக்கும்.

Thursday 8 August 2019

School Morning Prayer Activities - 09-08-2019

தமிழ்நாடு தொடக்கப் பள்ளி ஆசிரியர் கூட்டணி - திருமருகல்

School Morning Prayer Activities - 09-08-2019


காலை வழிபாடு மற்றும் செயல்பாடுகள்
09-08-2019

*இன்றைய திருக்குறள்*

*குறள்-670*

எனைத்திட்பம் எய்தியக் கண்ணும் வினைத்திட்பம்
 வேண்டாரை வேண்டாது உலகு.

*பொருள்*:

வேறு எத்தகைய உறுதி உடையவராக இருந்தாலும் செய்யும் தொழிலில் உறுதி இல்லாதவரை உலகம் விரும்பி போற்றாது.

✡✡✡✡✡✡✡✡

*பொன்மொழி*

 நம் செயல்களால் மற்றவர்கள் வருந்தக் கூடாது என நினைப்போர் தான், இங்கு பல சூழ்நிலைகளில் வருந்தத்தக்க நிலைக்கு தள்ளப்படுகின்றனர்,மற்றவர்களால்!!
- ஸ்ரீகிருஷ்ணா

✳✳✳✳✳✳✳✳

*பழமொழி மற்றும் விளக்கம்*

 *ஏறச் சொன்னால் எருது கோபம்இ இறங்கச் சொன்னால் நொண்டி கோபம் .*

நாம் அறிந்த விளக்கம் :

கால் ஊனமான ஒருவன் ஏர் பூட்டி உழவுத்தொழிலை மேற்கொள்ளும் போது அவனையும் மாடையும் இணைப்பது ஏர். கால் ஊனமானவனால் ஏரைத் தள்ளிக் கொண்டே நடக்க முடியாது. அவனை ஏரில் ஏற்றினால் மாடு எடை தாளாமல் தள்ளும். அவனை இறங்கச் சொன்னால் அவன் கோவித்துக் கொள்வான். இருவருக்கும் இடையில் மாட்டிக்கொண்டு அல்லல் படுவது ஏர்தான் என்பது நமக்கு விளங்கும். ஆக ஏறச் சொன்னால் எருதுக்கு கோபம். இறங்க சொன்னால் நொண்டிக்கு கோபம் என பழமொழியின் அர்த்தம் விளங்குகிறது

விளக்கம் :

ஒரு செயலை செய்யும் போது அது ஒரு சாரருக்கு சந்தோசத்தை கொடுக்கும் மற்றவர்களுக்கு வருத்தத்தை கொடுக்கும் இது இயற்கை. உதாரணத்திற்கு மழை பெய்தால் விவசாயிகளுக்கு கொண்டாட்டம்இ அதே நேரத்தில் உப்பு விற்பவர்கள் தீப்பெட்டி போன்ற தொழில் செய்பவர்களுக்கு திண்டாட்டம். எருதுவின் மேலே ஏறுவது தான் இங்கே செயல் ஏறினால் எருதுவுக்கு வலிக்கும் ஏறவில்லை என்றால் நொண்டிக்கு கஷ்டம் என்று நேரிடையாக அர்த்தம் வருகிறது. ஆக மொத்தம் இந்த பழமொழியின் மூலம் நாம் செய்யும் சில காரியங்கள் சிலருக்கு நன்மையும் சிலருக்கு தீமையும் பயக்கும். இதுவே இதன் உண்மை விளக்கம் ஆகும்.

✍✍✍✍✍✍✍✍
*பொது அறிவு*(T.T)
1. இரத்தம் சிவப்பாக இருப்பதற்குக் காரணம் என்ன?

 ஹீமோகுளோபின்

2. இராணித் தேனீயின் முக்கிய வேலை எது?

 முட்டையிடுதல்

🔱🔱🔱🔱🔱🔱🔱🔱

*Important  Used Words*

 Kerosene  மண்ணெண்ணெய்

 Table  மேஜை

 Candle  மெழுகுவர்த்தி

 Dish  சிறு தட்டு

 Rope  கயிறு

🧬🧬🧬🧬🧬🧬🧬🧬(T.T)

*Today's grammar*

This list contains both homophones and homographs.

allowed - permitted
aloud - out loud

ant - picnic pest
aunt - relative, as in your mom's sister

arc - curve
ark - Noah's boat

ate - chewed up and swallowed
eight - number after seven

bare - uncovered
bear - grizzly animal

🗣🗣🗣🗣🗣🗣🗣🗣

*இன்றைய கதை*

*குருவும் சீடனும்*

 குருவே! என் வாழ்க்கையில் மகிழ்ச்சியே இல்லை என்றான் சீடன் உடனே குரு அவனை ஒரு தோட்டத்துக்கு அழைத்துச் சென்று அங்குள்ள பட்டாம் பூச்சிகள் அங்குமிங்கும் பறந்து கொண்டிருந்ததை இதோ இவற்றில் ஒன்றைப் பிடித்து வா! என்று குரு அவனிடம் சொன்னார்.

 அவன் பட்டாம் பூச்சியைத் துரத்திக் கொண்டு ஓடினான். ஆனால் அவனால் பிடிக்க முடியவில்லை. பரவாயில்லை வா நாம் இந்தத் தோட்டத்தின் அழகை ரசிக்கலாம் என்று குரு அவனைத் தோட்டத்தின் நடுவில் அழைத்து வந்தார். இருவரும் அங்கு அமைதியாக நின்று தோட்டத்தின் அழகைக் கண்குளிரப் பார்த்து ரசித்துக் கொண்டிருந்தனர்.

 சிறிது நேரத்தில் அவர்களைச் சுற்றியும் பட்டாம்பூச்சிகள் பறக்கத் தொடங்கின. சற்று நேரத்திற்கு முன்பு அவன் பிடிக்கத் சென்ற பட்டாம்பூச்சி இப்போது அவன் கைகளிலே வந்து அமர்ந்தது. அப்போது குரு சிரித்தபடி அவனிடம் சொன்னார். இதுதான் வாழ்க்கை! மகிழ்ச்சியைத் தேடி ஓடுவதை விட நாம் வாழ்க்கையை அமைதியாக ரசிக்கும்போது மகிழ்ச்சி நம்மைத் தேடி வரும் என்றார்.

🧾🧾🧾🧾🧾🧾🧾🧾
T.தென்னரசு,
TN டிஜிட்டல் டீம்

🌷🌷🌷🌷🌷🌷🌷🌷

*செய்திச் சுருக்கம்*

🔮கீழடி அகழ்வாராய்ச்சி பணிகள்: வெளிநாட்டினர் அணியும் அரிய வகை அணிகலன்கள் கண்டுபிடிப்பு.

🔮ஆப்கானிஸ்தானில் நிலநடுக்கம்; ரிக்டரில் 5.8 ஆக பதிவு.

🔮தமிழகத்தில் அடுத்த 2 நாட்களுக்கு உள்மாவட்டங்களிலும், தென் மாவட்டங்களிலும் மழைக்கு வாய்ப்பு.

🔮 அத்திவரதர் வைபவம் 16-ம் தேதி இரவுடன் நிறைவு: 17-ம் தேதி தரிசனம் ரத்து...மாவட்ட ஆட்சியர் பொன்னையா அறிவிப்பு.

🔮வெஸ்ட் இண்டீஸ் அணிக்கெதிரான 3-வது 20 ஓவர் போட்டியில் 42 பந்தில் 65 ரன்கள் குவித்த ரிஷப் பண்ட் டோனியின் சாதனையை முறியடித்துள்ளார்.

🔮Pakistan suspends Samjhauta train service, bans Indian films.

🔮Kerala rains: Red alert in 4 districts; Munnar receives 194 mm rainfall in 24ஜ hours.

🔮2 Hyderabad Men Invent "Smart Bangle" For Women Safety. It Sends Shock Signals.

🔮Pranab Mukherjee, Nanaji Deshmukh, Bhupen Hazarika conferred Bharat Ratna.

🔮Avalanche in Nilgiris records highest rainfall in Tamil Nadu.

பள்ளி காலை வழிபாட்டுச் செயல்பாடுகள் - 09.08.19

தமிழ்நாடு தொடக்கப் பள்ளி ஆசிரியர் கூட்டணி - திருமருகல்
திருக்குறள்


அதிகாரம்:புலான்மறுத்தல்

திருக்குறள்:257

உண்ணாமை வேண்டும் புலாஅல் பிறிதொன்றன்
புண்ணது உணர்வார்ப் பெறின்.

விளக்கம்:

புலால் என்பது வேறோர் உயிரின் உடற்புண் என்பதை உணர்ந்தோர் அதனை உண்ணாமல் இருக்கவேண்டும்.

பழமொழி

 கடுகு சிறுத்தாலும் காரம் குறையாது.

The size of a thing does not necessarily indicate its potency

இரண்டொழுக்க பண்புகள்

1. நம் நாட்டின் பாரம்பரிய உணவுகளை தெரிந்து கொண்டு அவற்றை உண்டு என உடல்நலத்தை பாதுகாப்பேன்.

2. சுய சுத்தம், தலை முடி ஒழுங்காக வெட்டுதல் மற்றும் சரியான நேரத்திற்கு பள்ளி வருதல் போன்றவற்றை கடைபிடிப்பேன்.

பொன்மொழி

இந்த நொடிப் பொழுது போல் விலைமதிப்பற்ற பொருள் வேறெதுவும் இல்லை. சரியாகப் பயன்படுத்துபவரே வெகுமதியானவர் ...

----------இறையன்பு ஐஏஎஸ்

 பொது அறிவு

ஆகஸ்ட் 6 - ஹிரோஷிமா தினம்
ஆகஸ்ட் 9 - நாகசாகி தினம்

1. ஜப்பானில் உள்ள ஹிரோஷிமா, நாகசாகி ஆகிய இரு நகரங்களின் மீது வீசப்பட்ட அணுக்குண்டுகள் எவை?

ஹிரோஷிமா - Little boy
நாகசாகி. -  Fat man
(இரண்டாம் உலகப்போரின் போது அமெரிக்காவினால் வீசப்பட்டது)

2. இவ்விரண்டு அணுக்குண்டுகளும் எதனால் செய்யப்பட்டவை?

Little boy - யுரேனியம்
Fat man - புளூட்டோனியம்

English words & meanings

Umbrella bird - a bird which has umbrella like crest at it's top.
வடக்கு மற்றும் மத்திய அமெரிக்க காடுகளில் வாழும் குடை பறவை.
இதன் தலையில் காணப்படும் கொண்டையை குடை போல விரிக்கும்.
அழியும் நிலையில் உள்ள பறவை.

ஆரோக்ய வாழ்வு

குங்குமப்பூ  - தினமும் ஒரு சிட்டிகை தேனில் கலந்து சாப்பிட ரத்தம் சுத்தி ஆகும்.

Some important  abbreviations for students

min -   minute or minimum

vs -   versus

நீதிக்கதை

சுடரொளி ஒரு பள்ளி  பருவ மாணவன் ஒரு நாள் கா... கா.... என்று கத்திக்கொண்டு ஒரு காகம் பறந்து வந்தது அவன் வீட்டின் அருகிலுள்ள மரக்கிளையில் அமர்ந்தது.

சுடரொளி அந்தக் காகத்தைப் பிடிக்க ஆசைபட்டு,  பிடிக்க ஓடினான். உடனே அது பறந்து சென்றது. சுடரொளி திரும்பி வந்து காத்திருந்தான். அந்தக் காகம் மீண்டும் அங்கு வந்து அங்கும் இங்கும் நடந்தது. சுடரொளி தான் தின்று கொண்டிருந்த வடையைப் பிய்த்துக் காகத்துக்குப் போட்டான்.

காகம் வேகமாக ஓடி வந்தது. வடையைக் கொத்திக் கொண்டு பறந்தோடியது. சுடரொளிக்கு அந்தக் காகத்தைப் பிடிக்க வேண்டும் என்ற ஆசை எழுந்தது. வெகுநேரம் காத்திருந்தான். அந்தக் காகம் மீண்டும் வரவேயில்லை.

இரண்டாம் நாள் அந்த இடத்திற்கு, அதே நேரத்திற்கு அந்தக் காகம் வந்தது. அங்கும் இங்கும் நடந்தது. இன்று அந்தக் காகம் கைக்கு எட்டும் தொலைவிற்குள் நடந்து வந்தது. சுடரொளி தன்னிடம் இருந்த நிலக்கடலையை காகத்தின் முன் வீசினான். காகம் தலையைச் சாய்த்துச் சாய்த்துப் பார்த்துக் கொண்டே ஒவ்வொரு கடலையாகக் கொத்தித் தின்றது. சுடரொளி அருகில் சென்றதும் உடனே பறந்தோடியது.

மூன்றாம் நாளும் அந்தக் காகம் அந்த இடத்துக்கு, அதே நேரத்துக்கு வந்தது. இன்று அச்சப்படாமல் காகம் சுடரொளியின் அருகில் வந்தது. சுடரொளியின் கையை ஆவலோடு பார்த்தது. சுடரொளி வீட்டிற்குள் சென்று அரிசியை எடுத்து வந்து போட்டான். காகம் பொறுமையாக ஒவ்வொரு அரிசியாகப் பொறுக்கித் தின்றது. சுடரொளி காகத்தைப் பிடிக்க எழுந்தான். காகம் பறந்தோடியது.

ஒவ்வொரு நாளும் காகம் சரியான நேரத்துக்கு வந்தது. சுடரொளியும் காகமும் நண்பர்களானார்கள். சுடரொளி சொல்லுவதைக் கேட்டுக் காகம் புரிந்து கொண்டது போலத் தலையை ஆட்டும்.

சரியான நேரத்துக்கு வரும் காகத்தைக் கண்டு சுடரொளி வியந்தான். காகத்தால் எப்படி முடிகிறது? மணிக்கூடு இல்லை, பேசத் தெரியாது, எழுதத் தெரியாது,ஆனால் சரியான நேரத்துக்கு அந்தக் காகம் எப்படி வந்து போகிறது. சுடரொளி வியந்தான்.தனது நண்பனான காகத்தைப் போல, தானும் சரியான நேரத்துக்குப் பள்ளிக்குச் செல்வது, அனைத்து வேலைகளையும் சரியான நேரத்தில் தொடங்குவது என முடிவு எடுத்துக் கொண்டான்.சரியான நேரத்துக்குப் பள்ளிக்கு வந்து அனைத்தையும் முறையாகச் செய்யும் சுடரொளியை அனைவரும் பாராட்டினார்கள்.

நேரத்தை தவறவிடுவது, வாழ்க்கையை தொலைத்து விடுவதற்குச் சமம். காலம் கண் போன்றது. கடமை பொன் போன்றது என்பது பழமொழி. அதற்கேற்ப நாம் காலத்தின் அருமையை உணர்ந்து செய்யும் வேலையை சிறப்பாகவும், விரைவாகவும், சரியான நேரத்திலும் செய்ய வேண்டும்.

வெள்ளி
சமூகவியல்



இந்தியப் பெருங்கடலின் மொத்த பரப்பளவு 73,440,000 சதுர கிலோமீட்டர்.
இந்தியப் பெருங்கடல் உலகின் மூன்றாவது பெரிய நீர்நிலை.இது பூமியின் மேற்பரப்பில் சுமார் ஐந்தில் ஒரு பகுதியை உள்ளடக்கிய   நீர்நிலை ஆகும்.

இன்றைய செய்திகள்

09.08.2019

* முன்னாள் ஜனாதிபதி பிரணாப் முகர்ஜிக்கு பாரத ரத்னா விருதை வழங்கினார் குடியரசு தலைவர் ராம்நாத் கோவிந்த்..!

* மேற்குத் தொடர்ச்சி மலைப்பகுதிகளில் கன, அதி கன மழைக்கு வாய்ப்புள்ளது என்று சென்னை வானிலை மையம் தெரிவித்துள்ளது.

* மோட்டார்சைக்கிளில் ஹெல்மெட் அணியாமல் சென்றால் இனி ரூ.100-க்கு பதில் ரூ.1000 அபராதம் விதிக்கப்படும். இதற்கான அரசாணை விரைவில் வெளியிடப்பட உள்ளது.

* ரஷியாவில் நடைபெற உள்ள பெண்கள் உலக கோப்பை குத்துச்சண்டை சாம்பியன்ஷிப் போட்டிக்கான இந்திய அணியில் மேரிகோம் தேர்வு செய்யப்பட்டுள்ளார்.

* தேர்தல் முறைகேடு விவகாரத்தை குறிப்பிட்ட காலக்கெடுவுக்குள் தீர்க்க முடியாததால் இந்திய வில்வித்தை சங்கத்தை சஸ்பெண்ட் செய்தது வில்வித்தைக்கான உலக அமைப்பு.

Today's Headlines

🌸President Ramnath Govind awarded the Bharat Ratna award  to the former President Pranab Mukherjee

 🌸The Chennai Meteorological Department said that heavy rainfall is expected in the Western Ghats,

 🌸If you do not wear a helmet while riding a motorcycle, you will be fined Rs.1000 Instead of100.The order for this will be released soon.

 🌸 Marikom has been selected to the Indian team for the Women's World Cup Boxing Championships in Russia.

 🌸 The World Organization for Archery has suspended the Archery Association of India for failing to address the issue of election malpractice within a specified time frame.

Prepared by
Covai women ICT_போதிமரம்