Monday 27 July 2015

பணத்தை ரீபண்ட்’ பெற விரும்பினால் ‛ஆன்-லைன்’மூலமே வருமான வரி தாக்கல்

தமிழ்நாடு தொடக்கப் பள்ளி ஆசிரியர் கூட்டணி - திருமருகல்


          வருமான வரம்பு ரூ.5 லட்சத்துக்கு மேற்பட்டவர்களும்,வருமான வரி பிடித்தம் செய்ததை திரும்ப பெற விரும்புபவர்களும்ஆன்-லைன்’ மூலம் மட்டுமே வருமான வரித்தாக்கல் செய்யவேண்டும் என வருமான
வரித்துறை அறிவித்துள்ளது.

      இதுகுறித்துசென்னையில் உள்ள வருமான வரித்துறைஅலுவலகம் இன்று வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு:

வருமான வரித் தாக்கல் வருமானவரி அலுவலகத்தில்நேரடியாகவும்கணினி ஆன்-லைன்’ மூலமும் செலுத்தும் வசதிஉள்ளதுஎனினும்ரூ.5 லட்சத்துக்கும் மேற்பட்ட வருமானம்பெறுபவர்கள்வருமானவரி பிடித்தம் செய்ததை திரும்ப பெறவிரும்புபவர்கள் (ரீபண்ட்மற்றும் வியாபாரம்தொழில் மூலம்வருமானம் பெறுபவர்கள் ஆகியோர் ஆன்-லைன்’ மூலம் மட்டுமேவருமானவரித் தாக்கல் செய்ய வேண்டும். 80 வயதுக்குஉட்பட்டவர்களுக்கு மட்டுமே மேற்கண்ட இந்த விதிகள் பொருந்தும்.

மேலும்வருமான வரி செலுத்துபவர்கள் தங்களுடைய வருமானவரிதாக்கல் செய்வதற்கான அலுவலகங்கள் குறித்து புதிதாகவரையறுக்கப்பட்டுள்ள எல்லை குறித்து கண்டறியwww.tnincometax.gov.in என்ற இணையதளத்தில் சென்று Know Your Jurisdiction’ என்பதை கிளிக் செய்து தெரிந்து கொள்ளலாம்.


இவ்வாறு செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment