Wednesday 8 October 2014

மூன்று அறிஞர்களுக்கு இயற்பியலுக்கான நோபல் பரிசு அறிவிப்பு

தமிழ்நாடு தொடக்கப் பள்ளி ஆசிரியர் கூட்டணி - திருமருகல்


                  ஜப்பான் நகோயா பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த இசாமு அகாசகி மற்றும் ஹிரோசி அமானோ  அமெரிக்க கலிபோனியப் பல்கலைக்கழக விஞ்ஞானி ஷுஜி நகமுரா உள்ளிட்ட மூன்று இயற்பியல் அறிஞர்களுக்கு நோபல் பரிசு வழங்கப் படுகிறது.


                 சுற்றுச்சூழலுக்குப் பாதிப்பை ஏற்படுத்தா புதிய எரி சக்தியான நீல ஒளியை உமிழும் டயோடுகளைக் கண்டுபிடித்ததற்காக நோபல் பரிசுக்கு தேர்ந்தெடுக்கப் பட்டுள்ளனர். . இந்த பரிசை  டிசம்பர் 10-ந் தேதி சுவீடன் தலைநகர் ஸ்டாக்ஹோமில் நடக்கும் விழாவில் சுவீடன் அரசர் வழங்குகிறார்
இலக்கியத்திற்கான நோபல் பரிசு நாளை(வியாழக்கிழமை அறிவிக்கப்படுகிறது. முன்னதாக நேற்று மருத்துவத்திற்காக நோபல் பரிசு அறிவிக்கப்பட்டது. மூளை நரம்பு செல் தொடர்பான கண்டுபிடிப்புக்காக, பிரிட்டிஷ்-அமெரிக்க விஞ்ஞானியான ஜான் ஓகீப் மற்றும் நார்வேயை சேர்ந்த மருத்துவ ஆய்வுத்தம்பதியான எட்வர்ட் மோசர், மே-பிரிட் மோசர் உள்ளிட்டோர் கூட்டாக பகிர்ந்து கொள்கின்றனர்.

No comments:

Post a Comment