Friday 18 September 2015

"ஆப்பிள்" :அனைவரிடத்திலும் இனி 'ஐபோன்'

தமிழ்நாடு தொடக்கப் பள்ளி ஆசிரியர் கூட்டணி - திருமருகல்


          பிரதமர் நரேந்திர மோடி, இம்மாத இறுதியில் அமெரிக்காவிற்கு சுற்றுபயணம் மேற்கொள்ள உள்ளார். அங்கு அதிபர் பராக் ஒபாமா உள்ளிட்ட முக்கிய அரசியல் பிரபலங்களையும், முன்னணி தொழிலதிபர்களையும் சந்திக்க உள்ளார். 
             இணையதள ஜாம்பவான கூகுள் நிறுவனத்தின் புதிய தலைமை செயல் அதிகாரியாக நியமிக்கப்பட்டுள்ள சுந்தர் பிச்சை மற்றும் பேஸ்புக் நிறுவனர் மார்க் ஜூக்கர்பெர்க் உள்ளிட்டோரை சந்தி்த்துப்பேச உள்ளதாக சமீபத்தில் தெரிவிக்கப்பட்டிருந்தது.
இந்நிலையில், 'மேக் இன் இந்தியா' திட்டத்தின் கீழ், ஆப்பிள் நிறுவனத்தின் புதிய உற்பத்தி யூனிட்டை, மகாராஷ்டிரா மாநிலத்தில் அமைக்கும் பொருட்டு, சிலிக்கான் வேலியில் ஆப்பிள் நிறுவன சி.இ,ஓ., டிக் குக்கையும் பிரதமர் மோடி சந்தி்த்துப் பேச உள்ளார். 
மேக் இன் இந்தியா திட்டத்தின் கீழ், சர்வதேச நிறுவனங்கள் இந்தியாவில் தங்களது யூனிட்களை துவங்க முன்வந்துகொண்டிருக்கின்றன. ஆப்பிள் நிறுவனமும், இந்தியாவில் யூனிட்டை துவங்க திட்டமிட்டுள்ளது. பிரதமர் மோடியின் அமெரிக்க பயணத்தில் இதற்கு இறுதி வடிவம் கொடுக்கப்பட உள்ளது.
ஆப்பிள் நிறுவனம்,இந்தியாவில் 5 பில்லியன் அமெரிக்க டாலர்கள் அளவிற்கு முதலீடு செய்ய திட்டமிட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
மோடி - குக் இடையேயான சந்திப்பின் போது, இந்தியாவில், ஆப்பிள் நிறுவன ஆராய்ச்சி யூனிட் மற்றும் உற்பத்தி யூனிட் அமைப்பது குறித்த ஒப்பந்தம் கையெழுத்தாக உள்ளது.
ஆப்பிள் நிறுவன சி.இ.ஓ. டிம் குக்கை சந்திக்க இருக்கும் முதல் இந்திய ரதமர் மோடி என்பது குறிப்பிடத்தக்கது.
ஐபோன்கள் இந்தியாவிலேயே உற்பத்தி செய்யப்பட்டால், அதன் விலை கணிசமாக குறையும். இதன்காரணமாக, பலரின் கைகளிலும், ஐபோன் இருக்கும் என்பதில் சந்தேகமுமில்லை.

No comments:

Post a Comment