Thursday 10 September 2015

நஞ்சாகும் உணவு குறித்து சில உண்மைகள்!

தமிழ்நாடு தொடக்கப் பள்ளி ஆசிரியர் கூட்டணி - திருமருகல்

நஞ்சாகும் உணவு குறித்து சில உண்மைகள்!

நன்றி - .செந்தமிழன்
உணவைப் பற்றிய எண்ணற்ற உண்மைகளில்ஒருசிலவற்றையாவது வெளிப்படுத்த வேண்டும் எனஎண்ணுகிறேன்.

   விளம்பரங்கள்மருத்துவப் பரிந்துரைகள்சங்கிலித் தொடர்சந்தைப்படுத்தல்கள் (chain link marketing) உள்ளிட்டபலவகையான உத்திகள் வழியாக உங்கள் உணவாக மாறிக்கொண்டுள்ள ‘சரக்குகள்’ அனைத்துமே தடை செய்யப்படவேண்டியவைதான்அரசாங்கம்தான் இவற்றையெல்லாம்தடை செய்ய வேண்டும் என நினைக்காமல்நீங்களே அவற்றைநிராகரிக்க வேண்டும்அதுதான் உண்மையான தடை.
ஒரு வணிக உணவில் ஏதேனும் சில வேதிப் பொருட்கள்மிகையாக இருப்பதாகவும் அந்தக் காரணத்தினால் அந்தஉணவைத் தடை செய்வதாகவும் அரசும்சில அமைப்புகளும்கூறுவதை இப்போதும் நம்பிக் கொண்டிருக்கிறீர்கள் என்றால்,நீங்கள் பரிதாபத்துக்குரியவர்ஏனெனில்வேதிப் பொருட்கள்இல்லாத வணிக உணவு என எதுவுமே இல்லைஎல்லாவணிகப் பண்டங்களும் வேதி வினைகளுக்கு ஆட்பட்டுத்தான்தயாரிக்கப்படுகின்றன.
அரசாங்கமும் அதன் துணை நிறுவனங்களும் எப்போதும்கூறும் வாசகத்தை நினைவுபடுத்திப் பாருங்கள், “அந்த உணவுவகையில் குறிப்பிட்ட வேதிப் பொருள் ‘அனுமதிக்கப்பட்டஅளவைக் காட்டிலும்’ அதிகமாக உள்ளது” என்பதுதான் அந்தவாசகம்இதைக் ’கண்டுபிடிப்பதற்கு’ எவரேனும் ஒருதன்னார்வலர் ஆய்வகங்களுக்கு அலைய வேண்டும்,நீதிமன்றங்களுக்கு நடக்க வேண்டும்ஊடகங்களை நாடவேண்டும்.
அனுமதிக்கப்படும் அளவு’ என்றால் என்னஎந்தப்பரிசோதனைகளின் அடிப்படையில் அவைதீர்மானிக்கப்படுகின்றனஇந்த அளவு வேதிப் பொருட்களைஅனுமதித்தால் தீங்கில்லை என நம்பும்படியான ஆதாரங்கள்யாவைஆகிய கேள்விகளை உங்களால் சிந்திக்க முடிகிறதா!
உங்கள் சிந்தனைப் போக்கு அறிவுவயப்பட்டதுஏதேனும் ஒருபுள்ளிவிவரத்தை எடுத்து வீசினால் நீங்கள் ஏமாந்துபோவீர்கள்.சில வேதிப் பொருட்களின் பெயர்கள்சில ஊட்டச் சத்துவகைகள்அயல் நாட்டு அறிக்கைகள்பெருநிறுவனஅறிவிப்புகள்பிரபலங்களின் வாக்குறுதிகள் ஆகியவற்றைநம்பும் வகையில்தான் நீங்கள் வளர்த்தெடுக்கப்பட்டுஇருக்கிறீர்கள்.
உணவில் ஏன் வேதிப் பொருட்களைக் கலக்கிறீர்கள்உணவுஎன்பதே இயற்கையின் கொடைதானேஅது ஏன் செயற்கைத்தன்மையானதாக மாற்றப்படுகிறதுஎன்ற கேள்வி மிகவும்எளிமையானதுஒருவகையில் இது பாமரத்தனமான கேள்வி.இந்தக் கேள்விக்கு எந்த அரசாங்கமும் பெருநிறுவனமும்விடையளிக்காதுஅவர்களுக்கு விடை தெரியும்ஆனால்சொல்ல மாட்டார்கள்ஏனெனில்அந்த விடையில்தான் மனிதஉயிர்களோடு விளையாடிமக்களின் உடல்நலனைச்சூறையாடிக் கொள்ளையடிக்கும் தந்திரம் ஒளிந்துள்ளது.
கெல்லாக்ஸ் சோளத்தில் இரும்புச் சத்து அதிகமாக உள்ளதுஎன விளம்பரம் செய்யப்படுகிறதுஹிஸ்டரி சேனல் எனும்தொலைக்காட்சிக் குழுவினர் கெல்லாக்ஸ் நிறுவனத்தொழிற்சாலைக்குச் சென்று ஓர் ஆவணப்படம் எடுத்தார்கள்.நிகழ்ச்சித் தொகுப்பாளர் கேட்ட பல கேள்விகளுக்கு அந்தத்தொழிற்சாலைப் பிரதிநிதி விடை தந்தார்ஒரே ஒருகேள்விக்குப் பதிலளிக்க மறுத்துவிட்டார். ‘உங்கள் சோளப்பொரி உணவில் மிகையான அளவுக்கு இரும்புச் சத்து உள்ளது.இந்த இரும்புச் சத்தினை எந்தப் பொருளிலிருந்து எடுத்து,சோளத்தில் கலக்கிறீர்கள்?’ என்பதுதான் அக்கேள்வி.
இயற்கையான அளவைக் காட்டிலும் கூடுதலான இரும்புச்சத்து கெல்லாக்ஸ் சோளத்தில் இருப்பதால் அந்தக் கேள்விஎழுப்பப்பட்டதுஇதற்கு அந்த நிறுவனப் பிரதிநிதியின் பதில், ‘அதைச் சொல்ல முடியாதுஏனெனில் அது எங்கள் தயாரிப்புஇரகசியம்’.
இப்படி ஒரு பதிலை அவர்களால் வெளிப்படையாகக் கூறமுடிகிறதுஇரும்புச் சத்து எனும் வாசகத்தை நீங்கள்கவனிக்கிறீர்கள்அந்தச் ‘சத்து’ எந்தப் பொருளிலிருந்துஎடுக்கப்பட்டது என்பதைப் பற்றிய சிந்தனை உங்களில்பலருக்கு இருப்பதில்லைஉங்களுக்கு ஊட்டப்பட்டதுஇப்படியான அரைவேக்காட்டு அறிவு.
பிராய்லர் கோழியில் புரதம் இருக்கிறதுபாலில் சுண்ணாம்புச்சத்து இருக்கிறதுஊட்டச் சத்து பானங்களில் பல்லூட்டச்சத்துகள் (multi nutrients) உள்ளன என்றெல்லாம்அறிவிக்கப்படுகிறதுஇந்தச் சத்துகள் எல்லாம் எந்தப்பொருட்களின் மூலத்திலிருந்து வருகின்றன என எவரும்அறிவிப்பதில்லைநவீன அறிவியல் என்பதே மோசடிகளின்பாதுகாப்பு வளையம்தான் என்பது என்னைப் போன்றமுட்டாள்களின் கருத்துவிலங்குகளின் எலும்புகளிலிருந்துதயாரிக்கப்படும் சுண்ணாம்புச் சத்து பல உணவுகளில்கலக்கப்படுகிறதுஅவை மனிதர்களுக்கானவையே அல்ல.பேராற்றலின் படைப்பில்ஒவ்வொரு உயிரினத்திற்கெனவும்சத்து வகைகளும் அளவுகளும் தனித்துவத்துடன்வடிவமைக்கப்பட்டுள்ளன.
புரதச் சத்துதான் பாம்பின் உடலில் உள்ள நஞ்சுபாம்புகளின்கழுத்திலிருந்து நஞ்சை எடுத்து உணவில் கலந்துவிட்டு, ‘இதுபுரதச் சத்து மிக்க உணவு’ எனத் தம்பட்டம் அடிக்க முடியாது.எளிதில் செரிக்க இயலாத அடர்த்தியான புரதம் பாம்புகளின்கழுத்தில் படைக்கப்பட்டுள்ளதுஇந்தப் புரதத்தைத் தன்இரையின் மீது பாம்பு செலுத்தும்போதுஅந்த இரையின்இரத்தத்தில் அடர் புரதம் எனும் நஞ்சு கலக்கிறதுசெரிக்கஇயலாத அளவுக்கு அடர்த்தியான புரதம் என்பதால் இரைமயங்குகிறது அல்லது இறந்துபோகிறது.
எந்த உயிரியின் மீது எவ்வளவு நஞ்சு செலுத்த வேண்டும்என்பதைப் பாம்புகள் அறிந்து வைத்துள்ளனகாட்டு முயலின்மீது செலுத்தும் அளவுக்கான நஞ்சினைச் சிறு எலியின் மீதுபாம்புகள் செலுத்துவதில்லை. ‘அனுமதிக்கப்படும் அளவுஎன்ற கருத்தினைப் பாம்புகள் மிகச் சரியாகக்கடைப்பிடிக்கின்றன.
நவீன அறிவியல் பெயரிட்டு அழைக்கும் சத்துகள்பொதுவானவைஆனால்அவை எந்த உயிரியில் இருந்துஎடுக்கப்படுகின்றன என்பதைப் பொறுத்து அவற்றின்தன்மைகள் முற்றிலும் மாறுபடுகின்றனநீங்கள் வாங்கிஉண்ணும் எல்லா வணிகப் பண்டங்களும் இவ்வாறானஇரகசியமான’ சத்துகளைக் கலந்து தயாரிக்கப்படுபவைதான்.
சில உணவுப் பண்டங்கள் ‘அனுமதிக்கப்பட்ட அளவைமீறியதால்தான் இப்போது தடை செய்யப்பட்டுள்ளன என்பதைமீண்டும் நினைவூட்ட விரும்புகிறேன்நிச்சயமாகஇந்தஉணவுப் பொருட்களில் கலக்கப்பட்டுள்ள பல்வேறுஉட்பொருட்களின் மூலப் பொருட்கள் எவைஅவைமனிதர்களின் உணவாகும் தகுதி உள்ளவையாஆகிய இரண்டுகேள்விகளும் இன்னும் கேட்கப்படவே இல்லைகேட்டாலும்பதில் கிடைக்காதுபன்னாட்டு வணிகச் சட்டங்கள் இந்தஇரகசியங்களைப் பாதுகாக்கின்றனஇவற்றுக்குக்காப்புரிமை’ எனும் மதிப்பு மிக்க பெயர் உள்ளது.
ஆகஉள்ளே என்ன கலக்கப்பட்டிருக்கிறது என்பதேதெரியாமல் பொருட்களை வாங்கி உண்ணும் ஏமாளித்தனமானசமூகம் இப்போது உருவாகியுள்ளது.
இந்தச் சமூகம்தான் பாட்டி கடைகளில் விற்கப்பட்ட இலந்தைப்பழங்களில் ஈக்கள் மொய்ப்பதைக் கண்டுஅவைஅசுத்தமானவை என வெறுத்து ஒதுக்கியது.
பெரு நிறுவனங்களின் வணிக உணவுப் பண்டங்கள் மீது ஈக்கள்அமர்வதில்லைஈக்கள் நஞ்சு உணவுகளை வெறுக்கின்றன.ஏனெனில் ஈக்கள் படிப்பதும் இல்லைவிளம்பரங்களுக்கும்மருத்துவ அறிவுரைகளுக்கும் ஏற்ப ஆடுவதுமில்லைசுருங்கச்சொன்னால்ஈக்களும் பலவகைப் புழுக்களும் கொசுக்களும்பகுத்தறிவு இல்லாத உயிரினங்கள்.
அவற்றுக்குத் தெரிந்த ஒரே ஒரு மந்திரம், ‘உணவுபடைக்கப்படுகிறதே தவிரதயாரிக்கப்படுவதில்லைஎன்பதுதான்.
இந்தக் கட்டுரையின் வழியாக உங்களிடம் நான் முன்வைக்கும்சேதி என்னவெனில்வணிகப் பண்டங்களை அரசாங்கம்தான்தடை செய்ய வேண்டும் எனக் காத்திருக்காதீர்கள்நீங்களேஅவற்றைத் தடை செய்ய முடியும்எந்த நிறுவனம்தயாரித்தாலும் பால்நெய்இறைச்சி உள்ளிட்ட அனைத்துஉணவுப் பொருட்களையும் நிராகரியுங்கள்.
நன்றி - .செந்தமிழன்
வாசகர்களின் கருத்துக்கள்:
இளவேனில் சௌ :
என்டோசல்பானை பயன்படுத்த சொன்ன அரசுதான் பிறகுஅதற்கு தடை விதித்ததுபுட்டிப்பாலை ஊக்குவித்த அரசு தான்தாய்ப்பாலே சிறந்தது என்று சொல்கிறதுவேதிப் பொருள்கலப்பதால்தான் பையில் அடைத்து ‘பதப்படுத்தி’ உணவுபண்டங்களை விற்க முடியும்அதன் மூலம் வரும் லாபமாஉண்போரின் உடல்நலமா என்று வரும்போது உண்போரின்உடல்நலத்தில் பெரு நிறுவனங்களுக்கு ஏதக்கறை.
Umanaath Venkatachalam :
இதைவிட மிகத்தெளிவாக யாராலும் விவரிக்க முடியாது....அமெரிக்காவில் அனுமதிக்கப்படும் வேதிப்பொறுளின் அளவும்இந்தியாவில் அனுமதிக்கப்பட்ட வேதிப்பொறுளின் அளவும்மாறுபடுகிறது... இந்த சிரிய உதாரணமே நமக்கு பலவற்றைவிளக்கும்.
Nanda Kumar :
மனிதனை மனிதனே மாய்க்கும் இந்த மருந்துக் கலப்படஉணவுகள் ஒழியட்டும்எல்லோரும் சுயநலமின்றிபொதுநலத்தோடு இயற்கைஉணவுகள் உற்பத்திசெய்யட்டும்.மனிதகுலம் மகிழ்ச்சியுடன் வாழ இனியாவது இதைபின்பற்றட்டும்.
Abdul Noordheen :
நம்மால் என்ன செய்ய முடியும்என்பது பலரின் வினா.நம்மால் முடியும் என்பதை செந்தமிழன் தெளிவாகசொல்கிறார். 'பன்னாட்டுக் கம்பெனி தயாரிப்புக்களைப்புறக்கணிப்பீர்குறிப்பாக டி.வியில் விளம்பரத்தில் வரும் எந்தஉணவுப் பொருட்களையும் வாங்காதீர்மிளகாய்ப் பொடிவேண்டுமாமிளகாய் வாங்கி அரைத்துக் கொள்ளுங்கள்.எண்ணெய் வேண்டுமாசெக்குக்கு சென்று ஆட்டிகொள்ளுங்கள்இப்படி சுயமாக தயாரியுங்கள் அல்லது உங்கள்ஊரில் உங்களுக்கு தெரிந்த நம்பிக்கைக்குரியவர்களிடமிருந்துவிலைக்கு வாங்கி உபயோகியுங்கள்நன்றி செந்தமிழன் ஐயா.
மேலும் பல மருத்துவ தகவல்களுக்கு:
கழிவின் தேக்கம் வியாதி
கழிவின் வெளியேற்றம் குணம்
நமது வாழ்க்கை முறையில் சில விஷயங்களைஒழுங்குபடுத்துவது மூலமாக மட்டுமே ஆரோக்யமாகவாழ்வது சாத்தியமாகும்.
இதை மக்களுக்கு புரியவைப்பதே எனது நோக்கம்.
இந்த தகவல்கள் உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள்நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்
மருந்துக்களின்றி ஆரோக்கியமாக வாழ விரும்புவோர் கீழேஉள்ள எண்ணுக்கோ / ஈமெயில்க்கோ தொடர்பு கொள்ளலாம்.
Thanks & Regards,
Vineeth.S
+91 98409 80224
+91 97509 56398
vineeth3d@gmail.com

No comments:

Post a Comment