Tuesday 6 May 2014

மாணவர் சேர்க்கை விளம்பரங்கள்: அரசுப் பள்ளிகளுக்கு உத்தரவு

மாணவர் சேர்க்கை விளம்பரங்கள்: அரசுப் பள்ளிகளுக்கு உத்தரவு

       தமிழகம் முழுவதுமுள்ள அரசுப் பள்ளிகளில் முதல் வகுப்பில் மாணவர்கள்சேர்க்கையை அதிகரிக்க பல்வேறு நடவடிக்கைகளை பள்ளிகள் மேற்கொள்ளகல்வித் துறை உத்தரவிட்டுள்ளது.
 
         மெட்ரிக் பள்ளிகளின் பெருக்கத்தாலும்அவை மேற்கொள்ளும்பல்வகை விளம்பர உத்திகளாலும் அரசுப் பள்ளிகளில் மாணவர் சேர்க்கைவிகிதம் குறைந்து வருகிறதுஇந்நிலையில்மாணவர் சேர்க்கையை அதிகரிக்கபுதிய உத்திகளைக் கையாள கல்வித் துறை அறிவுறுத்தியுள்ளதுஇதுதொடர்பாகதமிழ்நாடு தொடக்கக் கல்வி இயக்குநர்அனைத்து மாவட்டதொடக்கக் கல்விஅலுவலர்களுக்கும் அனுப்பியுள்ள சுற்றறிக்கையில் கூறியிருப்பதாவது:

                   அரசுப் பள்ளிகளில் பயிலும் மாணவர்களுக்கு தரமான கல்விவழங்கவும்இடைநிற்றலைக் குறைக்கவும்மாணவர் சேர்க்கையைஅதிகரிக்கவும் தமிழக அரசு 14வகையான விலையில்லாத் திட்டங்களைச்செயல்படுத்தி வருகிறது.எனவேபள்ளிகள் அதன் அருகேயுள்ளகுடியிருப்புகளில் உள்ள குழந்தைகளை அரசுப் பள்ளிகளில் சேர்ப்பதற்குநடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்இதற்காக மாணவர் சேர்க்கை தொடர்பானவிளம்பரங்களை பொதுமக்கள் தெரிந்துகொள்ளும் வகையில் விளம்பரம்செய்தல் வேண்டும்.

                     சேர்க்கை தொடர்பான துண்டுப் பிரசுரங்களை வழங்குவதுடன்,முக்கியப் பகுதிகளில் பேனர்களை வைக்க வேண்டும்மேலும்மாணவர்சேர்க்கை ஊர்வலத்தையும் நடத்த வேண்டும் என சுற்றறிக்கையில்கூறப்பட்டுள்ளது

No comments:

Post a Comment