Sunday 4 May 2014

தேர்தல் பாதுகாப்பு குறைபாடால் பறிபோன உயிர்?: கலங்கித் தவிக்கும் அரக்கோணம் ஆசிரியையின் குடும்பம்


கணவர் மற்றும் குழந்தைகளுடன் ஆசிரியை பூங்கொடி. (கோப்புப் படம்)
கணவர் மற்றும் குழந்தைகளுடன் ஆசிரியை பூங்கொடி. (கோப்புப் படம்)
ஆசிரியை பூங்கொடி. ஜூன் 4-ம் தேதி நடக்கும் மகள் சரண்யா வின் நிச்சயதார்த்த வேலைகளை தொடங்க திட்டமிருந்த நிலையில் ஏப்.24-ம் தேதி தேர்தல் பணி அழைத்தது. பணி முடிந்து மாலையில் வீடு திரும்புவார் என காத்திருந்த அவரது கணவர் அன்பழகனுக்கு பூங்கொடி வருவதற்கு பதிலாக அவரது இறப்பு செய்திதான் வந்தது. உருக் குலைந்து போனது ஒட்டுமொத்த குடும்பமும்.
இது ஏதோ பணிக்கு சென்ற ஒரு பெண் ரயில் மோதி இறந்துவிட்டார் என்ற வெறும் விபத்து செய்தி அல்ல. இதன் பின்னணியில் தேர்தல் பணிகளின் குறைபாடுகள் குறித்த அம்சங்கள் பற்றிய விவாதங்கள் கிளம்பியுள்ளன. மனைவியை இழந்த துயரத்திலிருந்த மீண்டு வராத அன்பழகனை ‘தி இந்து’ சார்பில் தொடர்பு கொண்டோம்.
அவர் கூறுகையில், ‘தேர்தல் கமிஷன் எனது மனைவிக்கு மட்டு மல்லாமல் தேர்தல் பணியிலிருந்த எல்லா பெண்களுக்கு உரிய பாதுகாப்பு வழங்க தவறிவிட்டது என குமுறினார்.
மேலும் “எனது மனைவி பூங்கொடி 1997-ம் ஆண்டு முதல் தேர்தல் பணிக்கு சென்று வருகிறார். எப்போதும் ஆசிரியர்களின் வசிப் பிடங்களுக்கு அருகிலேயே வாக்குச்சாவடிகள் இருக்கும். கடந்த இரண்டு தேர்தல்களாக தான் நம்பகத்தன்மையை காரணம் காட்டி ஒரு பகுதியில் வசிக்கும் ஆசிரியர்களை வேறு பகுதிகளுக்கு நியமிக்கின்றனர். இதனால் பாதுகாப்பு குறைபாடு, போக்குவரத்து வசதியின்மை என பல பிரச்சினைகளை சந்திக்க நேரிடுகிறது” என்றார்.
மனைவி இறந்து பற்றி நம்மிடம் கூறிய அவர், “நாங்கள் வசிக்கும் பகுதி அரக்கோணம். தேர்தல் பயிற்சி முகாம் அரக்கோணத்திற்கு அருகிலேயே நடந்தது.
இந்நிலையில் வாணியம்பாடி அருகில் உள்ள தும்பேரி ஊராட்சி பள்ளியில் அவருக்கு பணி ஒதுக்கப்பட்டுள்ளதாகவும் அதற்கான ஆணையை பெற்றுக் கொள்ள ஏப்.23-ம் தேதி காலை 9 மணிக்கு வருமாறும் அழைப்பு வந்தது. இதன்பேரில் அதிகாலை யிலேயே புறப்பட்டு சென்ற அவர் ஆணையை பெற்றுக்கொண்டார். மறுநாள் தேர்தல் நாளில் காலை 6 மணிக்கே இருக்க வேண்டும் என்பதால் அங்கேயே ஏற்பாடு செய்யப்பட்டிருந்த பள்ளியில் இரவில் தங்கிவிட்டார்.
மறுநாள் தேர்தல் முடிந்து பூங்கொடியிடம் போனில் பேசிய போது மணி இரவு 9.30. அதுவரை வாக்குப்பெட்டிகளை எடுப்பதற்கு அதிகாரிகள் வரவில்லை என்று சொன்னார். பின்னர் 10.30 மணிக்கு பணியில் இருந்த ஆசிரியர் கள் லிப்ட் கேட்டு ஒருவழியாக வாணியம்பாடி ரயில் நிலையத் துக்கு வந்துள்ளனர்.
அவர்கள் இரவு 12.30 மணி வரை ரயில் நிலையத்தில் இருந்தனர். அப்போது சிறுநீர் கழிப்பதற்காக அவர் 3-வது நடைமேடைக்குச் சென்றுவிட்டு திரும்புகையில் எதிரில் வந்த காவேரி எக்ஸ்பிரஸ் ரயில் மோதி உடல் சிதைந்து மனைவி பலியானார்” என்று தழுதழுக்க அன்பழகன் கூறினார்.
“தேர்தல் ஆணையம் முறையான போக்குவரத்து வசதி யும் பாதுகாப்பும் வழங்கி இருந் தால் என் மனைவி இன்று என்னுடன் இருந்திருப்பாள். இந்த விவகாரத் தில் தேர்தல் ஆணையம் பதில் சொல்லியாக வேண்டும்” என்றார் அவர்.
போக்குவரத்து வசதி குறைவு
தேர்தல் பணியிலிருந்த பெரும் பாலான ஆசிரியைகள் தங்களுக்கு போதுமான போக்கு வரத்து வசதி செய்து தரப்பட வில்லை. பெரும்பாலானவர்கள் போக்கு வரத்துக்கு தங்கள் சொந்த காசை செலவழித்தனர் என்றனர். இந்த குற்றச்சாட்டை வேலூர் மாவட்ட ஆட்சியர் ராஜேந்திர ரத்னூ மறுத்தார். “வேலூர் மாவட் டத்தில் 159 பேருந்துகளும் 20 சிறு பேருந்துகளும் அனைத்து பகுதிகளுக்கும் இயக்கப்பட்டன” என்றார்.
தேர்தல் பணியில் ஈடுபடுபவர் களின் பாதுகாப்பை உறுதி செய்யாத தால் இன்று ஒரு குடும்பமே உருக் குலைந்து போயிருக்கிறது. இனி வருங்காலங்களில் இன்னொருவ ருக்கு பூங்கொடி நிலை ஏற்படக் கூடாது என்பதுதான் தேர்தல் பணி செய்யும் ஆசிரியர்களின் எதிர் பார்ப்பாக உள்ளது.


கோப்பு படம்
கோப்பு படம்
புகையிலை நிறுவனங்கள் நடத்தும் எந்த போட்டியிலும் பள்ளி மாணவர்கள் பங்கேற்க அனுமதி அளிக்கக் கூடாது என்று தொடக்கக் கல்வி இயக்குநர் அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளார்.
சுற்றுச்சூழல் பாதுகாப்பு, போக் குவரத்து விதிகள், எய்ட்ஸ் நோய் தடுப்பு உள்ளிட்டவை குறித்து பள்ளி மாணவ-மாணவிகளுக்கு விழிப் புணர்வு நிகழ்ச்சிகளும், போட்டி களும் நடத்தப்படுவதும் வழக்கம்.
விழிப்புணர்வு தொடர்பான பேரணிகள் மற்றும் ஊர்வலங்களில் பள்ளி மாணவர்கள் உற்சாகமாக கலந்துகொள்வார்கள். அதேபோல், இதுகுறித்த போட்டிகளிலும் மிகுந்த ஆர்வத்தோடு பங்கேற்பார்கள். அதில் வெற்றி பெறுவோருக்கு ஸ்பான்சர் செய்யும் நிறுவனங்கள் சார்பில் பரிசுகள், பாராட்டுச் சான்றி தழ்கள் வழங்கப்படும்.
பள்ளி மாணவர்களுக்கு தடை
இத்தகைய விழிப்புணர்வு நிகழ்ச் சிகளுக்கு அரசு பொதுத்துறை நிறுவனங்களும், தனியார் நிறுவனங்களும் ஸ்பான்சர் செய் வது வழக்கம். விழிப்புணர்வு தொடர்பாக நடத்தப்படும் போட்டி களுக்கு பரிசுகளையும் அந்த நிறுவனங்கள் வழங்கிவிடும்.
இந்த நிலையில், புகை யிலை மற்றும் புகையிலை சார்ந்த பொருட்களை (பீடி, சிகரெட், பான்பராக், குட்கா, கான்ஸ், மாவா) தயாரிக்கும் நிறுவனங் களால் வழங்கப்படும் பரிசுப் பொருட்களை வாங்கவும், அந்த நிறுவனங்கள் நடத்தும் எந்த விதமான போட்டியிலும் பங்கேற் கவும் ஆரம்ப, நடுநிலைப் பள்ளி மாணவர்களுக்கு தடை விதிக்கப் பட்டுள்ளது. கல்வி அதிகாரிக ளுக்கும் அனுப்பியுள்ள சுற்றறிக் கையில் கூறியிருப்பதாவது:-
இந்திய புகையிலை நிறுவனம் (ஐடிசி) நிறுவனத்தால் பள்ளிகளில் போட்டிகளில் நடத்துவதையும், அந்த நிறுவனத்தால் வழங்கப்படும் பரிசு பொருட்களையும் முற்றிலுமாக தவிர்க்க வேண்டும்.
மாவட்ட அளவிலோ அல்லது ஒன்றிய அளவிலோ புகையிலை மற்றும் புகையிலை சார்ந்த பொருட் கள் பயன்படுத்தும் நிறுவனங்கள் நடத்தும் எந்தவிதமான போட்டி களிலும் மாணவர்களை பங்குபெற அனுமதி அளிக்கக் கூடாது. இவ்வாறு அதில் கூறப்பட்டுள் ளது. இதுதொடர்பான அரசு வெளி யிட்ட வழிகாட்டி நெறிமுறை களை பின்பற்றுமாறு மாவட்ட தொடக்கக் கல்வி அதிகாரி கள் அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.

No comments:

Post a Comment