Wednesday 2 April 2014

நவோதயா பள்ளிக்கூடங்களை கொண்டு வர தொடக்கப்பள்ளி ஆசிரியர் கூட்டணி எதிர்ப்பு

நவோதயா பள்ளிக்கூடங்களை கொண்டு வர தொடக்கப்பள்ளி ஆசிரியர் கூட்டணி எதிர்ப்பு

 
            அகில இந்திய தொடக்கப்பள்ளி ஆசிரியர் கூட்டணி பொதுச்செயலாளர் சு.ஈஸ்வரன் நிருபர்களிடம் கூறியதாவது: மத்திய அரசு தொடக்கப்பள்ளிக் கூடங்களை மூடிவிட்டு நவோதயா பள்ளிக்கூடங்களை கொண்டு வர திட்டமிட்டு உள்ளது. அதற்கு ஆசிரியர் கூட்டணி தொடர்ந்து எதிர்ப்பு தெரிவித்து வருகிறது.
 
          இந்த எதிர்ப்பின் காரணமாக கர்நாடகாவில் 1,029 பள்ளிக்கூடங்களை மூடும் திட்டம் கைவிடப்பட்டு உள்ளது. மத்திய அரசு ஆசிரியர்களுக்கு இணையான ஊதியம் தமிழக ஆசிரியர்களுக்கும் வழங்க வேண்டும் என்று தொடர்ந்து கோரிக்கை விடுத்து வருகிறோம். இதுபோல் ஆசிரியர் தகுதி தேர்வு மூலம் பணி நியமனம் செய்யக்கூடாது என்பதையும் தொடர்ந்து வலியுறுத்தி வருகிறோம்.

No comments:

Post a Comment