Monday, 2 January 2017

G.O Ms.No. 122 Dt: December 28, 2016 -RESTRICTED HOLIDAYS - Inclusion of MAHALAYA AMAVASAI in the list of Restricted Holidays - Orders - Issued.

தமிழ்நாடு தொடக்கப் பள்ளி ஆசிரியர் கூட்டணி - திருமருகல்


JAN 2017 CRC : PRIMARY 21.01.2017 & UPP.PRIMARY 28.01.2017

தமிழ்நாடு தொடக்கப் பள்ளி ஆசிரியர் கூட்டணி - திருமருகல்



January 2017 Diary !!

தமிழ்நாடு தொடக்கப் பள்ளி ஆசிரியர் கூட்டணி - திருமருகல்


2-Schools reopen
7-Grievance day
9-RL-Karvin mukaithin kathar
11-RL-Arudhra dharsan
13-RL-Bogi
14-16-GH-Pongal holidays
26-GH-Republic day

தமிழக சிறார்கள் 17 பேருக்கு தேசிய பாலஸ்ரீ விருது !!

தமிழ்நாடு தொடக்கப் பள்ளி ஆசிரியர் கூட்டணி - திருமருகல்


தமிழகத்தைச் சேர்ந்த, 17 சிறார்கள், மத்திய அரசின், 'பாலஸ்ரீ' விருது பெற்றுள்ளனர்.
மேடைக்கலை, படைப்புக் கலை, அறிவியல் கலை, எழுத்துக் கலை ஆகியவற்றில், 16 வகையான உட்பிரிவுகளில் புதுமைகள் படைத்திடும், 10 முதல், 16 வயதிற்கு உட்பட்ட
சிறுவர்களுக்கு, தேசிய அளவில், 'பாலஸ்ரீ' விருது வழங்கப்படுகிறது.
இது, மத்திய அரசின் மனிதவள மேம்பாட்டுத் துறையின் கீழ் செயல்படும், தேசிய சிறுவர் மன்றத்தால் வழங்கப்பட்டு வருகிறது. தமிழக அரசின் கலை பண்பாட்டுத் துறையின், ஒரு பகுதியாக விளங்கும், தமிழ்நாடு ஜவகர் சிறுவர் மன்றத்தின் மூலம், சிறந்த சிறார்கள் தேர்வு செய்யப்படுவர். இவ்விருதுக்கான தேர்வை, மாவட்ட, மாநில அளவில் நடத்தி, தேசிய அளவிலான போட்டிக்கு அனுப்பி வைப்பர். இந்திய அளவில், 520 சிறார்கள் பங்கேற்ற தேசிய போட்டியில், 82 பேர், விருதுக்காக தேர்வு செய்யப்பட்டுள்ளனர். இதில், 17 பேர், தமிழகத்தைச் சேர்ந்தவர்கள்.

ஆசிரியர்-அரசுஊழியர்களின்

தமிழ்நாடு தொடக்கப் பள்ளி ஆசிரியர் கூட்டணி - திருமருகல்

ஆசிரியர்-அரசுஊழியர்களின் கோரிக்கைகளை வென்றெடுக்க நேற்று (27-12-2016) தமிழகத்தில் சரித்திர சாதனைகள் படைத்த " ஜேக்டோ-ஜியோ " மீண்டும் உதயமானது.

ஆசிரியர்-அரசுஊழியர்களின் கோரிக்கைகளை வென்றெடுக்க நேற்று (27-12-2016) தமிழகத்தில் சரித்திர சாதனைகள் படைத்த " ஜேக்டோ-ஜியோ " மீண்டும் உதயமானது.💥தமிழக முதலமைச்சரை சந்தித்து கோரிக்கை மனு
அளிக்க முடிவு செய்யப்பட்டுள்ளது...
💥அடுத்த கூட்டம் 10:01:2017 -ல் கூட்ட முடிவு எடுக்கப்பட்டுள்ளது...
💥10:01:2017 கூட்டத்தில் வரலாற்று சிறப்பு மிக்க போராட்டகளம் உருவாக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது

RTI - மூலம் தகவல் பெறுபவர் மற்றும் பெறப்படுபவரின் தனிப்பட்ட தகவல்களை வெளியிடக் கூடாது

தமிழ்நாடு தொடக்கப் பள்ளி ஆசிரியர் கூட்டணி - திருமருகல்


தனியார் பள்ளியை மிஞ்சிய அரசுப் பள்ளி!

தமிழ்நாடு தொடக்கப் பள்ளி ஆசிரியர் கூட்டணி - திருமருகல்


சபாஷ் தலைமை ஆசிரியை !!!! தனியார் பள்ளியை மிஞ்சிய அரசுப் பள்ளி! (நமது கிருஷ்ணகிரி மாவட்டம்)
`அரசுப் பள்ளியில் அடிப் படை வசதிகள் மற்றும் ஆசிரியர் கவனிப்பு குறைவாக இருக்கும்’ என்ற பொதுக்கருத்தை மாற்றிக் காட்டியிருக்கிறது, கிருஷ்ணகிரி மாவட்டம், ஒசூரில் உள்ள ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி! காரணம், அந்தப் பள்ளியின் தலைமை ஆசிரியை பத்மாவதி. தன் சக ஆசிரியர்களுடன் கைகோத்தும், பல தரப்பிடம் இருந்து உதவித்தொகை பெற்றும் நூலகம், கலையரங்கம், கணினி ஆய்வகம், சிசிடிவி கேமராக்கள் என இந்த மாற்றத்தை இங்கு மலர்த்தியிருக்கிறார்!
‘‘இந்தப் பள்ளிக்கு,2012-ம் ஆண்டு பணி மாறுதலில் தலைமை ஆசிரியையாகப் பொறுப்பேற்றபோது, போதிய அடிப்படை வசதிகள் இல்லாமல் இருந்தது. மழைபெய்தால் வகுப்பறைக்குள் நீர் ஒழுகும்; தரை குண்டும் குழியுமாக இருக்கும். கணினி, நூலகம் போன்ற கல்வி வெளிச்சங்கள் இல்லை என பலவும் இங்கே இல்லை. அதேசமயம், மாணவர்களின் திறமைக்கும் குறைவில்லை. அவர்களின் ஆர்வத்துக்கும், வேகத்துக்கும் இன்னும் தீனி கிடைக்க வேண்டும் என்று தோன்றியது. அதேபோல, ‘எம்புள்ள நல்லா படிக்கிறானா?’ என்று கேட்கும் அந்த ஏழைப் பெற்றோருக்கு, செயலால் பதில் சொல்லும் பொறுப்பையும் நான் உணர்ந்தேன்.
தனியார் பள்ளிகளுக்கு இணையான வகையில் தரமான கல்வியை அளிக்க வேண்டும் என்று நானும், ஆசிரியர்களும் உறுதியேற்றோம். அதன் முதல்படியாக, பள்ளியில் பணியாற்றும் 28 ஆசிரியர்களும் தலா ஐந்தாயிரம் செலவு செய்து, பள்ளி அலுவலகம் மற்றும் இரண்டு வகுப்பறைகளுக்கு டைல்ஸ் ஒட்டினோம். பிறகு, நகராட்சியின் உதவியால் மற்ற எல்லா வகுப்பறைகளுக்கும் டைல்ஸ் ஒட்டி, கட்டடங்களை புனரமைத்தோம்’’ என்றவர், தொடர்ந்து சேவை அமைப்புகளை அணுக ஆரம்பித்திருக்கிறார்.
‘‘‌அனைவருக்கும் கல்வித்திட்டம் மூலமும், பல்வேறு அமைப்புகளிடமும் நிதியைப் பெற்றும் 350 பேர் அமரும் வகையிலான ஆடிட்டோரியம் கட்டினோம். சுற்றுவட்டார மாவட்டத்தில், எந்த ஒரு அரசுப் பள்ளியிலும் இதுபோன்ற ஆடிட்டோரியம் இல்லை. முன்னாள் மாணவர்களின் சந்திப்பு நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்து, அவர்கள் மூலம் உதவியும், பல தொண்டு நிறுவனங்களின் தொடர்பையும் ஏற்படுத்திக்கொண்டோம். அது, பள்ளியின் முன்னேற்றத்துக்கு பேருதவியாக அமைந்தது.
‘தயா’ அறக்கட்டளையின் தலைவர் சீனிவாசன் ராகவனிடம், பள்ளிக்குத் தேவையான உதவிகளைச் செய்து கொடுக்கும்படி கேட்டேன். அவர், சுமார் 2,500-க்கும் மேற்பட்ட நூல்கள் அடங்கிய நூலகம், கம்ப்யூட்டர் லேப், அறிவியல் ஆய்வகம், வட்ட வடிவ மேஜைகள் என்று பல லட்சங்களை செலவழித்து அமைத்துக் கொடுத்தார் ’’ எனும் பத்மாவதி, இப்படி பல்வேறு தரப்பினரிடமும் உதவிபெற்று 30 லட்சம் செலவிலான பள்ளியின் உள்கட்டமைப்பு வசதிகளை, மூன்று ஆண்டுகளில் நிகழ்த்தியுள்ளார்.
`‘இதையெல்லாம் மாணவர்களை சரியாக பயன்படுத்திக்கொள்ள வைப்பதில் ஆசிரியர்கள் அனைவரும் அக்கறையுடன் செயல்படுகிறோம். கம்ப்யூட்டர் மூலமாகவும் பாடங்
களை நடத்துகிறோம், ஆங்கில மொழித்திறனுக்கு சிறப்பு வகுப்புகள் எடுக்கிறோம். நூலகத்தில் படிக்கும் புத்தகத்தில் இருந்து கிடைக்கும் கருத்துகளையும், கட்டுரைகளையும், கவிதைகளையும், இதற்கென அமைக்கப்பட்டிருக்கும் மாணவர் குழுவிடம் சொல்லலாம். அதை அந்தக் குழு, ஆசிரியரிடம் கொடுப்பார்கள். இதனை, எங்கள் பள்ளியில் வெளியிடப்படும், ‘பால் வீதி’ என்ற பத்திரிகையில் வெளியிடுவோம்.
பள்ளி வளாகத்தில் இயற்கை முறையில் மாணவர்களே விவசாயம் செய்கிறார்கள். இதன் மூலம் கிடைக்கும் காய்கறிகளை, சத்துணவு தயாரிக்கப் பயன்படுத்துகிறோம். தவிர, பள்ளிக்காக ஒவ்வொரு ஆசிரியரும் இரண்டாயிரம் ரூபாய் என 56 ஆயிரம் ரூபாயை  வங்கியில் டெபாசிட் செய்து, அதன் மூலம் கிடைக்கும் வட்டியைக் கொண்டு, பள்ளியின் துப்புரவுப் பணிகளுக்கும் பராமரிப்புக்கும் ஆட்களை நியமித்துள்ளோம்!’’
- இப்படி ஆச்சர்யங்களை அடுக்கிக்கொண்டே போனார் மாநில நல்லாசிரியர் விருது வாங்கியிருக்கும் பத்மாவதி.
‘‘வரும் கல்வியாண்டில் பள்ளியில் மாடித்தோட்டமும், மூலிகைத் தோட்டமும் அமைப்பது எங்கள் திட்டம்!’’
- மாணவர்களும், மற்ற ஆசிரியைகளும் உற்சாகக் குரலில் கூற, பூரித்து நிற்கிறார் பத்மாவதி!
இந்தப் பள்ளியை முன்மாதிரிப் பள்ளி என  அரசு அதிகாரிகளும், மற்ற அரசுப் பள்ளி ஆசிரியர்களும் வந்து பார்வையிடுகின்றனர். ஒவ்வொரு ஊரிலும் உள்ள உதவும் உள்ளங்கள் இதுபோல முன்வந்தாலே, அனைத்து அரசுப் பள்ளிகளும், தனியார் பள்ளிக்கு இணையாக மாறிவிடும்!

Dangal Hindi Movie - குழந்தைகளுடன் பாருங்கள் பெற்றோர்களே!

தமிழ்நாடு தொடக்கப் பள்ளி ஆசிரியர் கூட்டணி - திருமருகல்


இந்திய சினிமாவின் பெருமிதப் பதிவுகளில் ஒன்றாக  “டங்கல்” படம் இடம் பிடித்திருக்கிறது. 

விளையாட்டுத் துறையில் இந்திய தேசத்தை பெருமைக் கொள்ளச் செய்யும் ஒரு வெற்றிக்காக இரண்டு தலைமுறைகளின் அர்ப்பணிப்பு, உழைப்பு, தியாகம்... இவையே படத்தின் பிரதான களம். படம் பார்த்து வெளிவருவோரின் சில துளி கண்ணீரும், சில நிமிட  அமைதியும் படம் எத்தகைய தாக்கத்தை ஏற்படுத்துகிறது என்பதற்கான சாட்சி... அப்படி ஓர் அழுத்தமான படைப்பை நம் முன் வைத்திருக்கிறார்கள் இயக்குநர் நிதேஷ் திவாரி மற்றும் தயாரிப்பாளர்/நடிகர் அமீர்கான்.
இந்தியாவுக்காக சர்வதேச மல்யுத்தக் களத்தில் ஒரு தங்க மெடலையேனும் வெல்ல வேண்டும் என்ற தனது லட்சிய விதையை மகள்களின் மனதில் விதைத்து, அதை விருட்சமாக வளரச் செய்து, அது நனவாகும் சமயம் உண்டாகும் சிக்கல்களை அமீர் கானால்  சமாளிக்க முடிகிறதா என்பதே  படம். 2010- ல் காமல்வெல்த் விளையாட்டில் பதக்கங்கள் வென்ற கீதா - பபிதா சகோதரிகள் வாழ்வில்,  உண்மையாகவே நடந்த நிகழ்வை, திரைக்கதையாக்கி, படமாக நமக்குக் காட்சிப்படுத்தியிருக்கிறார்கள்.
1988 காலகட்டம்... அமீர்கான் பணிபுரியும் அலுவலகத்தின் டிவியில் ஒலிம்பிக் நிகழ்ச்சி ஒலிபரப்பாகிக் கொண்டிருக்கிறது. அலுவலகத்தின் டேபிள், சேர்கள் ஓரம் வைக்கப்படுகின்றன. ஒலிம்பிக்கின் பின்னணி வர்ணனையில் அமீர்கானும், சக ஊழியரும் மல்யுத்தம் போடும் அந்த முதல் காட்சியிலேயே நம்மைப் படத்திற்குள் இழுத்துவிடுகிறார்கள். அங்கு தொடங்கும் லயிப்பு படத்தின் இறுதி நொடி வரை பற்றிப் பரவுகிறது. 
படம் ஒரு நாவல் வாசிப்பு போன்ற அனுபவத்தைக் கொடுக்கிறது. ஹரியானா நமக்கு அந்நியம் தான் என்றாலும், அந்த வீடும், அவர்கள் சாப்பிடும் அந்த ரொட்டியும் நமக்கு நெருக்கமாகிவிடுகின்றன. தனக்கு தொடர்ந்து பெண் குழந்தைகளே பிறப்பதில் விரக்தியாக அமீர்கான் இருக்கும் காட்சிகள் நம்மையும் கனக்க வைக்கின்றன. ஏன் ஆண்தான் வேண்டும்?  பெண்களையே மல்யுத்த வீராங்கனைகளாக மாற்றுகிறேன் என அமீரின் அந்த முடிவு... அந்த நேரத்தில் இறுக்கமான முகத்தில் இருந்து அவர் வெளிப்படுத்தும் ஒரு சின்ன சிரிப்பு படத்தின் உணர்வை அடுத்தக் கட்டத்திற்கு நகர்த்துகிறது.
அமீர்கானின் நடிப்பு விமர்சனத்திற்கு அப்பாற்பட்டது. உறுதியான உடல், பார்வையிலேயே மிரட்டுவது, வயோதிகத்தின் காரணமாக களத்தில் தடுமாறும்போது வெளியிடும் அந்தப் பெருமூச்சு என கிளாசிக்கல் நடிப்பு. தன்னை முன்னிலைப்படுத்தாமல், மகள்களின் கதாபாத்திரத்தையும் கதையையும் முன்னிறுத்தியதிலேயே நம் மனதில் விஸ்வரூபமாய் நின்று பிரமிக்க வைக்கிறார் அமீர்கான். ஒரு சூப்பர் ஹீரோவாக தன்னைக் காட்டிக்கொள்ள எந்த ஒரு ஃப்ளாஷ்பேக் காட்சியையும் வைக்கவில்லை. மிகக் குறைந்த நிமிடங்களே வருகிற ஒரு காட்சிதான் இருக்கிறது. அதே சமயம் அமீர் கான் மட்டுமே படத்தின் கவன ஈர்ப்பு மையம் அல்ல. படத்தின் ஒவ்வொரு கதாபாத்திரமும் தத்ரூப வார்ப்பு.  
கீதா, பபிதாவாக சிறுவயது கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் சாய்ரா வாஸிம், சுஹானி பட்நாயகருக்கும் சரி, சிறிது வளர்ந்த கீதா, பபிதாவாக நடித்திருக்கும் ஃபாத்திமா சானா, சான்யா மல்ஹோத்ராவுக்கும் சரி, வேறுபாடுகளே தெரியாத உடல்மொழி. ஃபாத்திமா சனா, பயிற்சி பெறும் காட்சிகள், இளவயதுக்கே உரிய ஆர்வங்கள், அப்பாவுடனான உரசல் என்று ஒவ்வொன்றும் ஒருவித நேர்த்தியான நடிப்பை வழங்கியிருக்கிறார். நேஷனல் அகாடமி கோச்சாக வரும் கிரீஷ் குல்கர்னி கண்ணசைவிலேயே தன் எண்ணத்தை வெளிப்படுத்துகிறார். 
மணலில் போடும் யுத்தத்திலும், போட்டியில் சிந்தெடிக் மேட்டில் நடக்கும் போட்டியின் போது அந்த மேட்டில் உரசி வரும் ”கிறீச்...” சத்தங்கள் உட்பட பின்னணி இசையில் அத்தனை நுணுக்கம். “டங்கல் டங்கல்...” பாட்டில் நம் நரம்புகள் சூடேறுகின்றன. இசை ப்ரீத்தம்!!! படம் முழுக்க உணர்வுபூர்வமாக காட்சிகள் பல. ஆனால், அவற்றில் முழ நீள வசனங்கள் எதுவும் இல்லை. ட்விட்டர் ஸ்டேட்டஸ் போன்ற பியூஷ் குப்தா, ஷ்ரேயாஸ் ஜெய்ன், நிகில் மல்ஹோத்ரா மற்றும் நிதேஷ் திவாரி குழுவின் வசனங்கள், அழுத்தமாக விதைக்கப்படுகின்றன! 
பெண் குழந்தைகளுக்கான எதிர்கால திட்டங்கள், வறுமைச் சூழ்நிலையில் உருவாகும் விளையாட்டு வீரர்களுக்கான அடித்தளம், பயிற்சியும் முயற்சியும் தாண்டி மனதிடம் எவ்வளவு அவசியம் என பலப்பல அத்தியாயங்களை அதனதன் அழகு, ஆக்ரோஷத்துடன் மனதில் பதித்துச் செல்கிறது படம். அதிலும் மல்யுத்தக் காட்சிகளின் காட்சியமைப்புகளும் ஒளிப்பதிவும் உலகத் தரம். இரண்டே நிமிடங்களில் நடக்கும் அந்தப் போட்டிகளின் உக்கிரத்தை ஒரு கீற்று கூட குறையாமல் கடத்துகிறார்கள். சர்வதேச போட்டிகளின் அரை இறுதி, இறுதி போட்டிகளுக்கு வித்தியாசமான சவால்கள் வைத்து அதை கீதா எதிர்கொள்ளும்போது... ஒவ்வொரு ரசிகரும் பதறுவது... ஆவ்ஸம் ‘டங்கல்’ மேஜிக்! இதற்காக  உழைப்பைக் கொட்டிய ஒளிப்பதிவாளர் சேது ஸ்ரீராம் மற்றும் மல்யுத்தப் பயிற்சியாளர் கிருபா ஷங்கர் படேல், சண்டைப் பயிற்சியாளர் ஷ்யாம் கௌஷல் ஆகியோருக்கு சிறப்பு சபாஷ்!   
தான் அடைய விரும்பிய ஒரு லட்சியத்தை தன் பெண்கள் அடைய வேண்டும் என்ற வெறியில் ஒரு கட்டத்தில் சர்வாதிகாரியாகவே காட்சியளிக்கிறார் அமீர்கான். அந்தப் பெண்களின் சின்ன, சின்ன சிறிய ஆசைகள் கூட இரும்புக் கூண்டில் பூட்டி வைக்கப்படுகின்றன. முதலில் எந்தவொரு மோட்டிவேஷனுமே இல்லாமல் இருக்கும் கீதாவும், பபிதாவும் தங்கள் தோழியின் திருமணத்தின் போது, “ உங்கப்பா மாதிரி ஒரு அப்பா கிடைக்க கொடுத்து வச்சிருக்கணும்... அவர் உங்களுக்காக சிந்திக்கிறாரே...” என்று சொல்வதன் மூலம் தான் விளையாட்டில் தன்னார்வம் காட்டத் தொடங்குகிறார்கள்..
ஒரு பெற்றோரின் விருப்பங்களைத் திணிக்காமல்,பிள்ளைகளை சுதந்திரமாக வளர்க்க வேண்டும் என்ற கருத்து கொஞ்சம் கொஞ்சமாக மேலோங்கி வந்து கொண்டிருக்கும் இந்த சமயத்தில், அதற்கு முரண்பட்டவர்கள் இதை எப்படி எடுத்துக் கொள்வார்கள் என்ற கேள்வி எழுகிறது. எடுத்துக் காட்டிற்கு தன்னுடைய விருப்பமான ”போட்டோகிராபியை” படிக்க விரும்பும் ஒரு பிள்ளை இருக்கிறார் என்று வைத்துக் கொள்வோம்... அவரின் அப்பா அவரை “எஞ்சினியரிங்” படித்தே ஆக வேண்டும் என்று கட்டாயப்படுத்துகிறார். அவர்கள் இருவரும் சேர்ந்து இந்தப் படத்தைப் பார்க்கிறார்கள். படம் முடிந்து அப்பா, அவர் மகனைப் பார்க்கும் பார்வையில் “ பார்... நான் சொல்வது, நீ செய்வது எல்லாம் உனக்கு கஷ்டமாகத் தான் இருக்கும். ஆனால், எதிர்காலத்தில் உனக்கு அது தான் நல்லது. நான் சொல்வதைக் கேள்...” என்பது போல் இருக்கும். ஏனென்றால், எல்லாப் பிரச்சினைகளுக்கும், போராட்டங்களுக்கும், புழுக்கங்களுக்கும் இறுதி விடையாக “வெற்றி” நிற்கிறது. இன்னொன்றையும் சொல்லலாம், டாக்டர் வீரர், எஞ்சினியரிங் வீரர் என்றெல்லாம் சொல்வதில்லையே.. விளையாட்டு வீரர் என்ற பதத்தைப் பெற வேண்டுமனால், சிறு வயதுமுதலே இப்படியான மனக்கட்டுப்பாடுகளோடுகூடிய பயிற்சிகளைப் பெற்றுத்தான் ஆகவேண்டும் என்பதும் உண்மை. ஒருவர், தன் 18 வயதில் கிரிக்கெட் வீரர் ஆகவேண்டும் என்று நினைத்தால் ஆகமுடியுமா? அதற்கெல்லாம் சிறுவயதுமுதலே அர்ப்பணிப்புடன் கூடிய பயிற்சி அவசியமாகிறது. அதையே படம் உணர்த்துகிறது.
ஒவ்வொரு காட்சியையும் வசனத்தையும் இழைத்துச் செதுக்கியிருக்கும் படக்குழுவுக்கு எத்தனை பூங்கொத்துகள் பரிசாய் அளித்தாலும் தகும். படத்தில் அமீர் கேட்கும், 'நாட்டுக்கு ஏதாவது செய்யணும்னு ஒவ்வொரு வீரனும் நெனைக்கறான். ஆனா அந்த வீரனுக்கு எதாவது செய்யணும்னு நாடு நெனைக்கறதில்ல' என்ற ஆதங்கத்திற்கு இனியாவது பதில் கிடைத்தால் நலம்.  
படத்தில், சிறுவயது கீதாவை முதன்முதலில் மல்யுத்தக் களத்தில் இறக்குவார் அமீர். நான்கு ஆண்கள் நின்று கொண்டிருக்க, 'இருப்பதிலேயே ஒல்லியாக இருக்கும் ஒருவரை தேர்வு செய்தால் இந்தப் பெண் கொஞ்சம் வலியோடு தப்பிக்கலாம்' என்று வேடிக்கை பார்க்கும் பொதுமக்கள் பேசிக்கொள்வார்கள். கீதாவோ, இருப்பதிலேயே வலிமையான ஒரு வீரனை தேர்வு செய்வார். 
கிட்டதட்ட அமீர்கானும் அப்படித்தான். பலரும் நோஞ்சான் கதைகளையே எடுத்துக் கொண்டிருக்க, ஆழமான கதையைத் தேர்வு செய்து அதில் வெற்றியும் பெற்றுக் கொண்டிருக்கிறார். சினிமா ரசிகர்களுக்குப் பரவசமளிக்கும் இந்தப் பயணம் பன்னெடுங்காலம் தொடரட்டும்! 
திரு.அமிர்கான் அவர்களே!!!!
இந்தியப் பெற்றோர்கள் - ‘உன் வாழ்க்கை... உன் கையில்’னு சொல்லிட்டு பசங்க அவங்களா முன்னேறிக்கணும்னு இருந்துட்டு இருக்கோம். ஆனால், பசங்க எதிர்காலத்துல பெத்தவங்களோட பங்கு எவ்வளவு முக்கியம், அதுக்காக காலம் முழுக்க என்னலாம் பண்ண வேண்டியிருக்கும்னு பொளேர்னு புரிய வைச்சுட்டீங்க.
பாலிவுட்டின் சின்சியர் நடிகர்கள் - ‘ஒரு ஏழைக் குடும்பஸ்தனாக தொந்தியும் தொப்பையுமாக நடித்தது சரி. ஆனால், அதன்பின் படத்துக்காக இறுக்கி முறுக்கி செமத்தியான ‘சிக்ஸ் பேக்’ ஃபிட் உடம்பைக் கொண்டு வந்தீர்கள். ஆனால், அந்த ஃபிட் உடலுனான மல்யுத்தக் காட்சிகள் திரையில் வருவதென்னவோ... மிகச் சில நொடிகள்... அதிகபட்சம் சில நிமிடங்கள். இப்படி சில நிமிடங்களுக்காக அவ்வளவு ரிஸ்க் எடுத்துள்ளீர். சூப்பர்
இந்தியப் பொதுமக்கள் - ’அமீர் கான் நாட்டுப் பற்று இல்லாதவர்’ என்று கோஷம் போட்ட மக்கள், டங்கல் படத்திற்கு முன் திரையரங்குகளில் கட்டாயமாக ஒலிபரப்படும்  தேசிய கீதத்திற்கு உண்மையான உணர்வோடு எழுந்து நின்றார்களோ இல்லையோ, படத்தின் இறுதிக் காட்சியில் பாடப்படும் தேசிய கீதத்திற்கு தானாக எழுந்து நின்றார்கள். அவர்கள், ‘நாங்க என்ன பண்ணாலும், ஏதோ பண்ணி ஸ்கோர் பண்ணிடுறீங்களே அமீர்.
Well Done Aamir khan..! 
---D.ராமராஜ்

மரம் வளர்த்தால் மாதாமாதம் பரிசு! அசத்தும் கிராமம்!

தமிழ்நாடு தொடக்கப் பள்ளி ஆசிரியர் கூட்டணி - திருமருகல்


திருவாரூர் மாவட்டத்தில் உள்ள சிறு கிராமம், பெருகவாழ்ந்தான். இந்த கிராமத்து இளைஞர்கள் சேர்ந்து, "வேர்கள்" என்ற அமைப்பை உருவாக்கி, பொதுப்பணிகள் செய்து வருகிறார்கள்.
இவர்களது முக்கிய பணி, வீட்டுக்கு வீடு மரக்கன்றுகளை அளிப்பது.
அது மட்டுமல்ல, சரியாக மரக்கன்றுகளை பராமரிப்பவர்களுக்கு குலுக்கல் முறையில் மாதாமாதம் பணப்பரிசும் அளிப்பதாக அறிவித்திருக்கிறார்கள்.
முதல் பரிசு 3000, இரண்டாம் பரிசு 2000 மூன்றாம் பரிசு 1000 ரூபாய்.
இந்த வித்தியாசமான பரிசுத்திட்டத்துக்குக் காரணமானவர். இதே கிராமத்தைச் சேர்ந்த , க.தமிழன் .
இந்த மரம் வளரப்பு பரிசுத்திட்டம் குறித்து அவர் தனது முகநூல் பக்கத்தில் எழுதியிருப்பதாவது:
"மரம் தருவதோ நடுவதோ பெரிய விசயமல்ல..
கடந்த இருபதாண்டு செய்தித்தாள்களை புரட்டிப் பார்த்தால், மரம் நடும் விழாக்களில் நட்ட மரங்கள் மட்டும் பல கோடி மரங்களைத் தாண்டும்.. அதெல்லாம் வளர்ந்திருந்தா, இன்னைக்கு தமிழ்நாடு பசுமைக்காடா மாறியிருக்கும்.. மரம் நடும் பணியில் காட்டும் முனைப்பு அதனை பராமரித்தலில் இல்லை.
கடந்த மூன்று தினங்களில் கிட்டத்தட்ட 5000 மரக்கன்றுகளை வீடுதோறும் வழங்கியுள்ளோம்.. இதோடு நின்றுவிடாமல், அதனை 5 வருடங்கள் அந்தந்த வீட்டினரே பராமரிப்பதை ஊக்குவிக்கும் விதத்தில் கீழ்க்காணும் திட்டத்தினை செயல்படுத்த உள்ளோம்.
1) மரக்கன்றுகள் வழங்கப்பட்ட ஒவ்வொரு வீடும் ஒரு எண்ணால் (Unique number) அடையாளப்படுத்தப்படும்.
 2 ) ஒவ்வொரு மாதத்தின் முதல் ஞாயிற்றுக் கிழமையும் குலுக்கல் முறையில் மூன்று எண்கள் ஊர் பெரியவர்கள் முன்னிலையில் தேர்ந்தெடுக்கப்படும்.
 3) முதல் பரிசாக 3000 ரூபாயும் , இரண்டாம் பரிசாக 2000 ரூபாயும் மற்றும் மூன்றாம் பரிசாக 1000 ரூபாயும் 5 வருடங்களுக்கு ஒவ்வொரு மாதமும் வழங்கப்படும்..
விதிமுறைகள்:
1) தேர்ந்தெடுக்கப்பட்ட வீடுகளில் 5 மரக்கன்றுகளையும் சரியாக பராமரித்து இருக்க வேண்டும்.
 2) அவர்கள் வீட்டில் சீமைக்கருவேல மரங்கள் முற்றாக அழிப்பட்டு இருக்க வேண்டும்.
 3) கொடுக்கப்பட்ட 5 மரக்கன்றுகளில், குறைந்த பட்சம் இரண்டு மரக்கன்றுகள் வீட்டிற்கு வெளியே நட்டிருக்க வேண்டும்.
 4) பரிசுத் தொகை அந்தந்த வீட்டிலுள்ள குடும்பத் தலைவியிடம் மட்டுமே கொடுக்கப்படும்..
தேர்ந்தெடுக்கப்பட்ட வீடுகளுக்கு வேர்கள் இளையோர் அமைப்பினர் சென்று பார்வையிட்டு, மேற்சொன்ன விதிமுறைகள் பின்பற்றப்பட்டிருந்தால் மட்டுமே அவர்களுக்கு பரிசுகள் வழங்கப்படும்.
இதன்மூலம் 5 வருடங்கள் இந்த மரக்கன்றுகளை அந்தந்த வீட்டு மக்கள் சரியாக பராமரிப்பார்கள் என்ற எண்ணத்தில் செய்கிறோம்.
ஊராரின் ஒத்துழைப்புடன் வெற்றி பெறுவோம் என்று நம்பிக்கையில் 'வேர்கள்' இளையோர் அமைப்பு வேர்களை பரவவிட்டிருக்கிறது." என்று தனது பதிவில் குறிப்பிட்டிருக்கிறார் க.தமிழன்.
இதே போல, வாய்ப்புள்ளவர்கள் தங்களது பகுதியில் மரக்கன்றுகளையும் அளித்து, ஊக்கப்படுத்த தங்களால் இயன்ற பரிசுகளையும் அளிக்கலாமே!

அனுமதி கடிதம் எழுத தெரியாத அரசு ஊழியர்கள் : ஆய்வில் 'திடுக்'

தமிழ்நாடு தொடக்கப் பள்ளி ஆசிரியர் கூட்டணி - திருமருகல்


அரசு ஊழியர்களில் பலருக்கு அனுமதி மற்றும் விடுப்பு கடிதம் கூட, முறையாக தமிழில் எழுத தெரியவில்லை' என, தமிழ் வளர்ச்சித் துறை ஆய்வில் தெரியவந்துள்ளது.
 அனைத்து துறைகளிலும், தமிழை முழுமையாக பயன்படுத்த வேண்டுமென, அரசு உத்தரவிட்டுள்ளது. இதற்காக, ஆண்டுதோறும் தமிழ் வளர்ச்சித் துறை அதிகாரிகள், அனைத்து அலுவலகங்களிலும், ஆய்வுகளை நடத்தி கண்காணித்து வருகின்றனர்.
இதில், பலருக்கு அனுமதி, விடுப்பு கடிதம் கூட, முறையாக தமிழில் எழுத தெரியவில்லை என்பது கண்டுபிடிக்கப்பட்டு உள்ளது. இது குறித்து, அவர்களுக்கு பலமுறை அறிவுரை வழங்கினாலும், தவறுகளை திருத்தி கொள்வதில்லை என, தமிழ் வளர்ச்சித் துறை அதிகாரிகள் ஆதங்கப்படுகின்றனர்.

SSA NEWS:-ஜனவரி 9, 10, 11 BRC Level upper primary Kit 3 நாட்கள் பயிற்சி நடைபெற உள்ளது - செயல்முறைகள்!!

தமிழ்நாடு தொடக்கப் பள்ளி ஆசிரியர் கூட்டணி - திருமருகல்


டிஜிட்டல் பணபரிவர்த்தனைகளை பாதுகாப்பாக மேற்கொள்வது எப்படி? டிஜிட்டல் பண பரிவர்த்தனை பாதுகாப்பும் வழிமுறைகளும்.

தமிழ்நாடு தொடக்கப் பள்ளி ஆசிரியர் கூட்டணி - திருமருகல்


டிஜிட்டல் பணபரிவர்த்தனைகளை பாதுகாப்பாக மேற்கொள்வது எப்படி?
டிஜிட்டல் பண பரிவர்த்தனை பாதுகாப்பும் வழிமுறைகளும்
கடந்த நவம்பர் 8 அன்று மத்திய அரசு மேற்கொண்ட பணசீர்திருத்த நடவடிக்கைகளுக்கு பின்பு, டிஜிட்டல் பண பரிவர்த்தனைகளை அதிக அளவில் மேற்கொண்டு வருகிறோம். வருங்காலத்தில் பணமில்லா பரிவர்த்தனைகள் அதிக அளவிலோ அல்லது முழுமையாகவோ மேற்கொளள வேண்டிய நிலை வரும். எனவே அது தொடர்பான விபரங்களை தெரிந்து கொண்டு முன்னெச்செரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்வதன் மூலம் நமது பண பரிவர்த்தனைகளை பாதுகாப்பாக மேற்க்கொள்ள முடியும்.
இரண்டு வங்கி கணக்குகள் தொடங்குங்கள். பிரதான வங்கி கணக்கில் முழு பணத்தினை வைத்திருங்கள். அதற்கான டெபிட் அட்டையை எங்கும் பயன்படுத்த வேண்டாம். அடுத்த வங்கி கணக்கிற்கு அவ்வப்போது தேவையான பணத்தினை மாற்றம் செய்து அதற்கான அட்டையை எங்கும் பயன்படுத்துங்கள். இதன் மூலம் உங்கள் பிரதான கணக்கு பணம் பத்திரமாக இருக்கும்.
முடிந்தவரை கிரெடிட் கார்டு பயன்படுத்துங்கள். உங்கள் கிரெடிட் கார்டுகள் தவறாக பயன் படுத்தும்போது வங்கி அப்பணத்தினை பயன்படுததப்பட்ட இடத்திலிருந்து திரும்பபெறும் பொறுப்பை எடுத்துக் கொள்கிறது. டெபிட் கார்டு பயன்பாட்டின்போது பொறுப்பு நம்மிடமே உள்ளது. தற்காலத்தில் ரூ 25,000 வங்கி டெபாசிட் கிரெடிட் கார்டு வாங்க போதுமானது என்பது குறிப்பிடத்தக்கத
நீங்கள் பயன்படுத]தும் டெபிட் மற்றும் கிரெடிட் கார்டுகள் சிப் பொறுத்தபட்டவை என்றால் மிக பாதுகாப்பானது. தகவல் திருட்டு தடுக்கப்படும். உங்களிடம் இல்லா விட்டால் வங்கியை அணுகவும்.
தற்போது கையடக்க POS ( Point of sale ) கருவிகள் பயன்பாடு அதிகம் என்றால் அவற்றை உங்கள் கண்முன் மட்டுமே பயன்படுத்துங்கள.; மறைவான இடங்களுக்கு அவற்றை கொண்டு செல்ல அனுமதிக்காதீர்கள்.
PIN நம்பரை மறைத்து பழகுங்கள். ATM,POS என எங்கு உங்கள் கார்டுகளை பயன்படுத்தினாலும் ரகசிய எண்ணை கைகளால் மறைத்து பயன்படுத்துங்கள். குறிப்பிட்ட கால இடைவெளிகளில] PIN எண்ணை மாற்றுங்கள்.
உங்கள் வங்கி பரிவர்த்தத்தனைகளை மேற்கொள்ள தனியாக ஒருசெல்போனை பயன்படுத்துங்கள். அதில் தேவையற்ற APP என எதையும் டவுன்லோட் செய்ய வேண்டாம். APP மற்றம் சமூக ஊடகங்களை வேறு செல்போனில் பயன்படுத்தவும்.
வங்கிப் பரிவர்த்தனைகளை மேற்கொள்ளும் உங்கள் வீட்டு மற்றும் அலுவலக கணிணிகளில் தரமான, நேரடியாக நிறுவனங்களிடமிருந்து பெறப்படும் APP மட்டுமே பயன்படுத்தவும். மலிவான மற்றும் போலியான APP மற்றும் Software கள் விபரத் திருட்டுக்கு வழி வகுக்கும்.
கணிணியின் தரத்தை அவ்வப்போது update செய்து வாருங்கள்.
Amazon, Flip cart offer only for three days என வரும் செய்திகளை திறக்க வேண்டாம். உங்களுக்கு பொருள் வாங்க வேண்டும் என்றhல் அந்த தளத்திற்கு சென்று பாருங்கள். Link open செய்ய வேண்டாம்.
பணபரிவர்த்தனைகளை எக்காரணம் கொண்டும் உங்கள் செல்போன் மற்றும் கணிணி தவிர வேறு எந்த சாதனத்திலும் மேற்கொள்ள வேண்டாம்.
வங்கி பண பரிவர்த்தனைகளுக்கான பாஸ்வேர்டை 3 மாதங்களுக்கு ஒரு முறை கட்டாயம் மாற்ற வேண்டும். வங்கிக்கான பாஸ்வேர்ட்டை வேறு எங்கும் ( பேஸ்புக். ஈமெயில்) என எங்கும் பயன்படுத்த வேண்டாம். மேலும் அது பெயர் மற்றும் எண் ஆகியவற்றின் கலவையாக இருக்கட்டும்.
சினிமா தியேட்டர், மால், ஷாப்பிங் காம்ப்ளெக்ஸ் என எங்கு கேட்டாலும் உங்கள் செல்போன் மற்றும் ஈ மெயில் முகவரிகளை கொடுக்க வேண்டாம். கட்டாயம் கொடுக்க நேரிட்டால் அதற்காக தனி எண், தனி முகவரி பயன்படுத்தவும்,
டிஜிட்டல் பண பரிவர்த்தனைகளை பாதுகாப்பாக மேற்கொள்ள மேலே கூறப்பட்டுள்ள கருத்துக்கள் உங்களுக்கு உதவும்.