Thursday 9 January 2014

ஆசிரியர் கல்வியியல் பல்கலைக்கழகத்தில் முதல்முறையாக 6 துறைகள் அறிமுகம்



மிழ்நாடு ஆசிரியர் கல்வியியல் பல்கலைக்கழகத்தில் முதல்முறையாக 6 துறைகள் தொடங்கப்பட்டுள்ளன.

சென்னையில் அமைந்துள்ள  இந்தப் பல்கலைக்கழகத்தின் கீழ் 674 கல்லூரிகள் இணைப்புப் பெற்றுள்ளன. கல்லூரிகளுக்கு இணைப்பு அந்தஸ்து வழங்குவது, ஆண்டுதோறும் இணைப்புக் கல்லூரிகளின் உள்கட்டமைப்பு வசதிகளை ஆய்வு செய்து அந்த இணைப்பு அந்தஸ்தை புதுப்பிப்பது, பாடத் திட்டங்களை வகுப்பது, இணைப்புக் கல்லூரி மாணவர்களுக்குத் தேர்வுகளை நடத்தி, முடிவுகளை அறிவிப்பது போன்ற பணிகளை மட்டுமே இந்தப் பல்கலைக்கழகம் இதுவரை மேற்கொண்டு வந்தது.

இந்த நிலையில் இப்போது பல்கலைக்கழகத்தில் முதல்முறையாக 6 துறைகள் தொடங்கப்பட்டுள்ளன. இதில் எம்.பில் மற்றும் பிஎச்.டி. படிப்புகள் அறிமுகம் செய்யப்பட்டுள்ளன.

கலை அறிவியல் துறை, மதிப்பு சார்ந்த கல்வித் துறை, கல்வி உளவியல் துறை, கல்வி தொழில்நுட்பத் துறை, பாடத் திட்டம் தயாரிப்பு மற்றும் நிர்வாகத் துறை, கல்வித் திட்டம் மற்றும் நிர்வாகத் துறை என 6 துறைகள் முதன்முறையாகத் தொடங்கப்பட்டுள்ளன. இந்தத் துறைகள் சார்பில் 2014, ஜனவரி முதல் எம்.பில் மற்றும் பிஎச்.டி படிப்புகள் அறிமுகப்படுத்தப்பட உள்ளன. இதற்கு பல்கலைக்கழக ஆட்சி மன்றக் குழு ஒப்புதல் அளித்துள்ளது. எம்.பில் படிப்பில் அதிகபட்சமாக 20 மாணவர்கள் சேர்த்துக் கொள்ளப்படுவார்கள். பிஎச்.டி. படிப்பைப் பொருத்தவரை, ஒரு பேராசிரியர் 8 பேருக்கு வழிகாட்டியாக இருப்பார்.

இந்தப் படிப்புகளில் மாணவர்களைச் சேர்த்துக் கொள்வதற்காக ஒவ்வொரு ஆண்டும் ஜூன் மற்றும் டிசம்பரில் விளம்பரம் வெளியிடப்படும். ஜூலை மற்றும் ஜனவரியில் வகுப்புகள் தொடங்கப்படும் என்று பல்கலைக்கழகத் துணைவேந்தர் ஜி.விஸ்வநாதன் தெரிவித்துள்ளார்.

No comments:

Post a Comment