Friday 5 December 2014

மாநிலம் முழுவதும் ஒரே மாதிரியான முறையில் அலுவலக நடவடிக்கைகள் அமைய தொடக்கக்கல்வித்துறை உத்திரவு

தமிழ்நாடு தொடக்கப் பள்ளி ஆசிரியர் கூட்டணி - திருமருகல். மாநிலம் முழுவதும் ஒரே மாதிரியான முறையில் அலுவலக நடவடிக்கைகள் அமைய தொடக்கக்கல்வித்துறை உத்திரவு


அனைத்து அலுவல்களுக்கும் மாதிரி படிவங்கள் மற்றும் அலுவலக குறிப்புறைகள் வழங்கி கடைபிடிக்க உத்திரவு தொடக்கக்கல்வித்துறையில் உள்ள லட்சக்கணக்காண ஆசிரியர்கள் சார்ந்த விடுப்பு, உயர்கல்வி, முன்அனுமதி, மருத்துவவிடுப்பு, ஈட்டியவிடுப்பு, அரைச்சம்பள விடுப்பு, வைப்புநிதி முன்பணம் கோரல், பகுதி இறுதிப்பணம் கோரல்,சேமநலநிதி கணக்கீடு,ஊக்கஊதியம் அனுமதித்தல், பதவிஉயர்வுக்குண்டான ஊதிய நிர்ணயம்,பண்டிகை முன்பணம்,மருத்துவ விடுப்பு அனுமதித்தல்,ஆண்டு ஊதிய உயர்வு அனுமதித்தல்,பொன்ற நடைமுறைகள் அந்தந்த உதவித்தொடக்கக்கல்வி அலுவலகப்பணியாளர்களால் அவர்கள் ஏற்கனவே கையாண்ட நடைமுறைகளின்படி அலுவலககுறிப்புகளும்,ஆணைகளும் வழங்கப்பட்டு வந்தன ஆனால் தமிழகம் முழுவதும் உள்ளஅனைத்து உதவித்தொடக்கக்கல்வி அலுவலகங்களிலும் ஒரே மாதிரியான வழிமுறையிணை பின்பற்ற தொடக்கக்கல்வித்துறை இயக்குனரகம் மூலம் ”மாதிரிப்படிவங்கள்,அலுவலகநடைமுறைக்கடிதம்,அலுவலகசெயல்முறை ஆணைகள் மற்றும்,பணிப்பதிவேட்டில் பதிய மாதிரி சீல்கள்” ஆகியன நிர்வாகப்பயிற்சியின் போது வழங்கப்ப்ட்டுள்ளது. .அதனை கடைபிடிக்க கோரப்பட்டு அனைத்து உதவிதொடக்கக்கல்விஅலுவலகங்களுக்கும் உரிய மாவட்டக்கல்வி அதிகரிகள் வாயிலாக அனுப்பப்படுள்ளதாக அறியப்படுகிறது.             

Monday 1 December 2014

நாடு முழுவதும் பின்பற்றப்படும் 10+2+3 கல்வி முறை மாறுகிறது: வருகிறது பல சிறப்பம்சங்களுடன் புதிய 8+4+3 திட்டம்

தமிழ்நாடு தொடக்கப் பள்ளி ஆசிரியர் கூட்டணி - திருமருகல்


          இந்தியாவில் பின்பற்றப்படும், 10+2+3 கல்வி முறையை மாற்ற, மத்திய அரசு விரைவில் முடிவு செய்யும். இதற்காக, ஆர்.எஸ்.எஸ்.,சின் ஒரு அமைப்பான, பி.எஸ்.எம்., புதிய கொள்கை திட்டத்தை, மத்திய அரசிடம் வழங்கியுள்ளது. அதன்படி, 8+4+3 என, விரைவில் கல்வி முறை மாற உள்ளது.

         கேந்திரிய வித்யாலயா பள்ளிகளில், 6 - 8ம் வகுப்பு வரை படிக்கும் மாணவர்களுக்கு, மூன்றாம் மொழிப்பாடமாக இருந்த ஜெர்மன் நீக்கப்பட்டு, சமஸ்கிருதம் கட்டாயமாக்கப்பட்டது. அது போல, நாடு முழுவதும் ஒருங்கிணைந்த கல்வி முறையை கொண்டு வருவதற்காக, மாநில பட்டியலில் உள்ள கல்வியை, மத்திய பட்டியலில் சேர்க்கவும் அரசு திட்டமிட்டுள்ளது.அந்த வகையில், இம்மாதம், 17 மற்றும் 18ம் தேதிகளில், ஜெய்ப்பூரில் உள்ள ராஜஸ்தான் பல்கலைக்கழகத்தில் நடைபெற உள்ள, ஆர்.எஸ்.எஸ்.,சின் கல்வி பிரிவான, 'பாரதிய சிக் ஷா மண்டல் - பி.எஸ்.எம்.,' மாநாட்டில், புதிய கல்வி முறைக்கான வரைவுத் திட்டம் வெளியிடப்பட உள்ளது.அதன்படி, தற்போது நடைமுறையில் உள்ள, 10 + 2 + 3 என்ற முறை மாற்றப்பட்டு, 8 + 4 + 3 என்ற புதிய முறையை அறிமுகப்படுத்த, அந்த மாநாட்டில் விரிவான விவாதம் நடத்தப்பட உள்ளது.

ஸ்மிருதியுடன் சந்திப்பு:

பிரதமர் மோடி, பா.ஜ., மூத்த தலைவர் அத்வானி, மூத்த அமைச்சர் வெங்கையா நாயுடு, பா.ஜ., தேசிய தலைவர் அமித் ஷா போன்ற பலர், ஆர்.எஸ்.எஸ்., அமைப்பிலிருந்து, பா.ஜ.,வில் இணைந்தவர்கள். பா.ஜ.,வை கட்டுப்படுத்தும் உயரிய அமைப்பாக, ஆர்.எஸ்.எஸ்., விளங்குகிறது என சொல்லப்படுகிறது.இந்திய கல்வி முறையில் மாற்றத்தை கொண்டு வர, மத்திய அரசு, படிப்படியாக சில நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. இதற்கு முன்னோடியாக, கடந்த அக்., 30ல், மத்திய மனிதவள மேம்பாட்டுத் துறை அமைச்சர் ஸ்மிருதி இரானியை, ஆர்.எஸ்.எஸ்., தலைவர்கள் சிலர் சந்தித்தனர் என, டில்லி வட்டாரங்களில் பேசப்படுகிறது. ஆர்.எஸ்.எஸ்., மூத்த தலைவர்கள், சுரேஷ் சோனி, தத்தாத்ரேயா ஹோசபலே போன்றோர், அமைச்சர் ஸ்மிருதியை சந்தித்து, கல்வி முறையை எந்தெந்த விதங்களில் மாற்ற வேண்டும் என கூறியதன் அடிப்படையில் தான், மத்திய அரசு, சமீப காலமாக செயல்படுகிறது எனவும் கூறப்படுகிறது.

ஆர்.எஸ்.எஸ்., சொல்வதென்ன?

*வெறும் எழுத்தர்களை உருவாக்கும், மெக்காலே கல்வி முறையை நாட்டிலிருந்து அகற்ற வேண்டும். சிந்திக்கத் தெரிந்த, நாட்டின் நலன், பொருளாதார வளர்ச்சிக்கான அடிப்படை போன்றவற்றுடன் இயைந்தவாறு கல்வி முறை இருக்க வேண்டும்.
*நவீன தொழில்நுட்ப யுக்திகளுடன், பாரம்பரிய கல்வி முறையையும் இணைத்து, புதியதொரு கல்வி முறை பின்பற்றப்பட வேண்டும். 
பொறுப்பு 

யார் வசம்?

கல்வி முறையில் மாற்றம் செய்ய வேண்டும் என்ற, ஆர்.எஸ்.எஸ்., அதற்கான வடிவமைப்பு, செயல்திட்டத்தை, அந்த அமைப்பின் சிறந்த கல்வியாளரான தினாநாத் பத்ராவிடம் வழங்கியுள்ளது. அவர், இதற்காக ஆராய்ச்சி செய்து வடிவமைத்துள்ள கல்விமுறை, குஜராத்தில் பின்பற்றப்பட்டு, வெற்றிகரமாக செயல்படுகிறது.

புதிய கல்வி திட்டத்தின் முக்கிய அம்சங்களாவன:


*இப்போது நடைமுறையில் உள்ள, 10 + 2 + 3 கல்வி முறை, 1968ல், கோத்தாரி கமிஷன் பரிந்துரைப்படி அமலில் உள்ளது; இந்த முறை, விரைவில் மாற்றப்பட உள்ளது.
*மாணவர்களின் முதல் எட்டாண்டு படிப்பு, தனி பிரிவாகவும்; அதன் பின், நான்காண்டு தனிப்பிரிவாகவும்; அதன் பின், மூன்றாண்டு தனிப்பிரிவாகவும் பிரிக்கப்பட உள்ளது.
*முதல் எட்டாண்டு படிப்பு, மாணவர்களின் அடிப்படை கல்வி தொடர்பானதாக இருக்கும்; இதில், அவர்களின் தாய்மொழி தான், முதல் மொழியாக இருக்கும்; ஆங்கிலம், இந்தி துணை மொழிகளாக இருக்கும்.
*முதல் எட்டாண்டு படிப்பில், கணிதம், பொது அறிவியல், சமூக அறிவியல், உடற்கல்வி, வேலை, சுத்தம், பாரம்பரிய கல்வி, சமூக சேவை ஆகிய பாடப்பிரிவுகள் இருக்கும்.
*முதல் எட்டாண்டு படித்து முடிக்கும் மாணவன், விரும்பினால், படிப்பை அத்துடன் நிறுத்திக் கொண்டு, தொழில்கள் செய்யவோ, அல்லது தொழிற்கல்வி  படிக்கவோ செய்யலாம்.
*அதன் பின், விரும்பினால், நான்காண்டு படிப்பை தொடரலாம்.

கல்லூரி மட்ட படிப்பு:


*நான்காண்டு படிப்பு, கல்லூரி மட்ட படிப்பை ஒரே வீச்சில் படிக்க வேண்டும் என்ற கட்டாயம் இல்லை. விரும்பினால், முதலாண்டுடன் நிறுத்திக் கொள்ளலாம்; அப்போது முதலாண்டு சான்றிதழ் வழங்கப்படும். இரண்டாம் ஆண்டு முடித்த பிறகு, இன்னொரு சான்றிதழ் வழங்கப்படும்; அது, டிப்ளமோ சான்றிதழாகவும், மூன்றாம் ஆண்டு, டிகிரி சான்றிதழாகவும், நான்காம் ஆண்டு சான்றிதழ், ஹானர்ஸ் டிகிரி சான்றிதழாகவும் வழங்கப்படும்.
*இதனால், கல்வி, தொழில் ரீதியாகவும், நாட்டின் உற்பத்திக்கு உகந்ததாகவும் இருக்கும்.
*எந்த படிப்பில் சேரவும், நுழைவுத் தேர்வு முறை இருக்காது என்பது, பி.எஸ்.எம்., வரைந்துள்ள கல்வித் திட்டத்தின் முக்கிய அம்சம். மதிப்பெண் மட்டுமின்றி, பிற தகுதிகளும், பொருளாதாரமும் கவனத்தில் கொள்ளப்படும்.
*எல்லா வகையான படிப்பிலும், செய்முறை எனப்படும் பிராக்டிகல் அவசியம் இருக்கும்.

தொடக்கக் கல்வி - அனைத்து SSA CEOs, APOs and DEEOs க்கும் மண்டல வாரியாக இரண்டு நாட்கள் நிர்வாகப் பயிற்சி

தமிழ்நாடு தொடக்கப் பள்ளி ஆசிரியர் கூட்டணி - திருமருகல்


      தொடக்கக் கல்வி - அனைத்து SSA CEOs, APOs and DEEOs க்கும் மண்டல வாரியாக இரண்டு நாட்கள் நிர்வாகப் பயிற்சி இரண்டு கட்டமாக முறையே 02 & 03ம், 04 & 05.12.2014 அன்றும் அளிக்கப்படவுள்ளது. 

உயர்கல்வி அனுமதி: ஏ.இ.இ.ஓ., க்களுக்கு அதிகாரம்

தமிழ்நாடு தொடக்கப் பள்ளி ஆசிரியர் கூட்டணி - திருமருகல்


               அரசு தொடக்க, நடுநிலைப் பள்ளி ஆசிரியர்கள் எம்.பில்., பிஎச்.டி., போன்ற உயர்கல்வி பயில அனுமதி வழங்கும் அதிகாரம், உதவி தொடக்கக்கல்வி அலுவலர்களுக்கு (ஏ.இ.இ.ஓ.,க்கள்) அளிக்கப்பட்டுள்ளது.
             தொடக்கக்கல்வி இயக்குனரகம் அனுப்பியுள்ள சுற்றறிக்கை: எம்.பில்., பிஎச்.டி., பயில அனுமதி கோரும் ஆசிரியர்கள் தொடக்கக் கல்வி இயக்குனரகத்திற்கு மனுவை அனுப்புகின்றனர். அரசு தொடக்க மற்றும் நடுநிலைப் பள்ளிகளில் பணியாற்றும் ஆசிரியர்கள் அஞ்சல்வழி கல்வி மூலம் மேற்படிப்பு பயில முன் அனுமதி வழங்கும் அதிகாரம், உதவி மற்றும் கூடுதல் தொடக்கக்கல்வி அலுவலர்களுக்கு வழங்கப்பட்டுள்ளது. அதன்படி, உயர்கல்வி பயில சம்பந்தப்பட்ட உதவி மற்றும் கூடுதல் தொடக்கக்கல்வி அலுவலர்களிடம் அனுமதி பெறலாம். இவ்வாறு சுற்றறிக்கையில் கூறப்பட்டு உள்ளது.

தமிழக அரசு ஊழியர்களுக்கான வீட்டுக் கடன் உச்ச வரம்பு 50 சதவீதமாக உயர்வு

தமிழ்நாடு தொடக்கப் பள்ளி ஆசிரியர் கூட்டணி - திருமருகல்


              தமிழக அரசு ஊழியர்களுக்கான வீட்டுமனைக் கடன் உச்சவரம்பை 20 சதவீதத்தில் இருந்து 50 சதவீதமாக உயர்த்தி மாநில அரசு உத்தரவிட்டுள்ளது. இந்த உயர்த்தப்பட்ட கடன் உச்சவரம்புத் தொகையானது, மூன்று தவணைகளாக வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

         அரசு ஊழியர்கள் வீட்டுமனை வாங்குவதற்கான கடன் தொகையின் உச்சவரம்பை 20 சதவீதத்தில் இருந்து 50 சதவீதமாக உயர்த்த வேண்டுமென தமிழ்நாடு தலைமைச் செயலக சங்கம் கோரிக்கை விடுத்திருந்தது. இந்தக் கோரிக்கையை ஏற்று, கடன் தொகையின் உச்சவரம்பானது 50 சதவீதமாக உயர்த்தப்பட்டுள்ளது. இதுவரை வீட்டுக் கடன், முன்பணத் தொகை பெறாத அரசு ஊழியர்கள் அவற்றைப் பெற்றிட வசதி செய்யப்பட்டுள்ளது. இதன் மூலம், வீட்டுக் கடன் ரூ.5 லட்சத்தில் இருந்து ரூ.12.5 லட்சமாக உயரும் வாய்ப்பு ஏற்பட்டுள்ளது. இதற்கான உத்தரவை வீட்டு வசதி மற்றும் நகர்ப்புற வளர்ச்சித் துறை (பொறுப்பு) செயலாளர் பணீந்திர ரெட்டி புதன்கிழமை பிறப்பித்தார்.

மூன்று தவணைகள் எப்படி? வீட்டு கடன் பெற தகுதி படைத்தவர்களுக்கு மூன்று தவணைகளாக கடன் தொகைகள் வழங்கப்படும். முதல் தவணையாக, அனுமதிக்கப்பட்ட மொத்த கடன் தொகையில் 50 சதவீதத் தொகை அல்லது வழிகாட்டி மதிப்பின்படி ஒரு நிலத்தின் மதிப்பு அல்லது விண்ணப்பதாரர் கோரிய தொகை ஆகியவற்றில் எது குறைவோ அந்தத் தொகை முதல் தவணையாக அளிக்கப்படும்.

இதன்பின், வீட்டுக் கூரை வரை கட்டுமானத்தை எழுப்புவதற்காக இரண்டாவது தவணைத் தொகை அளிக்கப்படும். அது அனுமதிக்கப்பட்ட மொத்த கடன் தொகையில் பாதியாக இருக்கும். இறுதி மற்றும் மூன்றாவது தவணைத் தொகையானது கட்டுமானம் முழுவதையும் முடிப்பதற்காக அளிக்கப்படும். இந்த மூன்று தவணைத் தொகைகளும் 10 மாதங்களுக்குள் அளிக்கப்பட வேண்டும். அதாவது முதல் தவணைத் தொகை 2 மாதங்களுக்குள், அடுத்தடுத்த தவணைத் தொகைகள் தலா 4 மாத இடைவெளிகளுக்குள்ளும் அளிக்கப்பட வேண்டும்.

முதல் தவணைத் தொகையைப் பெற்ற அடுத்த ஆறு மாதங்களுக்குள் அந்த நிலத்தில் வீட்டுக்கான கட்டுமானத்தைத் தொடங்க வேண்டும். இல்லாவிட்டால் அதனை அரசு அடமானத்தில் எடுத்துக் கொள்ள விண்ணப்பதாரர் சம்மதிக்க வேண்டும் என்று அரசு உத்தரவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தலைமைச் செயலக சங்கம் நன்றி: தங்களது கோரிக்கையை ஏற்று, வீட்டுக் கடனுக்கான உச்சவரம்பினை உயர்த்தியதற்கு தமிழ்நாடு தலைமைச் செயலக சங்கம் அரசுக்கு நன்றி தெரிவித்துள்ளது. இது குறித்த அறிவிப்பை சங்கத்தின் தலைவர் எஸ்.பீட்டர் அந்தோனிசாமி வெளியிட்டார்.

தொடக்க நடுநிலைப்பள்ளிகளின் விடுமுறை பட்டியல் 2014-15

தமிழ்நாடு தொடக்கப் பள்ளி ஆசிரியர் கூட்டணி - திருமருகல்


முனனுமதி பெறாமல் பட்டம் பெற்ற ஆசிரியர்கள் ஊக்க ஊதியம் கோரும் நிகழவுகளில் - ஒழுங்கு நடவடிக்கை

தமிழ்நாடு தொடக்கப் பள்ளி ஆசிரியர் கூட்டணி - திருமருகல்


         தொடக்கக் கல்வித்துறையில் முனனுமதி பெறாமல் பட்டம் பெற்ற ஆசிரியர்கள் ஊக்க ஊதியம் கோரும் நிகழவுகளில் DEEO ஒழுங்கு நடவடிக்கை எடுத்து அதன் நகலை இயக்குநருக்கு அனுப்ப உத்தரவு

ந,க ,எண்-023458/இ1/2014-நாள் 21.11.2014



படைப்பாற்றல் கற்றல் படிநிலைகள்

தமிழ்நாடு தொடக்கப் பள்ளி ஆசிரியர் கூட்டணி - திருமருகல்

அரை சம்பள விடுப்பின் போது சம்பளத்தை கணக்கிடும் முறை:

தமிழ்நாடு தொடக்கப் பள்ளி ஆசிரியர் கூட்டணி - திருமருகல்


            உதாரணமாக தாங்கள் அக்டோபர் மாதம் 27 நாட்கள் அரை சம்பள விடுப்பு எடுத்துள்ளீர்கள் எனில். 
             செப்டம்பரில் தங்களின் ஊதியம் = Pay-13,380(pay+G.P+P.P) + DA-8697(72%)+ HRA-760+ MA-100=22,937.(உத்தேசமாக) 
அக்டோபர் மாதம் மொத்தம் -31 நாட்கள். 
அப்படியானால், 
27 நாட்கள் அரை சம்பளம், 
4 நாட்கள் முழு சம்பளம் . 
முதலில் உங்களின் அக்டோபர் மாத்தத்தின் ஒரு நாள் PAY-ஐ கண்டுபிடிக்க வேண்டும். 
காரணம் Pay-ஐ தவிர மற்ற அனைத்தும் முழுமையாக கிடைக்கும்.DA அறிவிக்கப்பட்டிருந்தால் புது DA தொகையினையும், அந்த மாதம் தங்களுக்கு Increment எனில் அதையும் சேர்த்துக்கொள்ள வேண்டும். 
>Pay-13,380/31=431.61 
(ஒரு நாள் Pay) 
>Half pay=431.61/2=215.8 
(அரை நாள் Pay) 
27 days half pay=215.8*27=5826. 
4 days full pay= 431.61*4=1726.4 
Pay-7553 (5826+1727) + DA-8697 (72%)+ HRA-760+ MA-100=17,110.

Friday 21 November 2014

2015-ம் ஆண்டிற்கான அரசு விடுமுறை அறிவிப்பு

தமிழ்நாடு தொடக்கப் பள்ளி ஆசிரியர் கூட்டணி - திருமருகல்

2015 விடுமுறைபட்டியல்






அடுத்த ஆண்டில் (2015) 24 தினங்கள், அரசு விடுமுறை தினங்களாக  அறிவிக்கப்பட்டுள்ளன. வழக்கமாக, ஜனவரி 14-ஆம் தேதி கொண்டாடப்படும் பொங்கல் பண்டிகையானது, அடுத்த ஆண்டில் ஜனவரி 15-ஆம் தேதி கொண்டாடப்படுகிறது. மேலும், இஸ்லாமியர்களின் மிலாதுநபி பண்டிகை இரண்டு முறை வருகிறது.
          2015-ஆம் ஆண்டுக்கான பொது விடுமுறை தினங்கள் தொடர்பாக, தமிழக அரசின் தலைமைச் செயலாளர் மோகன் வர்கீஸ் சுங்கத் வியாழக்கிழமை வெளியிட்ட அறிவிப்பு:
ஜனவரி 1 (வியாழன்) ஆங்கிலப் புத்தாண்டு
ஜனவரி 4 (ஞாயிறு) மீலாதுநபி
ஜனவரி 15 (வியாழன்) பொங்கல்
ஜனவரி 16 (வெள்ளி) திருவள்ளுவர் தினம்
ஜனவரி 17 (சனி) உழவர் திருநாள்
ஜனவரி 26 (திங்கள்) குடியரசு தினம்
மார்ச் 21 (சனி) தெலுங்கு வருடப் பிறப்பு
ஏப்ரல் 1 (புதன்) வங்கிகள் கணக்கு முடிவு
(வணிக-கூட்டுறவு வங்கிகள்)
ஏப்ரல் 2 (வியாழன்) மகாவீரர் ஜெயந்தி
ஏப்ரல் 3 (வெள்ளி) புனித வெள்ளி
ஏப்ரல் 14 (செவ்வாய்) தமிழ்ப் புத்தாண்டு- அம்பேத்கர் பிறந்த நாள்
மே 1 (வெள்ளி) மே தினம்
ஜூலை 18 (சனி) ரம்ஜான்
ஆகஸ்ட் 15 (சனி) சுதந்திர தினம்
செப்டம்பர் 5 (சனி) கிருஷ்ண ஜெயந்தி
செப்டம்பர் 17 (வியாழன்) விநாயகர் சதுர்த்தி
செப்டம்பர் 24 (வியாழன்) பக்ரீத்
அக்டோபர் 2 (வெள்ளி) காந்தி ஜெயந்தி
அக்டோபர் 21 (புதன்) ஆயுத பூஜை
அக்டோபர் 22 (வியாழன்) விஜயதசமி
அக்டோபர் 23 (வெள்ளி) மொகரம்
நவம்பர் 10 (செவ்வாய்) தீபாவளி
டிசம்பர் 23 (புதன்) மிலாதுநபி
டிசம்பர் 25 (வெள்ளி) கிறிஸ்துமஸ்

Thursday 20 November 2014

CPS

தமிழ்நாடு தொடக்கப் பள்ளி ஆசிரியர் கூட்டணி - திருமருகல்

CPS PROCEDURE



CPS MISSING CREDIT FORM




CPS MISSING CRI FLOW WORK



Lesson Planning

தமிழ்நாடு தொடக்கப் பள்ளி ஆசிரியர் கூட்டணி - திருமருகல்

Weekly Newsletter
November 19, 2014
 
 
Earn an Online Teaching Degree
WGU’s competency-based approach lets you leverage your experience and education while balancing life, family and school. 

Get the support of a dedicated mentor to take you all the way to graduation and beyond.

The university offers teacher licensure programs as well as master’s programs for already-licensed teachers. Explore the possibilities at WGU Teachers College.
Daily editing builds students' skills!

With Every-Day Edit exercises, challenge students to find and fix 10 errors in spelling, capitalization, punctuation or grammar.Every-Day Edits: Robert F. Kennedy
Every-Day Edits: Time Zones
Every-Day Edits: Black Friday

Lesson Planning

gratitude journalBeing Thankful: Writing Prompt Ideas for Thanksgiving
Check out these writing prompt ideas teachers can use to encourage their students to be thankful this Thanksgiving.

Thinking About Thanksgiving: Lessons Across the Curriculum
Five cross-curriculum lessons challenge kids to think about Thanksgiving from many perspectives!

Six Chemistry Experiments for Elementary Students
If you've never taken a single chemistry class yourself, Education World has you covered with six elementary student-geared chemistry experiments for teachers to use in the classroom.


Search for more lesson plans and mini-lessons by subject and explore our recently added lessonsDon't forget we have useful graphic organizers and more in our Tools & Templates section!

Professional Development

Education World STEM News Round Up
STEM initiatives are sweeping the nation, and Education World has compiled the latest stories to show just what students are learning in the fields of science, technology, engineering and math. Should your school be featured? Let us know.

New Program Aims to Teach Students About Online Safety
A new, free online course will be released for students grades three to eight to help them learn about online safety, bullying, and Internet ethics.

Gym Teachers Find It Hard to Keep Up With Common Core
PE teachers across the U.S. are finding that Common Core is making its way into gym classes as students practice and improve their math skills during physical activities.


Don’t miss our Prof. Dev. Columns and Classroom Management Tips.

Early Childhood

Pizza for Thanksgiving
This activity and poem will have your young ones drooling for seconds! 

Ice Floe Game
Here's a chance for students to pretend they are floating through the Arctic Ocean on an ice floe with their friends.


Reindeer Games
Here's a very easy way for your students to draw a reindeer using their own hands. 


See more Early Childhood content here or search for content onEducationWorld.com that meets your needs.

Technology

New York Times Offers Lesson Plan on Pros, Cons of 'Going Viral'
A new lesson plan provided by The New York Times looks at the new Internet sensation "Alex From Target", and invites students to learn about Alex's overnight fame and consider the positive and negative effects. 


Instagram in Class: Five Ideas
Kids re-create famous artworks, record experiments and more.


Best Apps For Teaching Media Literacy
These tablet and smartphone apps are great tools for teaching students how to think, create and learn in the digital realm.

Administrators

Students Learn Respect Thanks to Good Manners
Psychologist John Rosemond believes children can never learn to respect themselves unless they learn respect for others.

Order in the Cafeteria: Tips for Improving Behavior and Supervision
Tips to help everyone enjoy lunchtime--even the cafe monitors!

Schools Struggle to Reach Homeless Students, Data Finds 
More than 1.1 million public school students in the U.S. do not have permanent homes, and recent data finds that there are plenty of schools that struggle to address their needs. 

Education News You May Have Missed

CDC Study Finds Tobacco Use Prevalent Among U.S. Teens
A new study by the U.S. Centers for Disease Control and Prevention finds that more than a fifth of American teens smoke or use tobacco in some way.

 
Schools Develop Early Warning System to Track Student Progress
Schools across the country are developing their own Early Warning Systems that monitor student attendance, GPA, and struggles in order to keep them on track.

Educator Deals, Freebies and Giveaways!
Need giveaways, freebies, and discounts in your life? Check out these offers and deals tailored towards educators that Education World has put together just for you.

New York City Schools Adopt Chromebooks in All Schools
The New York City school system has announced its adoption of Chromebooks in all of its classrooms this year.

 

The EdWorld Exchange

Find great lesson plans, worksheets, templates, teaching guides and more!



School Funding Center

Need funding for your school? Find grant money fast with the most comprehensive grant database available. Check out our FREE Trial today!


Check out the School Funding Center Blog for grant writing tips , advice and current Grant Opportunities.


SchoolNotes

On this free platform, post homework, create and share flashcards, keep a calendar of events and upload documents, images and URLs. Students and parents receive notification when you update your SchoolNotespage.

Wednesday 19 November 2014

3100ம் ஆண்டு வரை தேதிக்கு கிழமை சொல்லும் சிறுவன் : அதிசயிக்கின்றனர் பெற்றோர், ஆசிரியர்கள்

தமிழ்நாடு தொடக்கப் பள்ளி ஆசிரியர் கூட்டணி - திருமருகல்


          கொளப்பாக்கத்தை சேர்ந்த சேசுராம் என்ற 10 வயது சிறுவன், மொத்தம், 1090 ஆண்டுகளில் ஏதாவது ஒரு தேதியை (3,97,850 நாட்கள்) கூறி, கிழமை கேட்டால், மறு நொடியே, சம்பந்தப்பட்ட தேதிக்கான கிழமையை கூறுகிறான்.
அவனுடைய தனித்திறமை குறித்து, பள்ளி ஆசிரியர்கள், பெற்றோர் மிகவும் பிரமிப்படைகின்றனர். ஆனால், சேசுராமுக்குள் ஒளிந்திருந்த இந்த திறமை, எப்படி உருவானது என, அவர்களால் கண்டுபிடிக்க முடியவில்லை. என்ன நடந்தது?சேசுராமுக்கே அவனது திறமை குறித்து கேட்டால், தெரியவில்லை. 'தெரியும்' என்று மட்டுமே கூறுகிறான். 
 
         மகனின் திறமை குறித்து, தந்தை கோபாலகிருஷ்ணன் கூறியதாவது:நான் ஒரு தனியார் நிறுவன ஊழியர். கடந்த, ஏப்ரல் மாதம் பள்ளி கோடை விடுமுறையில், சொந்த ஊரான ஈரோட்டிற்கு குடும்பத்துடன் செல்ல வேண்டி இருந்தது. சேசுராமை அழைத்துக்கொண்டு ரயில் டிக்கெட் முன்பதிவு செய்ய சென்றேன். நான் கேட்ட தேதியில், டிக்கெட் இல்லை என்பதால், 20 நாட்களுக்கு பின், ஒரு தேதியில் டிக்கெட் இருப்பதாக, முன்பதிவாளர் கூறினார்.அன்றைய தேதி என்ன கிழமை என, தெரிந்துகொள்ள அலைபேசியில், தேட முயன்றேன். அதற்குள், சேசுராம், கிழமையை கூறிவிட்டான். ஆச்சரியப்பட்டேன்.அடுத்த வாரத்தில் உள்ள குறிப்பிட்ட தேதியின் கிழமையை கூறவே, ஒரு நிமிடமாவது கணக்கு போட வேண்டும். ௨௦ நாளுக்கு பின் உள்ள தேதியின் கிழமையை மறுநொடியே அவன் கூறியதும், அவனுக்குள் எதோ ஒரு திறமை ஒளிந்திருக்கிறது என, தெரிந்து கொண்டோம்.பிறகு, ஒவ்வொரு ஆண்டு வாரியாக தேதிக்கு கிழமை கேட்டோம். 2010 முதல் 3100ம் ஆண்டு வரை உள்ள, ஏதாவது ஒரு தேதியை கேட்டால், யோசிக்காமல் மறு நொடியே அந்த நாளுக்கான கிழமையை கூறுகிறான்.இவ்வாறு அவர் தெரிவித்தார்.
உடனுக்குடன்...:

          சிறுவனின் தாயார் தமிழ்ச்செல்வி கூறுகையில்,''ஓர் ஆண்டுக்கு முன், குறிப்பிட்ட தேதியில், அவன் என்ன நிற உடை அணிந்தான், நான் என்ன குழம்பு வைத்தேன் என்பதையும் கூறுகிறான். ஒரு பாடலை கேட்ட உடனே, எந்த பாடகர் பாடினார் என, கூறிவிடுகிறான். ஒரேநாளில், 1 முதல் 100 வரை உள்ள இந்தி வார்த்தைகளை மனப்பாடம் செய்துவிட்டான். 3100ம் ஆண்டுக்கு மேல்உள்ள காலண்டர் கிடைக்காததால், அடுத்தடுத்த ஆண்டுகளுக்கான கிழமை குறித்து கேட்க முடியவில்லை,'' என்றார்.
ஆசை என்ன?

தொடர்ந்து, தந்தை கோபாலகிருஷ்ணன் கூறியதாவது: சேசுராமுவுகுள் இந்த திறமை எப்படி உருவானது என, கண்டுபிடிக்க வேண்டும். யாரிடம் அழைத்து சென்றால் விடை கிடைக்கும் என, தெரியவில்லை. அவனின் இந்த திறமையை மேற்கொண்டு அடுத்தகட்டத்துக்கு கொண்டு செல்லவும் வழி தெரியவில்லை. உலக மொழிகள் அனைத்தையும் கற்று கொடுக்க வேண்டும் என்ற ஆசை இருக்கிறது, இவ்வாறு, அவர் தெரிவித்தார்.

அனைவருக்கும் கல்வித் திட்டம்: 1- 3ஆம் வகுப்பு மாணவர்களுக்கு நிகழாண்டில் முக்கியத்துவம்

தமிழ்நாடு தொடக்கப் பள்ளி ஆசிரியர் கூட்டணி - திருமருகல்


       ஒன்று முதல் மூன்றாம் வகுப்பு வரை படிக்கும் மாணவர்களின் கல்விக்கு நிகழாண்டு முக்கியத்துவம் வழங்க அனைவருக்கும் கல்வித் திட்ட மாநில இயக்ககம் திட்டமிட்டுள்ளது. இதன் மூலம், மாணவர்களுக்கு மிகக் குறைந்த வயதிலேயே மொழியறிவு, கணித அறிவு போன்றவற்றில் புரிதலை மேம்படுத்துவதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்படும் என தகவலறிந்த வட்டாரங்கள் தெரிவித்தன. இதுதொடர்பாக அந்த வட்டாரங்கள் கூறியது:

          கணிதம், ஆங்கிலம், தமிழ், அறிவியல் பாடங்களில் மேல் வகுப்புகளுக்கு உதவும் வகையில், பல்வேறு புதிய பிரிவுகளைக் கொண்ட செயல் வழிக் கற்றல் அட்டைகள் நிகழாண்டில் வழங்கப்பட உள்ளன. ஒன்று முதல் மூன்றாம் வகுப்பு வரை படிக்கும் மாணவர்களுக்கு புதிய முறையில் வகுப்புகளை எடுப்பது தொடர்பாக ஆசிரியர்களுக்கு பயிற்சிகளும் வழங்கப்பட உள்ளன.
 
      இப்போது தமிழ் பாடத்தில் பயிற்சிகள் நிறைவடைந்துள்ளன. ஆங்கிலம், கணிதம், அறிவியல் பாடங்களில் விரைவில் பயிற்சிகள் வழங்கப்படும். இந்தப் பயிற்சிகளின் மூலம் 5, 6-ஆம் வகுப்புகளுக்குச் செல்லும் மாணவர்களின் கற்றல் திறன் மேம்படுத்தப்படும்.
கணக்கெடுப்பு: அனைவருக்கும் கல்வித் திட்டம் சார்பில், பள்ளி செல்லாக் குழந்தைகள் குறித்த கணக்கெடுப்பு இப்போது நடைபெற்று வருகிறது. கடந்த ஏப்ரல் மாதம் எடுக்கப்பட்ட கணக்கெடுப்புகளின்படி, தமிழகம் முழுவதும் 44 ஆயிரம் குழந்தைகள் பள்ளிகளுக்குச் செல்லவில்லை. இப்போதைய கணக்கெடுப்பில், புதிதாக மாணவர்கள் பள்ளிகளிலிருந்து இடையிலேயே நின்றிருந்தால், அவர்கள் மீண்டும் பள்ளிகளில் சேர்க்கப்படுவர். வெளி மாநிலத் தொழிலாளர்களின் குழந்தைகள் குறித்து வரும் ஏப்ரல் மாதத்தில் கணக்கெடுப்பு நடத்தப்பட உள்ளது. சென்னை உள்ளிட்ட பல்வேறு இடங்களில் இந்தக் குழந்தைகளுக்காக, அவரவர் தாய்மொழியில் சிறப்பு மையங்கள் நடைபெற்று வருகின்றன.
ரூ.2 ஆயிரம் கோடி: அனைவருக்கும் கல்வித் திட்டம் சார்பில் மேற்கொள்ளப்படும் பல்வேறு திட்டங்களுக்காக நிகழாண்டு மத்திய அரசு ரூ.2 ஆயிரம் கோடியை ஒதுக்கீடு செய்துள்ளது. இந்த ஒதுக்கீடு கடந்த ஆண்டை விட அதிகம் என அந்த வட்டாரங்கள் தெரிவித்தன.

Education World

தமிழ்நாடு தொடக்கப் பள்ளி ஆசிரியர் கூட்டணி - திருமருகல்


This Week in Books & Literature

தமிழ்நாடு தொடக்கப் பள்ளி ஆசிரியர் கூட்டணி - திருமருகல்

about entertainment
Follow Usfbtwitping+
This Week in Books & Literature
On November 22, 1963, President John F. Kennedy was assassinated by Lee Harvey Oswald. Years later, many Americans still vividly remember where they were when they heard the tragic news. While his time in office was marred by both political failures andpersonal scandals, JFK remains one of the most well-liked modern U.S. presidents.
Allison Bean
About Books & Literature Editor
What If Kennedy’s Assassination Never Happened?
In 11/22/63, best-selling author Stephen King explores a world where one man, Jack Epping, has the ability to time travel and possibly prevent Kennedy’s assasination. The addictive novel combines heavily-researched historical information with the author’s signature supernatural elements and is a must-read for King fans and novices alike.
READ NOW  
Share
5 Presidents Who Wrote Books Before the White House
When Hillary Clinton published Hard Choices, it led to increased speculation that she willrun for president in 2016. If Clinton does get elected to the White House, she won’t be the only president to have been a published author. Here's a look at five other presidents who wrote books before they took office.
READ NOW  
Share
9 Great Kennedy Quotes
President Kennedy was an accomplished orator and his inaugural address is one of the most memorable political speeches of the past century. Though they were first spoken decades ago, these famous quotes still inspire people today.
READ NOW  
Share
FEATURED ARTICLES
What Happened to Jackie Kennedy’s Pink Chanel Suit?
Presidential Myths, Debunked
12 Events That Changed How the Media Covers News
10 Most Influential First Ladies
Famous Last Words of  U.S. Presidents
Funny Political Jokes from Late-Night TV Comedians
Advertisement