Monday 13 April 2015


Top papers from your news feed from the last week

தமிழ்நாடு தொடக்கப் பள்ளி ஆசிரியர் கூட்டணி - திருமருகல்
Top papers from your news feed from the last week
Debaprasad
DownloadBookmark
Justus
Several authors have established the existence of short and long vowels on the basis of minimal pairs occurring in Civili. These works however simply refer to impressionistic phonetic observations and do not rely on experimentally-gathered and verified data. This article focuses on the perceived duration of components of minimal pairs. It is intended to assess the validity of claims on vowel length and minimal pairs in the language. The article gives an account of a perception experiment that was conducted and describes the administration of perception tests. The perceptual data gathered...
DownloadBookmark
Isabela
DownloadBookmark
Kimberly
DownloadBookmark
Cherya
DownloadBookmark
Phường 05-Quận Phú Nhuận
DownloadBookmark

மாநிலத்தில் முதன்முறையாக அரசுப் பள்ளியில் ஸ்மார்ட் கிளாஸ்: அக்கரைப்பேட்டையில் அமைச்சர் தொடங்கி வைத்தார்

தமிழ்நாடு தொடக்கப் பள்ளி ஆசிரியர் கூட்டணி - திருமருகல்



நாகப்பட்டினம் மாவட்டம் அக்க ரைப்பேட்டையில் மாநிலத்தில் முதன்முறையாக அரசுப் பள்ளி யில் ஸ்மார்ட் கிளாஸ் வசதியை நேற்று மீன்வளத் துறை அமைச்சர் ஜெயபால் தொடங்கி வைத்தார்.


தமிழகத்தில் இந்த வசதியை பெறும் முதல் அரசுப் பள்ளி என்ற பெருமையை பெறும் இப்பள்ளி, 2004-ல் ஏற்பட்ட சுனாமியில் முற்றிலும் சேதமானது. இப்பள்ளி மாணவர்கள் 80 பேரும் இந்த கிராம மக்கள் 650 பேரும் சுனா மிக்கு பலியாயினர். அப்படி பாதிப்புக்குள்ளான இவ்வூரும், இப்பள்ளியும் அந்தச் சுவடே தெரியாத அளவுக்கு சீரமைக்கப்பட்டு இன்று முன்னு தாரணமாகத் திகழ்கின்றன.

இணையதள வசதியுடன் கணினி வகுப்பறைகள் தொடங்க இவ்வூர் மக்கள் பங்களிப் பாக ரூ.2 லட்சத்து 50 ஆயிரம், அரசு பங்கேற்பாக ரூ.5 லட்சம் பெறப் பட்டு, இப்பள்ளியின் 1-ம் வகுப்பு முதல் 8-ம் வகுப்பு வரையிலுமான அனைத்து வகுப்புகளும் நவீனமய மாக்கப்பட்டுள்ளன.

இணையதளம் மூலம் பாடங் களை மாணவர்களுக்கு கற்பிக்க ஆசிரியர்களுக்கு சிறப்பு பயிற் சிகள் அளிக்கப்பட்டுள்ளன.

1-ம் வகுப்பு முதல் 4-ம் வகுப்பு வரை எளிமைப்படுத்தப்பட்ட செயல்வழி கற்றல் வகுப்புகளில் 93 மாணவ, மாணவிகளுக்கு இணையதளத்தை பயன்படுத்தி எல்சிடி புரொஜெக்டர் மூலமாக திரையிடப்பட்டு, பாடம் கற்பிக்கப் பட உள்ளது. 5-ம் வகுப்பு முதல் 8-ம் வகுப்பு வரையுள்ள 75 மாணவ, மாணவியருக்கு எளிமைப்படுத்தப் பட்ட படைப்பாற்றல் கல்வி மூலம் அனைத்துப் பாடங்களும் கணினி வாயிலாக கற்பிக்கப் பட உள்ளன. விழாவில், சட்டப்பேரவை உறுப்பினர் நாகை மாலி, மாவட்ட வருவாய் அலுவலர் பெஞ்சமின் பாபு, மாவட்ட ஊராட்சித் தலைவர் சந்திரசேகரன், முதன்மைக் கல்வி அலுவலர் ராமகிருஷ்ணன், மாவட்ட ஆசிரியர் பயிற்சி நிறுவன முதல்வர் சுப்ரமணியன், அக்கரைப் பேட்டை ஊராட்சி மன்றத் தலைவர் மனோகரன் உட்பட பலர் கலந்துகொண்டனர்.

Friday 10 April 2015

Minutes, Circular and Notice Format

தமிழ்நாடு தொடக்கப் பள்ளி ஆசிரியர் கூட்டணி - திருமருகல்





பிரபல எழுத்தாளர் ஜெயகாந்தன் காலமானார்

தமிழ்நாடு தொடக்கப் பள்ளி ஆசிரியர் கூட்டணி - திருமருகல்

பிரபல எழுத்தாளர் ஜெயகாந்தன் காலமானார்

undefined
      முதுபெரும் எழுத்தாளர் ஜெயகாந்தன் உடல் நலக்குறைவால் சென்னையில் நேற்று காலமானார். கடலூர் மாவட்டத்தைச் சேர்ந்தவர், ஜெயகாந்தன்,80, 1934ல் பிறந்த இவர், ஐந்தாம் வகுப்பு வரை மட்டுமே படித்தார். பின், 14 வயதில் வீட்டை விட்டு வெளியேறி சென்னைக்கு வந்தார். இந்திய கம்யூனிஸ்ட் கட்சி அலுவலகத்திலேயே தங்கிய ஜெயகாந்தனுக்கு, மறைந்த தலைவர் ஜீவாவின் நட்பு கிடைக்க, முறைப்படி தமிழ் இலக்கணம் மற்றும் இலக்கியம் கற்றுத் தேர்ந்தார். எழுத்தாளர், பத்திரிகையாளர், இலக்கிய விமர்சகர், நாவலாசிரியர், வசனகர்த்தா, திரைப்பட இயக்குனர் என, பன்முக திறமையை வெளிப்படுத்தினார். அவர் எழுதிய, 'சில நேரங்களில் சில மனிதர்கள்' என்ற நூல் மிகவும் பிரபலமானது.
          இலக்கிய உலகின் மிக உயரிய, 'ஞான பீடம்' விருது பெற்ற, ஜெயகாந்தன், சென்னை கே.கே.நகரில், குடும்பத்தாருடன் வசித்து வந்தார். கடந்த ஓராண்டாகவே உடல் நலக்குறைவால் அவதிப்பட்டு வந்த அவருக்கு நேற்று கடுமையான காய்ச்சல் மற்றும் மூச்சுத் திணறல் ஏற்பட்டது. இதையடுத்து, நேற்று இரவு, 9:00 மணிக்கு அவர் இறந்தார். ஜெயகாந்தனுக்கு மனைவி, மகன் மற்றும் இரண்டு மகள்கள் உள்ளனர். ஜெயகாந்தனின் மறைவுக்கு அரசியல் தலைவர்கள், இலக்கியவாதிகள் மற்றும் அவரின் ரசிகர்கள் இரங்கல் தெரிவித்துள்ளனர்.

காலணி கடையில் துவங்கிய எழுத்துப் பயணம்: விழுப்புரத்தில் அவரது மாமா வீட்டில் தங்கியிருந்த போது அவருக்கு பொதுவுடமைக் கோட்பாடுகளும், பாரதியின் எழுத்துகளும் அறிமுகமாகின. பின் விழுப்புரத்தில் இருந்து சென்னைக்கு குடிபெயர்ந்தார். அங்கு தனியார் அச்சகத்தில் பணியில் சேர்ந்தார். அதன் பின் தஞ்சையில் காலணி விற்கும் கடையில் பணிக்கு சேர்ந்தார். இங்கு தான் அவரது எழுத்து பயணம் துவங்கியது. சரஸ்வதி, தாமரை, கிராம ஊழியன், ஆனந்த விகடன் போன்ற ஏடுகளில் இவரது படைப்புகள் வெளியாயின. படைப்புகளுக்குப் புகழும் அங்கீகாரமும் கிடைத்தன. 20ம் நூற்றாண்டில் தலைசிறந்த தமிழ் எழுத்தாளர்களில் ஒருவராக போற்றப்பட்டார். இவரது நாவல்களில் "உன்னைப் போல் ஒருவன், ஒரு நடிகை நாடகம் பார்க்கிறாள், ஊருக்கு நூறு பேர், யாருக்காக அழுதான், புதுச்செருப்பு கடிக்கும் மற்றும் சில நேரங்களில் சில மனிதர்கள்' ஆகியவை திரைப்படங்களாக எடுக்கப்பட்டன. சாகித்ய அகாடமி விருது, ஞான பீட விருது, பத்ம பூஷன், ரஷ்ய விருது உள்ளிட்ட பல விருதுகளை பெற்றுள்ளார்.

Wednesday 1 April 2015

KOOTTANI -NAGAPATTINAM SPECIAL MEETING

தமிழ்நாடு தொடக்கப் பள்ளி ஆசிரியர் கூட்டணி - திருமருகல்