Saturday 3 June 2017

செங்கோட்டையன் - உதயசந்திரன் கூட்டணி: ரேங்க் முறை ஒழிப்பு முதல் ஒளிவுமறைவற்ற பணிமாறுதல் கலந்தாய்வு வரை - கலக்கும் பள்ளிக்கல்வித்துறை

தமிழ்நாடு தொடக்கப் பள்ளி ஆசிரியர் கூட்டணி - திருமருகல்

செங்கோட்டையன் - உதயசந்திரன் கூட்டணி: ரேங்க் முறை ஒழிப்பு முதல் ஒளிவுமறைவற்ற பணிமாறுதல் கலந்தாய்வு வரை - கலக்கும் பள்ளிக்கல்வித்துறை

லஞ்சத்தை ஒழிக்க CEO, DEEO அலுவலகங்களில்  நூற்றுக்கும் மேற்பட்ட போலீஸாரை சீருடையில்லாமல் பணியில் அமர்த்தியிருக்கிறாராம் அமைச்சர்  செங்கோட்டையன்"
ஈரோடு மாவட்டம் கோபி செட்டிப்பாளையம் அருகே இருக்கும் குள்ளம்பாளையத்தில் அமைந்துள்ளது தென்னை மரங்கள் சூழ்ந்த அந்த பிரமாண்ட வீடு. சனி, ஞாயிறு என்றாலே காலை ஏழு மணியில் இருந்தே அந்த வீட்டில் ஜன நடமாட்டம் தொடங்குகிறது. வெயில் ஏற ஏற அதுபற்றியெல்லாம் கவலைப்படாமல் மக்கள் கூட்டமும் அதிகரிக்கத் தொடங்குகிறது. அதுதான் பள்ளிக்கல்வி அமைச்சர் செங்கோட்டையனின் வீடு.


எடப்பாடி பழனிசாமி முதல்வராகப் பதவி ஏற்றுக்கொண்டவுடன் அவரது அமைச்சரவையில் பள்ளிக்கல்வித்துறை அமைச்சராகப் பதவி ஏற்றவர் செங்கோட்டையன். கோபிச் செட்டிப்பாளையம் தொகுதியில் இதுவரை எட்டு முறை வெற்றி பெற்றவர். பள்ளிக்கல்வித்துறை அமைச்சராகச் சென்னையில் தனது அலுவலகப் பணிகளை முடித்துவிட்டு வெள்ளி இரவு புறப்பட்டு, சனிக்கிழமை அதிகாலை கோபி வீட்டுக்கு வந்துவிடுகிறார். அவர் எழுந்து வாக்கிங் வரும்போதே மக்கள் கையில் மனுக்களோடும், கோரிக்கைகளோடும் வீடு தேடி வந்துவிடுகின்றனர்.
கைலி பனியனோடு காட்சியளித்தபடியே மனுக்களை வாங்கி தனது உதவியாளர்களிடம் கொடுக்கும் செங்கோட்டையன், எந்தெந்த துறைக்கு மனுக்கள் வந்திருக்கிறது என்பதையும் துறை வாரியாக பிரித்து அந்தந்த துறைகளுக்குத் தனது பரிந்துரையோடு அனுப்பி வைக்கிறார். இப்படியே சுமார் பதினோரு மணி வரை மக்களிடம் மனுக்களை பெற்றுக் கொள்ளும் செங்கோட்டையன், மேலும் அந்தந்த வார நாள்களில் நடந்த சுப, துக்க நிகழ்ச்சிகளின் பட்டியலோடு கிராமம் கிராமமாகப் புறப்பட்டு விடுகிறார்.
“தமிழக அமைச்சர்களிலேயே ஓர் அமைச்சரின் வீட்டில் இத்தனை ஆயிரம் பேர் வாராவாரம் கூடுகிறார்கள் என்றால் அது செங்கோட்டையன் வீட்டில்தான்” என்று அதிமுக-வினரே கூறுகிறார்கள்.

மேலும், “அமைச்சர் ரொம்ப சீனியர். இடையில் புறக்கணிக்கப்பட்டு இருந்தார். அப்பக்கூட அவர் வீட்டுக்கு ஜனங்க வந்துகிட்டுதான் இருப்பாங்க. இப்பவும் வர்றாங்க. மக்கள் அவரை எப்போதும் ஒரே மாதிரிதான் பாக்குறாங்க” என்கிறார்கள் லோக்கல் அதிமுக நிர்வாகிகள்.
கோபியில் இப்படி என்றால்... சென்னையிலும் அவரது பள்ளிக்கல்வித்துறையிலும்கூட செங்கோட்டையனுக்கு இன்னும் அதே முக்கியத்துவம் இருக்கிறது.
“பள்ளிக்கல்வித்துறைக்கு அமைச்சர் செங்கோட்டையன் என்றதுமே இவர் அங்கே என்ன செய்யப் போகிறார் என்ற கேள்வி எல்லாருக்கும் எழுந்தது. மேலும் கடந்த ஆறு வருடங்களாக பள்ளிக்கல்வித்துறை ராசியில்லாத துறையாகக் கருதப்பட்டது. ஆனால், இப்போது அமைச்சர் செங்கோட்டையனும், துறையின் செயலாளர் உதயசந்திரனும் சேர்ந்து தமிழக பள்ளிக்கல்வித்துறையில் மிக முக்கியமான ஆக்கபூர்வமான மாற்றங்களை செய்து கொண்டிருக்கின்றனர். தமிழகத்துகே ராசியான துறையாக அதை மாற்றிவிட்டார்கள்.
உதயசந்திரன் மிகவும் நேர்மையானவர் என்று பெயர் பெற்றவர். அவரை அழைத்த அமைச்சர் செங்கோட்டையன், ‘நான் அமைச்சர் ஆவேன்னு எல்லாம் எதிர்பார்க்கலை சார். என்னால உங்களுக்கு எந்த தொந்தரவும் இருக்காது. தமிழ்நாட்டின் கல்வித்தரத்தை முன்னேற்ற என்ன நடவடிக்கை எடுக்கணுமோ... அதைச் சொல்லுங்க. நல்லதை செய்வோம்’என்று கூறியிருக்கிறார்.
அதன் விளைவாகத்தான்... தேர்வு முடிவுகளில் ரேங்க் ஒழிப்பு, பதினோராம் வகுப்புக்குப் பொதுத் தேர்வு, சீருடைகள் மாற்றம் என்று பள்ளிக்கல்வித்துறையில் மாற்றங்கள் அணி வகுக்கின்றன.
தர வரிசை முறையை ஒழித்ததைத் திரும்பப் பெற வேண்டும் என்று கொங்கு மண்டலத்தை சேர்ந்த கல்வி நிறுவன அதிபர்கள் ‘உரிமையோடு’ அமைச்சரை கோபி வீட்டிலும் கோட்டையிலும் சந்தித்து மனு கொடுத்தனர். ஆனால், அந்த மனுவை வாங்கி அவர்களுக்கு எதிரிலேயே கிழித்துப் போட்டுவிட்டாராம். 
மேலும், ஆசிரியர் இட மாறுதல்கள் இந்த வருடம் எந்த குழப்பமும் இல்லாமல் நேர்மையாக நடந்திருக்கிறது. இதற்கெல்லாம் காரணம் செங்கோட்டையன் – உதயசந்திரன் கூட்டணிதான்” என்கிறார்கள் கோட்டை வட்டாரத்தில்.
தமிழ்நாடு முழுவதுமுள்ள மாவட்டக்கல்வி அலுவலகம், முதன்மைக்கல்வி அலுவலகங்களில் எங்கும் எதற்கும் லஞ்சம் பரிமாற்றப்படக் கூடாது என்பதற்காக, நூற்றுக்கும் மேற்பட்ட போலீஸாரை சீருடையில்லாமல் பணியில் அமர்த்தியிருக்கிறாராம் செங்கோட்டையன்.
பள்ளிக்கல்வித் துறையில் ஏற்பட்டுள்ள மாற்றங்கள்
➤கோடை விடுமுறையில் மாணவர்களுக்கு சிறப்பு வகுப்புகள் நடத்த கூடாது.
➤அடுத்து கல்வியாண்டில் இருந்து 11ம் வகுப்புக்கு பொது தேர்வு
➤பிளஸ் 2, எஸ்எஸ்எல்சி பொதுத்தேர்வுகளில் மாநில, மாவட்ட அளவில் முதல் 3 இடங்களை அறிவிக்கும் நடைமுறையைக் கைவிடப்பட்டது.
➤தேசிய அளவில் நடைபெறும் தகுதித் தேர்வுகளை எதிர்கொள்ளும் வகையில், பாடத்திட்டத்தில் மாற்றம் கொண்டுவரப்படுகிறது.
➤மாணவர்களுக்கு மன அழுத்தம் கொடுக்கக்கூடாது என்பதற்காக தரவரிசைப் பட்டியல் வெளியிடும் நடைமுறை ரத்து.
➤ஒரு கோடியே 25 லட்சம் பள்ளி மாணவர்களுக்கு விரைவில் ஸ்மார்ட் கார்டு
➤பிளஸ் 2, எஸ்எஸ்எல்சி மாணவர்களுக்கு மேற்படிப்பு மற்றும் வேலை வாய்ப்புக்கு உதவும் வகையில் வழிகாட்டி கையேடு வழங்கப்படுகிறது.
➤ஆசிரியர் தேர்வு வாரியம் மூலம் 2,119 முதுகலை பட்டதாரி ஆசிரியர் பணியிடம் உட்பட 6,390 காலியிடங்கள் நிரப்பப்படும்
➤ஆசிரியர் தேர்வு வாரிய வரலாற்றில் வருடாந்திர தேர்வுக்கால அட்டவணை வெளியீடு,இணையம் விண்ணப்ப முறை அறிமுகப்படுத்தப்பட உள்ளது.
➤நீட் உள்ளிட்ட அகில இந்திய அளவிலான நுழைவுத் தேர்வுகளுக்கு மாணவர்களைத் தயார்படுத்த அடுத்த ஆண்டிலிருந்து பயிற்சி அளிக்க ஆலோசனை.
➤ரூ 26,913 கோடி பள்ளிக்கல்விக்கு ஒதுக்கீடு.
➤பிளஸ் 2, எஸ்எஸ்எல்சி பொதுத்தேர்வுகளில் அதிக மதிப்பெண் பெறும் மாணவர்களின் பெயர்களை விளம்பரப்படுத்தக் கூடாது.
➤பாடத்திட்டத்தில் யோகா சேர்க்கப்பட உள்ளது.
➤சிவில் சர்வீஸ் தேர்வுக்கு மாவட்ட நூலகங்களில் பயிற்சி அளிக்கத் திட்டம்.
➤கட்டாய கல்வி இடஒதுக்கீட்டில் 40 ஆயிரம் பேர் சேர்க்கப்பட்டுள்ளனர்.
இந்நிலையில், இன்று +2 பொதுத் தேர்வு முறையில் பல மாற்றம் கொண்டுவரப்படுகிறது என தகவல் வெளியாகியுள்ளது.
அதன்படி,
➤மாணவர்களின் மன அழுத்தம் குறையும் வகையில் அனைத்து பாடங்களுக்கும் மதிப்பெண் 200-ல் இருந்து 100ஆக குறைப்பு.
➤3 மணியில் இருந்து 2.30 மணியாக தேர்வு நேரமும் குறைக்கப்படும் எனவும் தகவல் வெளியாகியுள்ளது.
➤வகுப்புக்கு ஏற்றவாறு சீருடைகள் மாற்றப்படும் என்றும் தமிழக அரசு அறிவித்துள்ளது.
இந்த மாற்றங்கள் அனைத்தும் பள்ளிகள் தொடங்கும் முன்பே அரசாணையாக வெளியிடப்படும் என்று தமிழக அரசு தகவல் தெரிவித்துள்ளது.
செங்கோட்டையன் - உதயசந்திரன் கூட்டணியால் மக்களுக்கும், மாணவர்களுக்கும் நன்மை தொடரட்டும்.

09/07/2017 மற்றும் 23/07/2017 ஆகிய இரு தினங்களில் வாக்காளர் சிறப்பு முகாம்..

தமிழ்நாடு தொடக்கப் பள்ளி ஆசிரியர் கூட்டணி - திருமருகல்

09/07/2017 மற்றும் 23/07/2017 ஆகிய இரு தினங்களில் வாக்காளர் சிறப்பு முகாம்..

TC - CLEAR COPY

தமிழ்நாடு தொடக்கப் பள்ளி ஆசிரியர் கூட்டணி - திருமருகல்

TC - CLEAR COPY

June diary - 2017

தமிழ்நாடு தொடக்கப் பள்ளி ஆசிரியர் கூட்டணி - திருமருகல்

June diary - 2017

June-1.New academic year begins.
June - 1 BT s dist to dist transfer counseling continues (DSE)
June - 1: Last date to apply HSE instant exam (+2)
June - 2: SGT to BT promotion (DSE)
June - 2: Last day to apply PG TRB
June - 3.Last date to apply SSLC instant exam
June - 3: Grievance day likely (DEE).
June - 7: School reopens
June - 10: Grievance day likely (DSE).
June - 22: RH Shabha Kahdar
June - 23: Supplementary exam for XII begins
June - 26: HL Ramzan
June - 28: Supplementary exam for X begins.

மாற்று சான்றிதழ் - சில அடிப்படை தகவல்கள் உங்களுக்காக .

தமிழ்நாடு தொடக்கப் பள்ளி ஆசிரியர் கூட்டணி - திருமருகல்

மாற்று சான்றிதழ் - சில அடிப்படை தகவல்கள் உங்களுக்காக .

தொடக்க கல்வித்துறை மாற்று சான்றிதழின் அடிக்கட்டு பள்ளியில் இருக்க வேண்டிய ஆவணம் என்பதால் , மாற்று சான்றிதழின் விவரங்கள் முன்புறம் இரண்டு A4 பேப்பர் அளவில் இருக்க வேண்டும் . நடுவில் கிழிப்பதற்கு வசதியாக துளையிட்ட தாளாக இருக்க வேண்டும் . நூறு மாற்று சான்றிதழ்கள் கொண்ட பைண்டிங் செய்ய பட்ட புத்தகமாக இருக்க வேண்டும் .
மாற்று சான்றிதழின் இடப்பக்கம் உள்ள அனைத்து விவரங்களும் வலப்புறம் இருக்க வேண்டும் . இடப்பக்கம் உள்ள மாற்று சான்றிதழின் அடிக்கட்டையில் விவரங்களை பூர்த்தி செய்து , அதே விவரங்களை வலது பக்கம் உள்ள மாற்று சான்றிதழில் பூர்த்தி செய்து , இடது பக்க சான்றிதழில் பெற்றோரிடம் கையொப்பம் பெற்று , பின்னர் வலது பக்கம் உள்ள சான்றிதழை ஒப்படைக்க வேண்டும் . இடது பக்கம் உள்ள அடிக்கட்டு சான்றினை முக்கிய பதிவேடாக பாதுகாக்க வேண்டும் . இதில் உள்ள தாள் பச்சை நிறத்தில் இருக்க வேண்டும் . சான்றின் முன் பக்கம் , பின்பக்கம் அனைத்து விவரங்களும் பள்ளியில் உள்ள ஆவணங்களின் அடிப்படையில் பூர்த்தி செய்ய வேண்டும் . Xerox எடுக்காமல் , பிரிண்ட் செய்யப்பட்ட புத்தகமாக வாங்க வேண்டும் .

பள்ளி மாற்று சான்றிதழில் 'ஆதார்' எண் பதிய உத்தரவு

தமிழ்நாடு தொடக்கப் பள்ளி ஆசிரியர் கூட்டணி - திருமருகல்

பள்ளி மாற்று சான்றிதழில் 'ஆதார்' எண் பதிய உத்தரவு

அரசு பள்ளி மாணவர்களுக்கான மாற்று சான்றிதழில், மாற்றம் செய்யப்பட்டுள்ளது. 'ஆதார்' எண் மற்றும் மாணவர் வருகை நாட்களை, பள்ளி மாற்று சான்றிதழில் குறிப்பிட உத்தரவிடப்பட்டுள்ளது.
இந்த ஆண்டு, அரசு தொடக்க மற்றும் நடுநிலை பள்ளிகளிலிருந்து, வேறு பள்ளிகளுக்கு செல்லும் மாணவர்களுக்கு, இதுபோன்ற விபரங்கள் அடங்கிய, மாற்று சான்றிதழ் வழங்கும் முறை அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. புதிய மாற்று சான்றிதழில், 18 விதமான விபரங்கள் பதிவு செய்யப்பட உள்ளன. முதல்முறையாக, ஆண், பெண் இனத்துடன், மூன்றாம் பாலினம் சேர்க்கப்பட்டுள்ளது. மாணவர்களின் பெயர், பெற்றோர், பாதுகாவலர் பெயர், படித்த பள்ளி, முந்தைய வகுப்பு போன்ற, பல விபரங்கள் பதிவு செய்யப்பட உள்ளன.
அதேபோல, ஏதாவது சலுகை கட்டணத்தில் சேர்ந்தவரா; கல்வி உதவித் தொகை பெற்றவரா என்ற, அம்சமும் சேர்க்கப்பட்டுள்ளது. மேலும், மாணவரின் ஆதார் எண், அந்த மாணவன் கடைசியாக படித்த வகுப்பில், பள்ளிக்கு வருகை தந்த நாட்களின் சதவீதத்தை குறிப்பிடவும் உத்தரவிடப்பட்டுள்ளது. இதன்மூலம், குறைந்த நாட்கள் வந்திருந்தால், அந்த மாணவர்களுக்கு, மற்ற பள்ளியில் இடம் கிடைக்காமல் போக வாய்ப்புள்ளதாக, ஆசிரியர்கள் தெரிவித்தனர்.

ஓய்வூதியம் - மத்திய அரசால் வழங்கப்படும் ஆதார் அடையாள அட்டையை (Aadhar Card) ஓய்வூதியதாரர்கள் மற்றும் குடும்ப ஓய்வூதியதாரகளின் வயது சான்று ஆவணமாக கருதுதல் - ஆணை வெளியிடுதல் - தொடர்பாக!

தொடக்கப்ப பள்ளி தலைமையாசிரியர் பணியிடங்களை நடுநிலைப் பள்ளி தலைமையாசிரியர் பணியிடங்களாக தரம் உயர்த்துதல்-ஆணை வெளியீடு.

தமிழ்நாடு தொடக்கப் பள்ளி ஆசிரியர் கூட்டணி - திருமருகல்

தொடக்கப்ப பள்ளி தலைமையாசிரியர் பணியிடங்களை நடுநிலைப் பள்ளி தலைமையாசிரியர் பணியிடங்களாக தரம் உயர்த்துதல்-ஆணை வெளியீடு.

அரசாணை 93-நாள்-12.05.2017-பள்ளிக்கல்வி 2014-15 ஆம் கல்வியாண்டில் SSA இயக்கத்தின் தொடக்கப்பள்ளிகளிலிருந்து நடுநிலைப் பள்ளிகளாக தரம் உயர்த்தப்பட்ட 42நடுநிலைப் பள்ளிகளின் தொடக்கப்ப பள்ளி தலைமையாசிரியர் பணியிடங்களை நடுநிலைப் பள்ளி தலைமையாசிரியர் பணியிடங்களாக தரம் உயர்த்துதல்-ஆணை வெளியிடப்படுகிறது.

பிறப்பு, இறப்பு பதிவு சான்று : தமிழக அரசு புது உத்தரவு.

தமிழ்நாடு தொடக்கப் பள்ளி ஆசிரியர் கூட்டணி - திருமருகல்

பிறப்பு, இறப்பு பதிவு சான்று : தமிழக அரசு புது உத்தரவு.

ஓராண்டுக்கு மேல் பிறப்பு, இறப்புக்களை பதிவு செய்யாவிட்டாலும், அதற்கான சான்றிதழ் பெற, நீதிமன்றம் செல்லாமல், கோட்டாட்சியர்களான, ஆர்.டி.ஓ.,க்களிடம் விண்ணப்பிக்கலாம்' என, தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.
வேலுார், திருவண்ணாமலை, கடலுார், விழுப்புரம், கிருஷ்ணகிரி மற்றும் திருவாரூர் மாவட்டங்களைச் சேர்ந்த, ஆர்.டி.ஓ.,க்களுக்கு, பிறப்பு, இறப்பு பதிவு செய்வது தொடர்பான, சிறப்பு பயிற்சி முகாம், வேலுார் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில், சமீபத்தில் நடந்தது.
இது குறித்து, பிறப்பு, இறப்பு கூடுதல் பதிவாளரும், பொது சுகாதாரத் துறை இணை இயக்குனருமான, ஈஸ்வரன் கூறியதாவது: பிறப்பு, இறப்பை ஓராண்டுக்கு மேல் பதிவு செய்யாமல் இருந்தால், நீதிமன்ற அனுமதி பெற்றே, பதிவு செய்ய வேண்டும் என்ற நடைமுறை இருந்தது.
தற்போது, அதில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. இனி, நீதிமன்றம் செல்ல வேண்டியதில்லை. சம்பந்தப்பட்ட, ஆர்.டி.ஓ.,க்களிடம் விண்ணப்பிக்கலாம்.அதை, கிராம நிர்வாக அலுவலர், வருவாய் ஆய்வாளர் ஆய்வு செய்த பின், ஆர்.டி.ஒ., பிறப்பு, இறப்பை பதிவு செய்து, சான்றிதழ் வழங்குவார்.இவ்வாறு அவர் கூறினார்
-கல்விச்சிறகுகள்

2017-18 ஆம் கல்வி ஆண்டிற்கான விலையில்லா நலத்திட்ட பொருள்கள் மாவட்ட / ஒன்றியத்திலிருந்து பள்ளிகளுக்கு நேரடியாக கொண்டு செல்ல அனுமதித்து ஆணை வழங்குதல் அனைத்து மாவட்டத்திற்கும் ஒதுக்கப்பட்ட செலவினத் தொகை பட்டியல்

DEE - ஊராட்சி ஒன்றிய / அரசு / நகராட்சி / தொடக்க மற்றும் நடுநிலைப் பள்ளிகளில் கணிணி மற்றும் அதன் சார்ந்த உபகரணங்கள் பயன்பாடு் சார்ந்த விவரம் கோரி - இயக்குனர் உத்தரவு!!

மீதமுள்ள வரையறுக்கப்பட்ட விடுப்பு (RESTRICTED HOLIDAYS) 2017 !!

தமிழ்நாடு தொடக்கப் பள்ளி ஆசிரியர் கூட்டணி - திருமருகல்

மீதமுள்ள வரையறுக்கப்பட்ட விடுப்பு (RESTRICTED HOLIDAYS) 2017 !!

22.06.2017- வியாழன்- ஷபே காதர்
03.08.2016-வியாழன்-ஆடிப்பெருக்கு
04.08.2017-வெள்ளி-வரலட்சுமி விரதம்
07.08.2017-திங்கள்-ரிக் உபகர்மா
08.08.2017-செவ்வாய்-காயத்ரி ஜெபம்
25.08.217-வெள்ளி-சாம உபகர்மா
31-08.2017-வியாழன்-அர்ஃபா
04.09.2017-திங்கள்-ஓணம்
22.09.2017-வெள்ளி-ஹிஜரி புத்தாண்டு
18.10.2017-புதன்-தீபாவளி நோன்பு
02.11.2017-வியாழன்-கல்லறைத் திருநாள்
04.11.2017-சனி-குருநானக் ஜெயந்தி
02.12.2017-சனி-திருக்கார்த்திகை
24.12.2017-ஞாயிறு-கிறிஸ்துமஸ் ஈவ்
29.12.2017-வெள்ளி-வைகுண்ட ஏகாதேசி
31.12.2017-ஞாயிறு-நியூ இயர்ஸ் ஈவ்
-கல்விச்சிறகுகள்

அனைவருக்கும் கல்வி இயக்கம் - 2017-18 ஆம் ஆண்டிற்கான ஆசிரியர் பணியிடைப் பயிற்சி தலைப்பு

தமிழ்நாடு தொடக்கப் பள்ளி ஆசிரியர் கூட்டணி - திருமருகல்

அனைவருக்கும் கல்வி இயக்கம் - 2017-18 ஆம் ஆண்டிற்கான ஆசிரியர் பணியிடைப் பயிற்சி தலைப்பு

மாநில திட்ட இயக்குநரின் செயல்முறைகள்
ந.க.எண்.724/அ11/பயிற்சி/ SSA/2017-18 நாள்:    .05.2017

G.O.NO : 99 - பள்ளிக்கல்விப் பாடத்திட்டம் - 1 முதல் 10ஆம் வகுப்பு பாடத்திட்டம் மற்றும் 11, 12ஆம் வகுப்பு பாடத்திட்டம் மாற்றி அமைத்தல் - ஆணை வெளியீடு

தொடக்க / நடுநிலைப் பள்ளி தலைமை ஆசிரியர்கள் - மலைப்பகுதி பள்ளிகளில் சுழற்சி முறையில் 1 வருடம் மட்டுமே பணியாற்ற வேண்டும் - அரசாணை எண்:-404

பள்ளிக் கல்வித்துறையின் அதிரடி மாற்றங்கள் - பட்டியல்!

தமிழ்நாடு தொடக்கப் பள்ளி ஆசிரியர் கூட்டணி - திருமருகல்

பள்ளிக் கல்வித்துறையின் அதிரடி மாற்றங்கள் - பட்டியல்!

கடந்த சில மாதங்களாக பள்ளிகல்வித்துறையில் அதிரடியாக சில மாற்றங்கள் கொண்டுவரப்பட்டுள்ளன. மேலும் இந்த மாற்றங்கள் பல கல்வி ஆளுமைகளால் வரவேற்கப்பட்டிருப்பது குறிப்பிடத்தக்கது.
பள்ளிக்கல்வித் துறையில் ஏற்பட்டுள்ள மாற்றங்கள்
➤கோடை விடுமுறையில் மாணவர்களுக்கு சிறப்பு வகுப்புகள் நடத்த கூடாது.
➤அடுத்து கல்வியாண்டில் இருந்து 11ம் வகுப்புக்கு பொது தேர்வு
➤பிளஸ் 2, எஸ்எஸ்எல்சி பொதுத்தேர்வுகளில் மாநில, மாவட்ட அளவில் முதல் 3 இடங்களை அறிவிக்கும் நடைமுறையைக் கைவிடப்பட்டது.
➤தேசிய அளவில் நடைபெறும் தகுதித் தேர்வுகளை எதிர்கொள்ளும் வகையில், பாடத்திட்டத்தில் மாற்றம் கொண்டுவரப்படுகிறது.
➤மாணவர்களுக்கு மன அழுத்தம் கொடுக்கக்கூடாது என்பதற்காக தரவரிசைப் பட்டியல் வெளியிடும் நடைமுறை ரத்து.
➤ஒரு கோடியே 25 லட்சம் பள்ளி மாணவர்களுக்கு விரைவில் ஸ்மார்ட் கார்டு
➤பிளஸ் 2, எஸ்எஸ்எல்சி மாணவர்களுக்கு மேற்படிப்பு மற்றும் வேலை வாய்ப்புக்கு உதவும் வகையில் வழிகாட்டி கையேடு வழங்கப்படுகிறது.
➤ஆசிரியர் தேர்வு வாரியம் மூலம் 2,119 முதுகலை பட்டதாரி ஆசிரியர் பணியிடம் உட்பட 6,390 காலியிடங்கள் நிரப்பப்படும்
➤ஆசிரியர் தேர்வு வாரிய வரலாற்றில் வருடாந்திர தேர்வுக்கால அட்டவணை வெளியீடு,இணையம் விண்ணப்ப முறை அறிமுகப்படுத்தப்பட உள்ளது.
➤நீட் உள்ளிட்ட அகில இந்திய அளவிலான நுழைவுத் தேர்வுகளுக்கு மாணவர்களைத் தயார்படுத்த அடுத்த ஆண்டிலிருந்து பயிற்சி அளிக்க ஆலோசனை.
➤ரூ 26,913 கோடி பள்ளிக்கல்விக்கு ஒதுக்கீடு.
➤பிளஸ் 2, எஸ்எஸ்எல்சி பொதுத்தேர்வுகளில் அதிக மதிப்பெண் பெறும் மாணவர்களின் பெயர்களை விளம்பரப்படுத்தக் கூடாது.
➤பாடத்திட்டத்தில் யோகா சேர்க்கப்பட உள்ளது.
➤சிவில் சர்வீஸ் தேர்வுக்கு மாவட்ட நூலகங்களில் பயிற்சி அளிக்கத் திட்டம்.
➤கட்டாய கல்வி இடஒதுக்கீட்டில் 40 ஆயிரம் பேர் சேர்க்கப்பட்டுள்ளனர்.
இந்நிலையில், இன்று +2 பொதுத் தேர்வு முறையில் பல மாற்றம் கொண்டுவரப்படுகிறது என தகவல் வெளியாகியுள்ளது.
அதன்படி,
➤மாணவர்களின் மன அழுத்தம் குறையும் வகையில் அனைத்து பாடங்களுக்கும் மதிப்பெண் 200-ல் இருந்து 100ஆக குறைப்பு.
➤3 மணியில் இருந்து 2.30 மணியாக தேர்வு நேரமும் குறைக்கப்படும் எனவும் தகவல் வெளியாகியுள்ளது.
➤வகுப்புக்கு ஏற்றவாறு சீருடைகள் மாற்றப்படும் என்றும் தமிழக அரசு அறிவித்துள்ளது.
இந்த மாற்றங்கள் அனைத்தும் பள்ளிகள் தொடங்கும் முன்பே அரசாணையாக வெளியிடப்படும் என்று தமிழக அரசு தகவல் தெரிவித்துள்ளது.

அரசு நிர்ணயம் செய்த கட்டண விபரம்!!

தமிழ்நாடு தொடக்கப் பள்ளி ஆசிரியர் கூட்டணி - திருமருகல்

அரசு நிர்ணயம் செய்த கட்டண விபரம்!!

LKG கட்டணம்                    -  3750
UKG கட்டணம்                    -  3750
 1-ம் வகுப்பு கட்டணம்       -  4550
2-ம் வகுப்பு கட்டணம்       -  4550
3-ம் வகுப்பு கட்டணம்       -  4550
4-ம் வகுப்பு கட்டணம்       -  4550
5-ம் வகுப்பு கட்டணம்       -  4550
6-ம் வகுப்பு கட்டணம்       -  5050
7-ம் வகுப்பு கட்டணம்       -  5050
8-ம் வகுப்பு கட்டணம்       -  5050
9-ம் வகுப்பு கட்டணம்       -  6300
10-ம் வகுப்பு கட்டணம்      -  6300
10-ம் வகுப்பு வரை மேற்படி கல்வி கட்டணத்தை அரசு நிர்ணயம் செய்துள்ளது. மேற்படி கல்வி கட்டணத்தை விட கூடுதல் கட்டணம் கேட்கும் பள்ளி நிர்வாகத்தின் மீது கீழ்க்கண்ட அதிகாரிகளிடம் புகார் அளியுங்கள்:-
மாவட்ட ஆட்சியர்,
பள்ளிகல்வி இயக்குனர்,
மெட்ரிகுலேசன் பள்ளிகள் இயக்குனர்,
மெட்ரிகுலேசன் பள்ளிகள் இணை இயக்குனர்,
மெட்ரிகுலேசன் பள்ளிகள் ஆய்வாளர்,
முதன்மை கல்வி அலுவலர்,
மாவட்ட தொடக்கக் கல்வி அலுவலர்,
மாவட்ட கல்வி அலுவலர்,
உதவி தொடக்கக் கல்வி அலுவலர்
மேற்படி அதிகாரிகளுக்கு புகார் அனுப்புங்கள். புகார் அனுப்பியும் நடவடிக்கை எடுக்கவில்லை என்றால் சென்னை உயர்நீதி மன்றத்தில் வழக்கு தாக்கல் செய்யுங்கள்.
மேலும் குழந்தைகளுக்கான இலவச மற்றும் கட்டாயக் கல்வி உரிமைச் சட்டம் 2009, சட்டப் பிரிவு 12(1)(சி) -ன் கீழ் 2017-2018 ம் கல்வியாண்டில் 25% இட ஒதுக்கீடடின் கீழ் மேற்படி பள்ளியில் 30 மாணவர்களை LKG  யில் சேர்த்துகொள்ள மேற்படி பள்ளியில் அரசு இடம் ஒதுக்கியுள்ளது.

அரசு பள்ளியில் மாணவர்சேர்க்கையை அதிகரிக்க...ஓர் ஆசிரியரின் பயணக்குறிப்பு

தமிழ்நாடு தொடக்கப் பள்ளி ஆசிரியர் கூட்டணி - திருமருகல்

அரசு பள்ளியில் மாணவர்சேர்க்கையை அதிகரிக்க...ஓர் ஆசிரியரின் பயணக்குறிப்பு

முதலில் ஆசிரியர்களாகிய நம்மை தான் சீர்படுத்திக்கொள்ளவேண்டும் இதை படியுங்கள். 

நாளை சமுகத்தின் 
இன்றைய சிற்பிகள் நாம்...
ஆண்டி முதல்
அரசியல்வாதி வரை...
ஆசிரியரால் உருவாக்கப்படுபவர்கள்...
இச்சமூகத்தில்
நல்ல மாற்றங்களை
நம்மால்
ஏற்படுத்த முடியும்...
என்று முதலில்
உங்கள் மீது நல்ல
நம்பிக்கை வையுங்கள்...
2. ஒற்றுமையே உயர்வு
ஊர்கூடி தேர் இழுப்பது போன்றுதான் - உங்கள்
செயல் என்றாலும்...
உங்கள் கருத்துக்களை
மற்றவர்களும் பின்பற்றவேண்டும் - என்று
உடனே உங்கள் கருத்துக்களை
அவர்களிடம் திணிக்காதீர் - இது
உங்கள் நண்பர்களையும்
பகைவர்கள் ஆக்கும்
உறவினராயினும் பின்
உறவ கசக்கும்...
3. முதல் பயணம்...
அப்படி என்றால் தனி ஒரு நபராய்
நான் மட்டும் எப்படி? - என்ற கேள்வி
உங்களை பின்னுக்கு இழுக்கும்..
புறம்தள்ளுங்கள் அதை முதலில்
பின் உங்கள் தன்னம்பிக்கையை மட்டும்
துணைக்கு அழைத்துக்கொண்டு பயணியுங்கள்
உங்கள் காலின் நடைபாதைக்கு மட்டும் வெளிச்சம் கிட்டும்...
அது வேறுஎதுவும் அல்ல
உங்கள் தன்னம்பிக்கை 
4. விளக்கு எரிய...
நல்ல மாற்றங்கள்
நம்மிடம் இருந்து பிறக்கப்போகிறது - என்று
உங்களை நீங்களே அவ்வப்பொழுது
பாரட்டிக்கொள்ளுங்கள்
இந்த சுயபாரட்டு - நம்மை
எத்தனை இடர்பாடுகள் வந்தாலும்
சோர்வடையசெய்யாது...
இது உங்கள் தன்னம்பிக்கை விளக்கிற்கு
வார்க்கும் எண்ணெய்...
5. தடை ஓட்டப் பயணம்..
உங்கள் நெடும்பயணத்தில்
கேலிகள் வேலிபோடும்
இலக்கை அடைவதுதான் நம் நோக்கம்
வேலியை உடைப்பது நம் இலக்கல்ல
கோபம் கொண்டு உடைக்க முற்படாதீர்...
அதில் நம் சக்தியை விறையமாக்க வேண்டாம்
புத்திசாலியாய் தாண்டி செல்லுங்கள்...

6. கழி கிடைக்கும் கண்டிப்பாய்...
உங்கள் விடாமுயற்சிக்கும்
தன்னம்பிக்கைக்கும் சிறிய பரிசு காத்திருக்கும்
அந்த இருட்டு பயனத்தில்
இன்னொரு ஓளி
ஆம் உங்களை போன்றே
உங்கள் முன்னோ பின்னோ
ஒருவர் வந்து கொண்டிருப்பார் - அல்லது
சென்றுகொண்டிருப்பார்...
உங்கள் பயணப்புகழ் பகிராதீர்..
அவரைப்பார்த்து புன்னகை மட்டும் சிந்துங்கள்...
நீங்கள் விழும் நேரத்தில் கழியாய் இருப்பார்...
7. தோள் கொடுத்து தொடருங்கள்
இரண்டு கால்களின் பயணம் நான்காகும்
இரண்டு விளக்குகளின் வெளிச்சம்
உங்கள் பாதையை இன்னும் தெளிவாக்கும்
தோள் கொடுத்து தொடருங்கள்
தோல்வி பயம் பட்டுபோகும்
தற்போது மெல்ல வெற்றி
வெளிச்சம் போட்டுக்காட்டும்
உங்களின் பயணப்பாதையை...
8.உங்கள் வெற்றி இதுவல்ல
இது உங்களின் வெற்றியல்ல
உங்கள் தன்னம்பிக்கயின் வெற்றி
அதிராமல் ஆரவாரமில்லாமல் அமைதியாய்
நீங்கள் வந்த பாதையை
சற்று திரும்பி பாருங்கள்
ஒரு கூட்டமே
ஒளிப்பிழம்பாய் வந்துகொண்டிருக்கும்
இதுதான் உங்களின் வெற்றி...
- இது ஓர் ஆசிரியரின் பயணக்குறிப்பு
அரசு பள்ளியில் மாணவர்சேர்க்கையை அதிகரிக்க... 
1. தற்பொழுது இருக்கும் மாணவர்களை தமிழ், ஆங்கில வாசிப்புதிறனில் சீர்படுத்துங்கள்.
2. மாணவர்கள் தங்கள் முந்திய வகுப்பு வரை எதுவும் தெரிந்துகொண்டு வருவதில்லை என்று குறைகூறாமல் உங்கள் திறமைக்கு அளிக்கப்பட்ட சவாலாய் எடுத்துக்கொண்டு செயல்படுங்கள்...
3. எழுத்தே கூட தெரியாமல் இருப்பார்கள் அவர்களை இனம் கண்டு அவர்களுக்கு அட்டைதாளில் எழுதப்பட்ட எழுத்துக்கள் கொண்டு தினமும் வாய்விட்டு படிக்கசொல்லி பயிற்சி கொடுங்கள்..
4. தினமும் க - வரிசை ங - வரிசை என்று ஒவ்வொரு வரிசையாய்
பழைய தமிழ் செய்திதாள்களை கொடுத்து எழுத்துக்களை வட்டமிட்டு வரச்செய்யுங்கள் இப்பயிற்சி எழுதுக்களின் உருவங்களை அவர்கள் மனதில் நிலைநிறுத்த பயன்படும்.
5. ஒரு சொல்வார்த்தை இரு சொல்வார்த்தை என தினமும் 10 வார்த்தைகள் (சொல்வதை எழுதுதல்) டிக்டேஷன் வைத்து பளு இல்லாமல் வலு சேருங்கள்
6. வாசிப்பில் எழுத்துக்களின் சேர்ப்பை தெளிவான ஒலிநடையுடன் மெதுவாய் கற்பித்து அவர்களின் வாசிப்பிற்கு கருகொடுங்கள்...
7. கருவை வலுப்படுத்த தினமும் நீங்கள் வாசித்து அவர்களையும் வாசிக்கவைத்து ஒழுங்குபடுத்தி வாசிக்க செய்து பயிற்சி கொடுங்கள்...
8. தொலைக்காட்சி செய்திவாசிப்பை மாணவர்களிடம் இதுதான் வாசிப்பு என்று உதாரணப்படுத்துங்கள்.
9. அதுபோன்று வாசிக்கும் மாணவர்களுக்கு மற்ற மாணவர்கள் முன்னிலையில் அவர்களை முன்னிலைப்படுத்தி பாராட்டுகளை பெற்றுக்கொடுங்கள்..
10. பரிசுகளை வழங்குங்கள்.
விதை முளைவிட்டு, துளிர்விட்டு, இலைவிட்டு, நோய்பட்டோ, மீண்டும்துளிர்விட்டோ, இலைவிட்டு, கிளைபடர்ந்து, மலர்மலர்ந்து, காய்விட்டே கனியாகிறது... 
இதே போல தான் மாணவர்கள் உங்களுக்கு எந்தநிலையிலும் எந்தகலவையிலும் உங்கள் வகுப்பிற்குள் வந்து சேர்வார்கள்...
விரக்தியும், விதண்டாவாதத்தையும் விட்டுவிட்டு...
நீர் ஊற்றுவதும், உரமிடுவதும், நோய்வராமல் பாதுகாப்பதும் நம்கடமை என்று எண்ணி பயணத்தை துவக்குங்கள்...
நம் முதல் பயணம் வெற்றிபெற நம்மை நாமே வாழ்த்திக்கொண்டு புறப்படுவோம்..

ஊதியக் குழு ஊதிய மாற்றம்

தொடக்கக்கல்வி செயல்முறைகள்- பள்ளிக்கு ஒன்று வீதம் தூய தமிழ் அகராதி வழங்க இயக்குனர் உத்தரவு